வழக்கமாய் சமையல் வேலைக்கு வருபவரை நிலா இன்று வர வேண்டாம் என்று சொல்லியிருக்க, அலுவலகத்துக்கு கிளம்பாது கிச்சனில் நின்றிருந்தாள். அதைப் பார்த்த கதிரோ, “காலையிலேயே அங்கன என்னத்த பண்ணிட்டிருக்கா?” என்று தனக்குள் கேட்டப்படி உள்ளே வந்தான்.
அவன் வந்தது தெரிந்தும், அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாது, சமையல் வேலையில் மூழ்கியிருக்க, “சமைக்க கூட ஆள் வைக்கலையா நீ?” என்றவனுக்கு கோவம் தான் வந்தது. பின்னே, அவளுக்கு இருக்கும் வேலைக்கு, எப்போது, எங்கு செல்ல வேண்டும் என்று எதுவும் தெரியாது. அப்படி இருக்க, தினமும் அவளே வந்து சமைத்து சாப்பிடுகிறாள் என்பது அவனுக்கு எரிச்சலைக் கூட்டியது.
“நம்ம வேலைய நம்மத்தேன்ன பாத்துக்கனும். எப்பவுமே நம்மள வேற ஒருத்தவக பாத்துப்பாங்கன்னு நினைச்சிடக் கூடாது பாருங்க” என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு கடகடவென்று சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
அவன் சொல்லிய வார்த்தைத்தான், “இங்கனப்பாரு. என்ன பாத்துக்கிடுறதுக்குத்தேன் நீ பொறப்பெடுத்திருக்கீயா? எல்லா நேரமும் ஆறோ ஒருத்தவங்க நம்ம கூடவே இருந்து எல்லாம் பண்ணுவாங்கன்னு நினைக்க கூடாது. அவங்கவுங்க வேலைய அவுங்கவுங்கத்தேன் பாக்கனும். நீ முத கிளம்பு” என்று கத்தியிருந்தான் கதிர்.
அதை நினைத்துப் பார்த்தவனோ, “உப்” என்று காற்றை உள்ளிழுத்து, வெளியிட்டு தன்னை மீட்டவன், “ச் விலகு” என்று அவளிடம் சொல்ல, அவளோ நகர மறுத்தாள். அதில், அவள் இடையோரம் கைக் கொடுத்து, அங்கிருந்த சமையற்கட்டில் தூக்கி அமர்த்தியவன், “எனக்கும் சேத்துத்தேன்ன சமைக்கனும். நானே பண்றேன்” என்றப்படி மிச்ச வேலையை அவன் பார்க்க ஆரம்பித்தான்.
“ச் நானே” என்று அவள் வாயைத் திறக்கும் முன்னே, அருகில் இருந்த கேரட்டை எடுத்து அவள் வாயில் கொடுத்தவன், “ஏதாச்சும் பேசுன, நான் வேற மாதிரி வாய அடைக்க வேண்டிவரும்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அவள் அதிர்ந்து விழித்தாள். அவள் கூரிய விழிகளில், இங்கே கதிரின் மனம் ரகசியமாய் புன்னகைத்துக் கொண்டது.
“க்கும் அப்படியே அடைச்சிட்டாலும்” என்று உதட்டை சுழித்து சத்தம் வராது அவள் சொல்ல, சட்டென்று அவள் பக்கம் திரும்பினான். அதில் அவளோ அமைதியாய் அந்த கேரட்டை சாப்பிட ஆரம்பிக்க, அவனும் அடுத்த சில நிமிடங்களில் கடகடவென்று சமைக்க ஆரம்பித்திருந்தான்.
அவன் சமைப்பான் என்று தெரியும் தான். ஆனால் இப்போது முன்பை விட, அத்தனை நேர்த்தியாய் சமைத்திருக்க, அவளையும் மறந்து, அவனையே விழி விரிக்காது பார்த்திருக்க, “போய் குளிச்சி கிளம்பு” என்று அவளைப் பார்க்காது கூறினான்.
அப்போதே நேரம் ஆவதை உணர்ந்தவள், எதுவும் சொல்லாது குளிக்க சென்று விட, அவள் குளித்து முடித்து வெளியில் வரும் போது, கதிர் அத்தனையையும் செய்து முடித்திருந்தான்.
