வரம் – 53

லிப்டை விட்டு வெளியில் ஓடியவளைப் பார்த்து அர்ஜூன், “உனக்கு என் கூட இங்க இருக்கிறது அவ்வளவு பிடிச்சிருக்கா?” என்ற்று கேட்டான். அவனின் கேள்வியில் மீண்டும் சென்ற வேகத்தில் அவன் முன் வந்து நின்றாள்.

அதில் அவன் அவளைப் பார்க்க, அவளோ, அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்கள் பிளாட்டிற்குள் வந்தாள்.

அவனோ, “பதில் சொல்லு பூஜா” என்று அழுத்தி சொல்ல, “எனக்கு ஹாஸ்டல் எல்லாம் செட் ஆகல சார். காலேஜ் விட்டா ஹாஸ்டல். ஹாஸ்டல் விட்டா காலேஜ்ன்னு செம்ம போர் தெரியுமா? இப்போ பாருங்க. மாதவ் அண்ணா கூட சேர்ந்து சூடா டீ குடிச்சிட்டு, மசால் வட சாப்பிடலாம். ஹோட்டலுக்கு போகனும்னா வெளிய போலாம். படம் பாக்கனும்னா டிவியில பாக்கலாம். குறிப்பா. ஹாஸ்டல் சாப்பாடு எல்லாம் வாய்லையே வைக்க முடியாது. இங்கப் பாருங்க. நீங்க சூப்பரா சமைச்சிக் கொடுக்கிறீங்க. அப்புறம்” என்று அவள் சொல்லப் போக, “போதும்” என்று கடுப்பாய் கூறினான் அர்ஜூன்.

அவன் முகத்தில் ஒரு வித ஏமாற்றமும், கடுப்பும் சேர்ந்தேத்தான் வந்தது. அதைப் பார்த்தவளோ, “காண்டாகுதா வாத்தி. நல்லா காண்டாகட்டும். என்ன ஹாஸ்டல்ல கொண்டு போய் விட பிளான் பண்ணீங்கத்தான?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“இல்ல சார். இன்னும் கூட” என்று அவள் மேலும் சொல்ல வர, “ச் ஒன்னும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை “டொப்” என்று சாத்தினான்.

“ப்பா. என்னா சவுண்டு? அச்சோ என் அஜ்ஜு பேபி. பிடிக்காமலா, இப்படி நீங்க துரத்தியும், இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கேன். கேட்கிற கேள்விய பாரு. ஏன் பிடிச்சிருக்கா? பிடிக்கலையான்னு பார்த்து இருக்கிறதுக்கு, இது என்ன ஹாஸ்டல்லா? என் புகுந்த வீடு. பொண்டாட்டிக்கு வீடு பிடிக்கலன்னு சொன்னாக் கூட, வீட்டத்தான் மாத்தனும். பொண்டாட்டிய இல்ல. சரியான மக்கு வாத்தி” என்று பூட்டிய கதவை பார்த்து முனுமுனுத்துவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்.

இங்கே கடுப்பாய் உடை மாற்றியவனோ, “ச் அந்த மாதவ்க்கு இன்னிக்கு இருக்கு. மசால் வட சாப்பிட கூப்டு போயிருக்கான்” என்றவனுக்கு அத்தனை எரிச்சல்.

“ஏன் அர்ஜூன் இவ்ளோ கோவம்? உன்னை விட்டுட்டு போயிட்டாங்கன்னு கடுப்பா? இல்ல உன் பொண்டாட்டிக்கு, உன்னை விட அந்த மசால் விட பிடிச்சிருக்குன்ற பொறாமையா?” என்று மனசாட்சி நக்கலாய் கேட்டது.

“ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவள நான் கொண்டு போய் ஹாஸ்டல்லத்தான் சேர்க்கப் போறேன்” என்று தனக்குள் சொல்லிவிட்டு வெளியில் வந்தான்.

அவள் இன்னும் வந்திருக்கவில்லை. “ரூம்ம பூட்டிட்டு அப்படி என்னத்தான் பண்ணுவாளோ?” என்றவனுக்கு ஏனோ அவளை பாத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருந்தது.

அதனாலையே சோபாவில் அமர்ந்து விட்டான். இங்கே இரவு உடையை மாற்றி விட்டு, ஏதோ ஒரு பாட்டை முனுமுனுத்தப்படி, வெளியில் வந்தாள் பூஜா.

அவனை அங்கே எதிர்பார்க்காதவள், ஒரு நொடி தன் நடனத்தை நிறுத்திவிட்டு, “என்ன? சாரு இந்த டைம்ல இங்க உட்கார்ந்திருக்காரு” என்று யோசித்தப்படி, அவளறைக்கு செல்ல முயன்றாள்.

