வரம் – 52

மாதவ், பூஜாவை காலேஜிலேயே வந்து இறக்கி விட்டிருக்க, “தங்கள் சேவைக்கு மிக்க நன்றி தெய்வமே” என்று கூறினாள்.

அதில் அவனோ, “நன்றி எல்லாம் வேணாம். உன் புருஷன் கிட்ட சொல்லி. கொஞ்சம் என்ன அடிக்காம பாத்துக்கோ” என்ற மாதவ்-ம், அவளுடன் சேர்ந்து நடந்து உள்ளே வந்தான்.

அதைக் கேட்டு சிரித்தவளோ, “சின்னதா ஒரு லிப்ட் கொடுத்துட்டு, இவ்ளோ பெரிய வேல பாக்க சொல்றீங்க?” என்றாள்.

“சரி விடு பெருசா கூட, உனக்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறேன்” என்று அவனும் அவளுக்கு சரிக்கு சரி பேசியப்படி வர, “ஐயோ அண்ணா!” என்று அப்படியே நின்றாள் பூஜா.

“என்னாச்சு?” என்று அவனும் அவளைப் பார்க்க, “இல்லண்ணா, என் கூட சேர்ந்து வறீங்க” என்றாள்.

“ஏன் வந்தா என்ன?” என்று இவன் குழப்பமாய் கேட்க, “இல்ல. நீங்க ஒரு புரோபசர். இப்படி, நீங்களும், நானும் சேர்ந்து வந்தா, மத்தவங்க என்ன நினைப்பாங்க?” என்றாள் பூஜா.

“இதுல நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? நீ என்னோட தங்கச்சி. புரோபசர்னா தங்கச்சி இருக்க கூடாதா என்ன?” என்று இவனும் கேட்டான்.

“அப்போ ரிலேசன்னு காமிக்கிறதுல தப்பு இல்லையா அண்ணா. இதுனால, நீங்க எனக்கு பேவர் பண்றீங்கன்னு சொல்லிட்டா?” என்று கேட்டாள் பூஜா.

“சொன்னா சொல்லிட்டு போறானுங்க. இவனுங்க பேசுறத எல்லாம் கேட்டுட்டு இருந்தா, நம்ம வாழ முடியாது. உனக்கு எப்போ, என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளு. நான் இருக்கேன். அந்த அர்ஜூன்னே ஏதாச்சும் பிரச்சன பண்ணாக் கூட, அண்ணன் நான் இருக்கேன்” என்றான் மாதவ்.

“கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் தேவைத்தான் அண்ணா. பாய்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் கிளாஸுக்கு ஓடியிருந்தாள்.

அவளின் செயலில், “என்னாச்சு இவளுக்கு? இப்போ எதுக்கு பேய பார்த்த மாதிரி ஓடுறா?” என்று நினைத்தப்படி அவன் திரும்ப, அங்கே அத்தனை கோவத்தில் அர்ஜூன் நின்றிருந்தான்.

“ஐயோ இவென் எப்போ வந்தான்?” என்று மாதவ் அதிர்ந்து நிற்க, அர்ஜூனோ, கொலை வெறியில், “அவளுக்குத்தான் அறிவு இல்லன்னா, உனக்கு அறிவு வேண்டாம்” என்று கோவமாய் கேட்டான்.

ஏனெனில். மாதவ்-ம், பூஜாவும் சேர்ந்து நடக்கும் போதே அர்ஜூனும் அவர்களுக்கு பின்னேத்தான் வந்தான். அதைக் கவனித்துத்தான் பூஜா, மாதவ்விடம் சிலவற்றை கேட்டதே. அதற்கு மாதவ் வேறு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் பதில் சொல்லியிருக்க, அர்ஜூன் அவனை அத்தனை முறைத்தான்.

“இப்போ எதுக்கு என்ன திட்டுற?” என்று அவன் அப்பாவியாய் கேட்க, “இங்க நீ ஒரு ப்ரோபசர். அவ ஸ்டூடண்ட். அந்த லிமிட்ல மட்டும் இரு. தேவையில்லாம உன் பாசமலர் சீன் எல்லாம் இங்க வேண்டாம்” என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

“இவன்லாம் உண்மையாவே மனுஷன் தானா? கட்டுன பொண்டாட்டிய இவன் தான் ஸ்டூடண்ட்ன்னு பாக்குறான்னா, நானும் தங்கச்சியா பாக்க கூடாதாம்” என்று முனுமுனுத்தப்படி ஸ்டாப் ரூமிற்குள் சென்றாள்.