அத்தனை நேரம் அங்கே நின்றிருந்ததில், அவன் முகத்தில் வியர்வைத் துளிகள் பூத்திருக்க, தலையை துவட்டியப்படி வந்தவள், அவனை நெருங்கி, அவன் முகத்தை துடைத்தாள்.
அவளின் நெருக்கத்தில், இங்கே இவனின் உள்ளம் தடுமாற, அவளோ, “குளிச்சிட்டு வந்து இப்படித்தேன் வந்து நிப்பாகளா?” என்றவள், டைனிங் டேபிளில் அடுக்கி வைத்திருந்த உணவைப் பார்த்தாள்.
இங்கே அவனின் இதயமோ, “ஐயோ இதுக்கு இவ தள்ளி நின்னு முறைச்சிட்டிருந்தாலே தேவல்ல போலையே. மனுஷன படுத்துறா” என்றவனுக்கு இன்னும் வியர்க்க, தன்னையும் மீறி அவள் சேலை முந்தானையை பிடித்து முகம் துடைக்க சென்றான்.
அவனின் செயலில், அவள் தடுக்காது அப்படியே நின்றிருக்க, பின், அதை விட்டு விட்டு அவள் கையில் இருந்த துண்டை வாங்கியவன், “முகம் கழுவிட்டு வரேன். நீ உட்கார்ந்து சாப்பிடு” என்றப்படி அறைக்குள் சென்றான்.
செல்பவனையே பார்த்தவள், தன் முந்தி சேலையைப் பார்க்க, “ச் என்ன மாமா பாரு. எப்படி வேர்க்குதுன்னு. இதுக்குத்தேன் இன்னேரம் வர வேணாம்னு சொன்னேன்” என்று அலுத்தவள், அவன் முகத்தை தன் சேலையால் துடைக்கப் போக, “ச் காலேஜுக்கு போ வேணாமா நீ? நல்ல ட்ரஸ பாலாக்கிட்டிருக்க. போ போயி வேற ட்ரஸ் மாத்து” என்றான்.
“ம் இதுல பாழாக என்ன இருக்கு. எனக்கு பிடிச்ச வாசம்த்தேன்ன” என்றவள் அவனை மேலும் நெருங்கி அவன் கழுத்தில் முகம் புதைத்து ஆழ்ந்து அவன் வேர்வை வாசத்தை நுகர்ந்தாள்.
அவளின் செயலில், “ச் என்னடி பண்ற?” என்று அவன் அலுத்துக் கொள்ள, “நாள் முழுசும் நீங்க என் கூடவே இருக்கிற மாதிரி இருக்கும் மாமா” என்றவள், அவனை அணைத்து விடுவித்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்.
அந்த நினைவில், இப்போது நிலா அப்படியே நின்று விட, அவனோ உடை மாற்றி அங்கு வந்தான். இன்னும் அவள் சாப்பிடாமல் நின்றிருக்க, அவனே அவளுக்கு எடுத்து வைக்க சென்றான். அதற்குள்ளாக, அவளே அவனுக்கும், அவளுக்கும் எடுத்து வைக்க, இருவருமாய் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தனர்.
அவள் வீட்டை பூட்டி விட்டு, அவனைத் தேட, “செரிங்க மேடம். ஆபிஸ்ல பாக்கலாம்” என்றப்படி அவன் நடந்து செல்ல, “ச் எப்படி வருவீங்க?” என்றாள்.
“என் கூட வாங்க” என்றே அவள் அழைத்திருப்பாள் தான். ஆனால் அவன் அதை கேட்க மாட்டான் என்று தெரியும். “மாமாமவ நேத்தே, பைக்க வண்டியில போட்டுவிட சொல்லியிருந்தேன். எப்படியும் இன்னேரம் பசங்க இறக்கிருப்பானுங்க” என்றான்.
“செரி அவுக கொண்டு வர்ற வர, இந்த கார்ல வந்தா ஆகாதா?” என்று அவள் கடுப்பாய் கேட்க, “இன்னும் அபிசியல் லெட்டர் கைக்கு வரல இல்லையா? வரட்டும் நானே அந்த கார்ல கலெக்டர் மேடம் பாதுகாப்புக்கு கூட வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியில் சென்றான்.