“ரிபிரஸ் ஆகிட்டன்னா, போயி உன் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா” என்றான் அர்ஜூன்.

“என்னது?” என்று இவள் அதிர்ச்சியாகி திரும்ப, “என்ன? செமஸ்டர் ஆரம்பிக்கப் போதுன்னு தெரியும்த்தான? படிக்க வேண்டாமா?” என்று கேட்டான்.

“இப்பவா?” என்று அவள் அப்பாவியாய் கேட்க, “டீ எல்லாம் குடிச்சிட்டுத்தான வந்திருக்க. போ. போயி எடுத்துட்டு வா” என்று அவன் சொல்லவும். “ஐயோ கடவுளே! இப்படி ஒரு வாத்திக்கிட்ட வந்து மாட்டி விட்டுட்டீயே” என்று புலம்பியப்படி எடுத்து வந்தாள்.

“ஆமா எல்லாரும் அவங்க போசன்ஸ் முடிச்சிட்டாங்களா? இல்ல பெண்டிங் எதுவும் இருக்கா?” என்று கேட்டப்படி அவன் அவள் புக்கை வாங்க, “அத அவங்க கிட்டத்தான கேட்கனும்” என்று முனுமுனுத்தாள்.

“என்ன? உன்கிட்டத்தான கேட்கிறேன்” என்று அவன் கேட்கவும், “ஆ..ங் சார்” என்றாள்.

“சரி நீ எதுவரைக்கும் படிச்சிருக்க?” என்று அவன் அவளிடமே கேட்க, இப்போது இவளோ, “சார் நைட்க்கு டின்னர் பண்ணனும்த்தான?” என்றாள்.

அவளை முறைத்தவன், “அத பத்தி உனக்கு என்ன யோசன? ஒழுங்கா உட்கார்ந்து படி” என்றான். அதில் வேகமாய் அவனின் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கையைப் பிடித்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் பூஜா.

“என்னப் பண்ற நீ?” என்று அவன் கேட்க, “ரொம்ப டயர்டா இருக்கு சார்” என்று சிறுபிள்ளையாய் சினுங்கினாள்.

“அப்படி டயர்டாகுற அளவுக்கு மேடம் இன்னிக்கு என்னப் பண்ணீங்க?” என்று அவன் கேட்க, “இவ்ளோ ட்ராபிக்ல காலேஜ் போயிட்டு வர்றதே டயர்ட் தான் சார்” என்றாள்.

“அப்போ காலேஜ் ஹாஸ்டல்ல சேர்த்து விடட்டா?” என்று அசராது அவன் கேட்க, பட்டென்று அவனை விட்டு விலகிக் கொண்டவள், “ச் நான் உங்கள அப்படி என்ன சார் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்? என்னை ஏன் துரத்தனும்னே நினைக்கிறீங்க?” என்று மூக்கு நுனி சிவக்க கோவமாய் கேட்டாள்.

அதில் இப்போது அவள் மூக்கை மெல்லமாய் கடித்துப் பார்க்க ஆசைப்பட்ட மனதை இழுத்துப் பிடித்தவன், “சரி. உன்ன நான் ஹாஸ்டல்ல கொண்டு போய் விடல. பட் ஒரு கண்டிஷன்” என்றான்.

“என்ன?” என்று அவள் கேட்க, “இந்த செமஸ்டர்ல, நீ எயிட்டி பர்ஷண்டேஜ்க்கு மேல ஸ்கோர் பண்ணனும்” என்றான்.

“அவ்வளவுத்தான சார். இதெல்லாம் சப்ப மேட்டரு. சால்ட் வாட்டரு” என்றாள். “வாட்?” என்று அவன் கேட்க, “ஆ.ங் இதெல்லாம் ஸ்டூடண்ட் டாக் சார். அத விடுங்க. எயிட்டி பர்ஷண்டேஜ் என்ன? நைண்டி பர்ஷண்டேஜ் வாங்கி காட்டுறேன்” என்றாள்.

அவளுடைய அந்த கான்பிடண்டைப் பார்த்து அர்ஜூனுக்குத்தான் அத்தனை அதிர்ச்சி. அவள் யுஜியில் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிறாள் தான். ஆனால் இங்கு வந்ததில் இருந்து அவள் எந்த கிளாஸ் டெஸ்டும் ஒழுங்காய் செய்திருக்கவில்லை. அவளுக்கு கிளாஸ் எடுப்பவர்களில், பாதி பேருக்கு மேல், அவளை திட்டிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். அப்படி இருக்க, இவளோ வெகு சாதாரணமாய் சொல்ல, “சும்மா பேச்சுக்குலாம் சொல்லல பூஜா” என்றான்.