இங்கே சிரித்தப்படி கிளாஸிற்குள் ஓடி வந்த பூஜாவோ, பிரியாவைக் கட்டிப் பிடித்து. “குட் மார்னிங்” என்றாள்.

“என்ன மேடம்? இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல?” என்று விஷ்வா கேட்க, “பூஜா எப்பவுமே ஹாப்பியாத்தான் இருப்பா” என்று இல்லாத காலரை தூக்கிக் காட்டினாள்.

அதற்குள் பிரதன்யாவோ, “ஆமா, ஆமா அவ ஹாப்பியாத்தான் இருப்பா. ஆனா அவ கூட இருக்கிறவங்கத்தான், கஷ்டப்படனும்” என்று நக்கலாய் கூறினாள்.

அதைக் கேட்டு பிரியா கோவமாய், “உனக்கு இங்க நாங்க என்ன பேசிட்டு இருக்கோம்ன்றத கேட்கிறதுத்தான் வேலையா?” என்றாள்.

“ஆமா, இவ பேசுறதுத்தான் பக்கத்து கிளாஸ் வரைக்கும் கேட்குதே. இதுல நான் வந்து தனியா கேட்கனுமாக்கும்” என்று சொல்லிவிட்டு அவள் பெஞ்சுக்கு சென்றாள்.

“ச் இந்த மேனாமினுக்கிக்கு ஒரு நாள், பெருசா ஒன்னு பண்ணி விடனும்” என்று பிரியா சொல்ல, “வாவ்! இப்பத்தான் பிரியா, நீ பூஜா பிரண்ட் மாதிரி பேசியிருக்க” என்றான் விஷ்வா.

அதில் அவனை முறைத்தவளோ, எதுவும் பேசாது, பூஜாவைப் பார்க்க, அவளோ, அந்த பிரதன்யா பேசியது எல்லாம் காதிலேயே விழாதது போல், பேப்பரை கிழித்து ராக்கெட் செய்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்! இந்த பிரதன்யா உன்ன பத்தி அவ்ளோ பேசுறா. நீ ஏன் அவள ஒன்னும் சொல்ல மாட்ற” என்று பிரியா கேட்க, “அவ எல்லாம் ஒரு ஆளு. ஐஞ்சு ரூபா தாளு. அதுவும் போக, சுத்தி இருக்கிற அம்புட்டு பேருக்கும் நம்மள பிடிச்சிட்டா, அப்புறம் இருக்கிற இடமே போரிங்கா இருக்கும். சோ இவள மாதிரி நாலு பேரு இருக்கட்டுமே” என்று தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

அவ்வளவுத்தான் பூஜா. பெரிதாய் பலிவாங்குகிறேன். அது இது எல்லாம் அவளுக்கு கிடையாது. அவளுக்கு தோன்றியதை தோன்றும் நேரத்தில் செய்துவிடுவாள் அவ்வளவுத்தான்.

அன்றைய தினம் பூஜாவுக்கென்னவோ நன்றாகத்தான் சென்றது. ஆனால் அர்ஜூனுக்குத்தான் அத்தனை எரிச்சல். இதில் அந்த ரமேஷ் வேறு, கார்னிவல் நடத்த வேண்டாம் என்று பிரின்சிபலிடம் பேசியிருக்க, அது குறித்து நாளைக்குத்தான் முடிவு சொல்லப்படும் என்று சொல்லியிருந்தனர்.

அதை எல்லாம் தாண்டி, பூஜாத்தான் அவனை இம்சித்தாள். மாதவ்விடம் காட்டும் அந்த உரிமையை அவள் அவனிடம் காட்ட மறுத்தாள்.

மாலை போல் ஸ்டாப் ரூம் வந்தவளைப் பார்த்த அர்ஜூனோ ஒரு நொடி, தன்னைப் பார்க்கத்தான் வந்திருப்பதாய் நினைத்து, “ச் சும்மா சும்மா இங்க வர வேண்டாம்னு சொன்னா உனக்கு புரியாதா?” என்று கேட்க வாய் திறந்தான்.

அதற்குள்ளாகவே, “ஐ மாதவ் அண்ணா” என்றவள், அவனுக்கு அருகில் இருந்த அவன் கேபினுக்கு சென்று அவனுடன் மொக்கைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவனுமே சற்றும் சலைக்காமல், அவளுடன் பேசிக் கொண்டிருக்க, வந்திருந்த ஆசிரியர்கள் கூட, “என்ன மாதவ்? பூஜா உனக்கு ரிலேட்டிவ்வா?” என்றனர்.

“பூஜா என் சிஸ்டர்” என்று அவன் சொல்ல, அர்ஜூனுக்கோ மேலும் மேலும் கடுப்பானது.