“ஆமா, இப்போ இவரு ஐபிஎஸ் பாதுகாப்பு ஆறுக்கு வேணுமாம். பொண்டாட்டின்னு சொல்ல மாட்டாராம். என் கூட வர்றதுக்கு லெட்டர் வரனுமாம். போ மாமா. நீ என் முகி மாமாவே இல்ல” என்று தனக்குள்ளே திட்டிவிட்டு, அவளுடைய காரில் ஏறி அமர்ந்தாள்.
காலையிலையே, அங்கு வீட்டில் வேலைப் பார்ப்பவர்களிடம் மட்டும் அவன் தன் கணவன் என்பதை சொல்லியிருந்தாள். அதனால், அவர்கள் யாரும், எதுவும் கேட்டிருக்கவில்லை. அதுவும் போக சமையல் செய்பவரிடமும், “இனிமே சமைக்கலாம் வர வேண்டாம்க்கா. கொஞ்சம் மதியம் போல வந்து வெஸிஸ்ல் மட்டும் வாஸ் பண்ணிடுங்க” என்றும் கூறியிருந்தாள். ஏனெனில் கதிரை யாரும் தவறாக நினைக்க கூடாது என்பதால் தான், அதை அவள் செய்தாள். உண்மையில் அவனாக சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவனோ அதை சொல்லவே மாட்டேன் என்பது போல் தான் இருந்தான்.
தங்கள் அலுவலகம் மற்றும் டிபார்ட்மெண்டிடம் மட்டும் அவனாக சொல்லாது தான் சொல்ல மாட்டேன் என்ற முடிவில் அவள் இருந்தாள்.
இங்கே அவளின் கார் அவனைக் கடந்து செல்ல, அவனோ தன் மனைவியின் கோவத்தை நினைத்து சிரித்தான். பின்பு சட்டென்று அவன் முகம் இறுகியது. கடந்த கால நினைவுகள் வர அப்படியே சில நொடிகள் நின்று விட்டான்.
மருத்துவமனையில் இருந்த கதிர் உயிர் பிழைத்ததே கடவுள் செயல் என்றாகிப் போயிருக்க, அவன் கண் விழிக்கும் போது நிலா மொத்தமாய் உருகுலைந்துப் போயிருந்தாள். அவளைப் பார்க்கவே அவன் மனம் கனத்தது.
கடைசியாய் அவளின் முகத்தில் தெரிந்த அந்த வெட்கத்தை இப்போது எதிர்பார்க்க, அவளோ, “மாமா” என்று சிறுமியாய் ஓடி வந்து அவன் கையைப் பிடித்தாள். அதில் அவனும் எழுந்தமர முயற்சிக்க, அவனால் கால்லை அசைக்க கூட முடியவில்லை. ஒரு நொடி அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“மாமா” என்றவள் எதுவும் சொல்லாது தேம்பி தேம்பி அழ, அவனோ, “நிலா அழாத எனக்கொன்னுமில்ல” என்றான். ஆனால் அவனுக்கே அவனுடைய உடல் நிலை பற்றி அப்போது தெரிந்திருக்கவில்லை.
தெரிந்த நேரம் அவனுமே மொத்தமாய் உடைந்துத்தான் போனான். அவனால் கால்லை அசைக்க கூட முடியாது என்று மருத்துவர் சொல்லியிருக்க, மற்றவர்களுக்கு அவன் உயிர் பிழைத்ததே போதும் என்ற நிலைத்தான்.
ஆறு மாதம் கழித்து ஆப்ரேசன் ஒன்று செய்துப் பார்க்கலாம். ஆனால் அதுவும் உறுதியாக சொல்லிவிட முடியாது என்று மருத்துவர் சொல்லிவிட, குடும்பம் மொத்தமும் கலங்கித்தான் போனது.
இதற்கிடையில் செந்தில் பாண்டியின் கையை தான் தான் வெட்டியதாகவும், அதுவும் இல்லாது கதிரின் அம்மாவை கொலை செய்தது, நானும் பாண்டியும் தான். அவனின் தூண்டுதலால் தான் என்று உண்மையை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு போயிருந்தார்.
பாண்டியுமே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும், ஜெயிலுக்கு அழைத்து செல்லப் பட்டிருந்தான்.