“ஐயோ சார்! நானும் சும்மாலாம் சொல்லல. அப்படி நான் எடுத்துட்டா, அதுக்கப்புறம் என்ன ஹாஸ்டல்ல கொண்டு போய் விடவே கூடாது” என்றாள்.

“சரி” என்று அவனும் சொல்ல, “தேங்க்யூ சார்” என்று சொல்லியவள், வேகமாய் அவனைக் கட்டிக் கொண்டாள்.

அவள் என்னவோ வெகு இயல்பாய் செய்துவிட, இங்கே அர்ஜூனுக்குத்தான் என்னென்னமோ செய்தது. மெல்ல அவளை விலக்க நினைக்க, “சார். நான் ஒன்னு கேட்கட்டா?” என்று அவனை விட்டு விலக மறுத்தப்படியே கேட்டாள்.

“என்ன?” என்று அவன் கேட்க, அவன் தோள்வளைவில் தாடையைப் பதித்து நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “இப்படியே இருப்பீங்கத்தான?” என்று கேட்டாள்.

அவள் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்றில், இப்போது அர்ஜூனுடைய இதயம் என்னவோ செய்தது.

“இப்படியேன்னா?” என்றவனுக்கு வார்த்தை தொண்டைக்குழியை விட்டு வர சற்று தடுமாறியது.

“அதான், ஸ்வீட்டா, இப்படி கியூட்டா” என்றவள் அவன் தாடிக்குள் விரல் நுழைத்து அவனை மேலும் நெருங்கினாள். இருவருக்கும் உண்டான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய. பெண் வாசனையே அறியாதவன், இப்போது அவளுடைய சோப்பு வாசனையை ஆழ்ந்து சுவாசித்தான்.

அப்போதுத்தான் அவள் முகம் கழுவிவிட்டு வந்திருக்க, காலையில் அடித்த பர்பியூம் வாசத்தோடு சேர்த்து வந்த அவளுக்கே உண்டான அந்த நறுமணம், நிச்சயம் அவனை தடுமாற வைத்தது.

இருவர் இதழுக்கும், நூலிடை இடைவெளி மட்டுமே இருக்க, அவளோ, “காலேஜ்லத்தான் சிரிக்க மாட்றீங்க. வீட்டுல கொஞ்சமா சிரிக்கலாம்த்தான” என்றப்படி இரு விரலால் அவன் உதட்டைப் பிரித்தாள்.

அதில் நிகழ்வுக்கு வந்தவன். “பூஜா” என்று விலக்கப் பார்க்க, அவளோ, “சிரிச்சா அழகா இருப்பீங்க சார்.” என்று அவன் கன்னத்தில் ஒரு விரலால் குத்தினாள்.

அவளின் செயலில் இப்போது அவனுக்கே சிறு புன்னகை எட்டிப் பார்க்க, “இப்படி குத்துனா சிரிச்சிடுவாங்களா?” என்றான்.

“ம் ஆமா. நான்லாம் சிரிப்பேன்னே” என்றாள். “அப்படியா?” என்று அவன் கேட்க, “ம் வேனும்னா நீங்க பண்ணுங்க. நான் சிரிக்கிறேன்” என்றாள்.

என்ன நினைத்தானோ, அவளுடைய அந்த குண்டு கன்னங்களைப் பார்த்தவனுக்கு, அதை விரலால் தொட்டுப் பார்க்க ஆசை எழ, அவனும் ஒரு விரலால், அவள் கன்னத்தை மெதுவாய் குத்தினான்.

அவள் கன்னத்தின் மென்மையில், அவனின் விரல் ஏதோ பஞ்சு பொதிக்குள் செல்வது போல் புகுந்துக் கொள்ள, சட்டென்று, அவளின் மறு கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். அதில் அவனின் மீசை முடி, அவள் கன்னத்துக்குள் புகுந்து கிச்சு கிச்சு மூட்டியிருக்க “அஜ்ஜு” என்றவளின் வார்த்தை தொண்டைக்குள் புதைந்துத்தான் போனது.

பின்னே அவள் பேசினால் தான். இவன் என்னவோ தேச குற்றம் செய்தது போல். வேகமாய் விலகுவான்னே. எத்தனையோ முறை அவள் முத்தமிட்டிருக்கிறாள் தான். ஆனால் முதன் முறை அர்ஜூன் ஒரு முத்தத்தை ஒருவருக்கு கொடுத்திருக்கிறான். ஏதோ குழந்தைக்கு கொடுப்பது போல் அத்தனை இதமாய்.

அவனுக்கும் கூட அப்படித்தான் தோண்றியதோ என்னவோ? சில நொடிகளுக்குப் பின்னே மெல்ல விலகினான். “அர்ஜூன்.” என்று மனசாட்சி குரல் கேட்க, வேகமாய் விலக நினைத்து அவன் பின் வாங்க, அதற்குள் அவன் சட்டையைப் பிடித்து, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் பூஜா.