ஆனால் அதை எல்லாம் யாருமே யோசிக்காத அளவுக்கு, அத்தனைப் பேருடைய பார்வையும் கதிரின் மீதுத்தான் இருந்தது. தாமரையால், கதிரின் முகத்தை பார்க்க கூட முடியவில்லை. கிட்ட தட்ட ஒரு மாதம் கதிர் மருத்துவமனையில் தான் இருந்தான்.
முற்றும் முழுதாய் நிலா ஒருவள் தான் அவனைப் பார்த்துக் கொண்டாள். எப்போதுமே அவள் கண்ணில் தெரியும் அதே காதல். சிறிதும் மாற்றமின்றி அப்படியேத்தான் இருந்தது. அதன் பின் வீட்டுக்கு அழைத்து வந்த முதல் மூனு மாசம், நிலாவின் அன்பில் உருகித்தான் போனான். அவன் வாய் விட்டு கேட்கும் முன்னே, அவனுக்கானதை பார்த்து பார்த்து செய்தாள்.
ஆனால் அடுத்தடுத்த மாதங்களில், கதிரின் காதுப்படவே “இப்புடி இவனுக்கு சேவகம் பண்ணியே இவ காலம் போயிடும் போல” என்று பேச ஆரம்பித்திருக்க, நிலாவுக்கு சிவில் எக்ஸாம் எழுத வேண்டிய சூழ்நிலை. அவள் முதலில் மறுக்க, அவன் தான் எழுத கட்டாயப்படுத்தினான். ஆனால் அவளின் கவனம் மொத்தமும் இவனின் மீதிருக்க, அவன் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.
ஆனால் அங்கே அவளோ, அவள் கனவை மொத்தமாய் மறந்து விட்டு அவனே கதி என்று இருக்க, ஏனோ முதல் மாதல் அதெல்லாம் காதலாய் தெரிந்தது. இப்போது முட்டாள்தனமாய் தெரிந்தது. அவனும் அவளிடம் தன்மையாய் சொல்லிப் பார்க்க, அவளோ பிடிவாதமாய், “எனக்கு நீங்கத்தேன் வேணும். எனக்கு இதுத்தேன் சந்தோஷம்” என்று சொல்லிவிட்டாள்.
இதற்கிடையில், கோவிலுக்கு செல்வியுடன் சென்ற நிலாவிடம் பிரியா வேறு, “என்னமோ அன்னிக்கு என்னென்னவோ சொன்ன? இப்போ என்னாச்சு அடுத்தவக வாழ்க்கைய பறிக்கனும்னு நினைச்சல்ல, அதேன் உன் வாழ்க்கைய மொத்தமா பறிச்சிட்டான்” என்று சீண்டி பேசியதோடு, இன்னும் கூட சில வார்த்தைகளால், அவளை மொத்தமாய் காயப்படுத்தியிருந்தாள்.
திருவிழா அன்றே, அவள் தோழியின் மூலம் வேண்டுமென்றே, நிலாவுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பதையும், கதிருக்குத்தான் ஏதோ குறை என்பது போல் பேச வைத்து அதற்கு நிலா, பிரியாவுடன் சண்டைப் போட்டிருக்க, அவளோ அசராது, “இன்னேரம் என்ன கல்யாணம் பண்ணிருந்தா, ஒன்னுக்கு ரெண்டா பெத்துக் கொடுத்திருப்பேன். ஆனா உன்ன கல்யாணம் பண்ணதாலத்தான் அவரோட வாழ்க்க போச்சு. இன்னும் உன்ன என்னமோ கலெக்டர் ஆக்க போறாராம். நீ படிச்சு கலெக்டராகிடுவ. ஆனா இன்னும் மூனு நாலு வருஷத்துக்கு, அவரு இந்த ஊருலத்தேன்ன திரியனும். அம்புட்டு பேரும் பொண்டாட்டிய வச்சி வாழத் தெரியாதவன்னு அவரைத்தான் பேசுவாங்க” என்று கூறியிருந்தாள்.
அதில் நிலாவோ, முதலில் கதிருடன் வாழ வேண்டும் என்று நினைத்திருக்க, அவளுடைய அந்த ஆசையை அப்படியே சிதைப்பது போல் அடுத்தடுத்து எல்லாம் நடந்திருந்தது.
இப்போது கோவில் சென்று வந்த நிலா ஒரு முடிவை எடுத்தப்படி கதிரிடம் வந்தாள். அவனோ, ஏற்கனவே இவளை எப்படி மீண்டும் படிக்க வைப்பது என்று யோசித்திருக்க, நிலாவின் பேச்சைக் கேட்டு அவனுக்கு கோவம் கூடியது.
“கிறுக்குப் பிடிச்சிருக்கா உனக்கு? படுக்கையிலத்தான்ன கெடக்கேன். இன்னும் செத்துப் போகலையே” என்று கோவமாய் அவன் கேட்க, அவனின் வார்த்தையில், “மாமா” என்று பதறித் துடித்தாள்.
“உமக்கு இப்போ என்ன வயசாகிடுச்சின்னு, நீ இந்த முடிவ எடுத்துட்டு வந்து என் முன்ன நிக்குற. உம்ம இதுக்குத்தேன் படிக்க வச்சேன்னா?” என்று கோவமாய் அவன் எழ முயற்சிக்க, அது முடியாதுப் போக அவனுடைய இயலாமை இன்னும் இன்னும் கோவப்படுத்தியது.
அதில் அவளோ, “எனக்கு குழந்த வேணும்” என்று அழுகையோடு சிறுமியாய் அவள் சொல்ல, “அடிச்சேன்னா வை. என் கண்ணு முன்னாடி வராத. போயிடு” என்று ஏறக்குறைய கத்தினான் கதிர்.
அவனின் கத்தலில் செந்தில் அங்கு வர, அவளோ, “சித்தி அவுகளுக்கு நீங்களாச்சும் சொல்லுங்க” என்றாள். அதில் செல்வியோ, “நீ கீழ போ” என்று சொல்ல, அவளும் கீழே சென்றாள்.
அதன் பின் செல்வித்தான் பிரியா பேசியதையும் நடந்தவற்றையும் கூறினார். அதைக் கேட்ட கதிருக்கோ அப்படி ஒரு ஆத்திரம். அவனுக்கு கால் மட்டும் நன்றாக இருந்திருந்தால் இன்னேரம் பேசியவர்கள் அனைவரையும் வெட்டி வீசியிருப்பான். அதன் பின் வந்த நிலாவைப் பார்க்க அவனுக்கு பாவமாய் இருந்தது. கை நீட்டி அவளை அழைக்க, கோழிக்குஞ்சாய் அவன் மார்பில் சென்று பதுங்கினாள்.
அவளை மெல்லமாய் அணைத்துக் கொண்டவன், “ஆறோ என்னமோ சொன்னாங்கன்றதுக்காக, நீ, இவ்ளோ பெரிய முடிவ எடுப்பீயா? பொண்ணுன்னா குழந்த பெத்தே ஆகனுமா? அதுவும் போக, அப்படி ஒரு புள்ளைய பெத்துத்தான் நான் ஆம்பிளன்னு இந்த ஊரு காரங்களுக்கு காட்டனுமா?” என்று சிறு கோவமாய் கேட்டான்.
அதில் அவளோ அவன் மார்பில் புதைந்து தேம்பி தேம்பி எழ, “இங்குட்டுப் பாரு நிலா. எனக்கு எதுத் தெரியுமா சந்தோஷம். நீ கலெக்டர் ஆவுறதுத்தேன். நீ அத மட்டும் பாரு” என்றான்.
ஏனோ அவளுக்கு அந்த ஆசையே மறந்துத்தான் போயிருந்தது. அவன் சொல்லிய எதுவும் அவள் காதில் ஏறாமல் போக, அவளோ ஒரு கட்டத்தில், “எனக்கு குழந்தையும் வேணாம். எதுவும் வேணாம். காலம் முழுசும் உங்க கூடவே இருக்கேன்னே மாமா” என்றாள்.
ஏனெனில் இன்று அவளை சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் பேசிய பேச்சு அவளை அந்த முடிவை எடுக்க வைத்திருந்தது. அவள் படிப்புக்காக சென்று விட்டால், கதிரை யார் பார்த்துக் கொள்வார்கள்? அதுவும் போக, இவனுக்கு இப்படி ஆனதால், மனைவியும் விட்டு சென்று விட்டால் என்று அவனை இன்னும் அவமானப்படுத்துவார்கள் என்று ஏதேதோ பாட்டி அவளிடம் புலம்பியிருக்க, ஏனோ அவளால், கதிரை விட்டு செல்வதைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.