“பூஜா” என்று அவன் சொல்லும் முன்னே, “எங்கப்பா கூட இப்படித்தான் சார் கியூட்டா கிஸ் கொடுப்பாரு” என்றாள். அதில் அவனின் பதட்டம் தணிந்திருக்க, இப்போது இவனோ மெல்ல அவள் தலையை கோதிக் கொடுத்தான்.

இதுக்கூட அவள் அவனுக்கு கற்றுக் கொடுத்தது தான். இப்போது இன்னும் வாகாய் அவனை கட்டிக் கொண்டவள், மனதினுள், “பட்டாம்பூச்சிய பறக்க வைக்கிற முத்தம் எல்லாம் உங்களால மட்டும் தான் சார் கொடுக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டாள்.

சில பல நொடிகள். அந்த நொடிகள். ஒரு வித அமைதியாகவும், அழகாகவும் கழிய. அதை கலைக்கவென்றே ஹாலிங் பெல் சத்தம் கேட்டது.

அதில், இருவரின் மோன நிலையும் கலைந்திருக்க, பூஜா மெல்ல அவனை விட்டு விலகினாள். இப்போது எரிச்சலானது என்னவோ அர்ஜூன் தான். ஆம் அவளுடைய அணைப்பில், இதத்தை அனுபவித்துக் கொண்டிருந்தானே. அது சட்டென்று செல்லவும், ஒரு வித எரிச்சல் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.

இங்கே பூஜாவோ, “நல்ல வேள, அப்பா, அம்மான்னு ஏதோ சொல்லி சமாளிச்சிட்ட. இல்லன்னா இப்பவே கொண்டு போயி ஹாஸ்டல்ல விட்டாலும் விட்டுடுவாரு” என்று சொல்லியப்படி எழுந்தாள்.

மீண்டும் ஹாலிங் பெல் சத்தம் கேட்க, “ச்” என்றப்படி சென்று அர்ஜூன் கதவைத் திறந்தான். அங்கே மாதவ் தான் க்ளோஸ் அப் பேஸ்ட் விளம்பரத்துக்கு வருவது போல் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்தது, அத்தனை எரிச்சலாய், “எதுக்குடா இங்க வந்த?” என்றான். “உன்ன ஒன்னும் பாக்க வரல. நான் என் தங்கச்சிய பாக்க வந்தேன். பூஜா” என்று அவனை விலக்கிவிட்டு உள்ளே செல்லப் பார்க்க, “ச் உன்ன அன்னிக்கே நான் என்ன சொன்ணேன். என் பிளாட்டுக்கு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்னா இல்லையா?” என்று கோவமாய் கேட்டான்.

“பாருடா. உனக்காகத்தான். பார்மல் பேண்ட். பார்மல் ஷர்ட் போட்டுட்டு வந்திருக்கேன். விலகு” என்றவன் அர்ஜூனை தள்ளிக் கொண்டு உள்ளே வர, அதில் பல்லைக் கடித்தவனோ, “இப்போ எதுக்கு வந்த?” என்றான்.

“வாங்கண்ணா” என்று பூஜா சொல்ல, “குலோப்ஜாமுன் உனக்கு பிடிக்கும்னு சொன்னத்தான. அதான் கொண்டு வந்தேன்” என்று அவளிடம் நீட்டினான்.

“ஐ குலோப்ஜாமுன்” என்று இவள் வேகமாய் சென்று வாங்க, “சாப்பிடுற நேரத்துல இத எதுக்கு கொண்டு வந்த” என்று எரிச்சலாய் கேட்டான் அர்ஜூன்.

“ம் சாப்பிடுறதுக்குத்தான்” என்று மாதவ் சொல்ல, ஏதோ திட்ட வந்தான். அதற்குள்ளாக, ஒரு குலோப்ஜாமுனை எடுத்து சாப்பிட்டவள், “வாவ் சூப்பரா இருக்கு. சார். சாப்டு பாருங்களேன்” என்றப்படி வேகமாய் அர்ஜூனுக்கும் ஊட்டி விட்டாள்.

ஏனோ அவள் ஊட்டவும், இவன் மெய்மறந்து நின்றிருக்க, அதைப் பார்த்த மாதவ்வோ, “மச்சான் தங்கச்சிட்ட சீக்கிரமே கவுந்துருவான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

(யாரு இவனா? எனக்கு என்னமோ நம்பிக்க இல்ல. சரி பாக்கலாம். அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பார்த்து தெரிஞ்சிப்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   8

*** வரம் – 53 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***