ஆனால் கதிருக்கோ, அவளை எப்படியாவது படிக்க அனுப்பியே ஆக வேண்டிய கட்டாயம். அதனால் தான், அவளுடைய கெஞ்சல், கண்ணீர் இப்படி எதையும் பொருட்படுத்தாது. ஏதேதோ கடுஞ்சொற்களை அவள் மீது வீசி, அவள் மீது வெறுப்பைக் கொட்டி, அவள் தன்னுடன் இருந்தால், தான் உயிருடன் கூட இருக்க மாட்டேன் என்பது போல் எல்லாம் பேசி அவளை மொத்தமாய் சிதைத்திருந்தான். கடைசியாக, அவள் படித்து கலெக்டர் ஆனால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சையும் எடுத்துக் கொள்வேன். அதுவும் அவள் தன் கண் முன்ணே இருக்கவே கூடாது. அவனைப் பார்க்க அவள் எப்போதும் வரக் கூடாது. அவளின் கவனம் அவள் கனவில் மட்டுமே இருக்க வேண்டும் என்று சத்தியத்தையும் பெற்றுக் கொண்டான். அவள் அந்த வீட்டை செல்லும் போது, சிறிதாய் கூட இளக்கம் காட்டாது. அவள் கண்ணீரை மொத்தமாய் அலட்சியம் செய்தவன், அவளை திரும்பி கூட பார்க்கவில்லை. அதன் பின்னான நாட்கள் நிலாவுக்கும், கதிருக்கும் அத்தனை சுலபமாய் இருக்கவில்லை.
அவன் தன்னை மீட்டுக் கொள்வதில் முற்றும் முழுதாய் இறங்கியிருக்க, அவன் சரியானப் பிறகும் அவனிடம் நிலாவை அவன் நெருங்கவிடவில்லை.
அவன் கால் சரியானதை அறிந்து அவள் ட்ரெய்னிங்கில் இருந்து வர நினைக்க, அவனோ, “அவ இங்க வர கூடாது. வந்தா நான் இங்க இருக்க மாட்டேன்” என்று உறுதியாய் மறுத்துவிட்டான்.
அதன் பின் கதிர் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கு எல்லாம் சரியாகியிருக்க, மீண்டும் அவனை ட்ரெய்னிங் எடுத்துக்க சொல்லி ஆர்டர் வந்தது. அவன் முதலில் வேண்டாம் என்று நினைக்க அதன் பின் சில பல காரணங்களால், அவனும் சம்மதித்தான். அவள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, இவன் இன்னொரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, இவர்கள் இருவருக்கான வாழ்க்கைத்தான் தீர்வு தெரியாது எங்கோ ஒதுங்கிப் போய் கிடந்தது.
கனவை நிறைவேத்துகிறேன் என்று, அவள் காதலை மொத்தமாய் அவன் காயப்படுத்தியிருக்க, இப்போது அவள் காயத்தையும் சரி செய்து, பின் அவன் இங்கு வந்ததுக்கான வேலையையும் முடிக்க வேண்டும். இதை எல்லாம் நினைக்கும் போதே அவனுக்கு ஐயோடா என்றிருந்தது. வேலையைப் பற்றி எல்லாம் அவனுக்கு கவலை இல்லை. ஆனால் அவனின் அக்கா மவளை, இங்கிருந்து பத்திரமாய் அவன் வீட்டுக்கு தூக்கி செல்வது தான் மலையாய் தெரிந்தது.
“யப்பா முருகா. நீத்தேன் எனக்கு அத்தன பலத்த கொடுக்கனும்” என்று வேண்டிக் கொண்டவன் ஒரு ஆட்டோவை பிடித்து பைக்கை எடுத்து வர சென்றான்.
இங்கே அலுவலகத்து வந்த நிலாவோ ஜன்னல் வழியே வெளியில் பார்ப்பதும், பின் தன் முன்னே இருந்த ஆர்டரைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
(க்கும். இப்போ இதுல நான் யாரு மேல தப்பு சொல்ல? செரி அடுத்து என்னத்தேன் ஆகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
gayathri Shini
Super sister