“ச் இவன” என்றவன் மாதவ் தனியாக சிக்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தான். அதற்குள்ளாகவே இன்னொரு ஆசிரியரோ, “ஓ அதான்! அவளுக்கு ப்ரோபசரா பார்த்தா பயம் வர மாட்டேங்கிது” என்று கிண்டலாய் கூறினார்.

“ஐயோ மேடம். எனக்கு புரோபசர்னா ரொம்ப பயம். வேனும்னா அர்ஜூன் சார கேட்டுப் பாருங்களேன்” என்று வேகமாய் அவனைக் கை நீட்டினாள்.

அதில் அர்ஜூனோ, திகைத்து அவளைப் பார்க்க, மாதவ்வோ, “இவனுக்கு சரியான ஆளுத்தான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“அர்ஜூன் சார பாத்தா யாருக்குத்தான் பயம் வராது” என்று பூங்கொடி மேடமும் பூஜாவுடன் சேர்ந்துக் கொள்ள, அர்ஜூனுக்குத்தான் அங்கு இருக்கவே அத்தனை எரிச்சல். ஒரு வித கடுப்பில் அங்கிருந்து கிளாஸிற்கு சென்றான்.

செல்பவனைப் பார்த்த பூஜாவோ, “ஏன் அண்ணா? அர்ஜூன் சார் எப்பவுமே இப்படித்தானா? இல்ல இப்படித்தான் எப்பவுமேவா” என்று சீண்டலாய் கேட்டாள்.

அதில் அவனோ, “ம் அவன் கூடத்தான இனி இருக்கப் போற. உனக்கே புரியும்” என்றான்.

அதன் பின் மாலையும் மாதவ்வே, அவளை அழைத்துக் கொண்டு வர, அர்ஜூனோ, அவர்கள் பின்னாலே வந்தான். ஒரு கட்டத்தில், மாதவ் அத்தனை மெதுவாய் ஓட்டிக் கொண்டிருக்க, அவனைக் கடந்து சென்றான்.

இங்கே மாதவ்வோ, பூஜாவிடம், “ஒரு காபி சாப்டு போலாம்மா?” என்றான். “ஐயோ அண்ணா! நானே கேட்கனும்னு நினைச்சேன். இங்க பக்கத்துல ஒரு ஷாப்ல. சூடா மசால்வடையும் போடுவாங்க” என்றவள் அவனுடன் அங்கு சென்றாள்.

அவளை சில நொடிகள் பார்த்தவன் பின், “உனக்கு அர்ஜூனா பிடிக்குமா பூஜா?” என்று கேட்டான்.

அதற்கு அவள் ஒரு நொடி கூட தயங்கவில்லை. “ம் பிடிக்குமே. அவரைப் பிடிக்காம யாராச்சும் இருப்பாங்களா?” என்றாள்.

“எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று அவன் சொல்ல, “எதுக்கு?” என்று இவள் கேட்க, “அர்ஜூன் ரொம்ப நல்லவன்ம்மா. ஆனா என்ன திடீர் திடீர்ன்னு கோவப்படுவான். யாரையும் அவ்ளோ ஈஸியா அவன்கிட்ட நெருங்க விட மாட்டான்” என்றான்.

“ஏன்? நீங்களாம் அவர் பிரண்டா இருக்கீங்கத்தான?” என்று அவள் வடையை வாயில் வைத்துக் கொண்டே கேட்க, “ம் நான் அவன் பிரண்ட் தான். பட் அவனுக்கு நான் பிரண்டா? இல்லையான்னு, அவன்கிட்டத்தான் கேட்கனும். பிகாஸ், அவனோட சர்கிள்க்குள்ள யாரையும் அலோ பண்ண மாட்டான்” என்ற மாதவ் அர்ஜூனைப் பற்றி அவளிடம் பேசினான்.

அவளுமே அவன் சொல்லியதை எல்லாம் கேட்டவள், “யு டோண்ட் வொரி அண்ணா. உங்க பிரண்ட் கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வராம நான் பார்த்துப்பேன்” என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த மாதவ்வோ, “அவன் மனசுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு பூஜா. அது என்னென்னு அவன் இதுவரைக்கும் என்கிட்ட கூட ஷேர் பண்ணிக்கல. உண்மைய சொல்லனும்னா, அவனோட அம்மாவ கூட, அவன் அவன் ரூமுக்குள்ள அலோ பண்ண மாட்டான். பட் நீ அவன் ரூம்ல அவ்ளோ உரிமையா இருக்கிறத பாக்கிறப்ப, எனக்கென்னமோ உன்னால மட்டும் தான் அர்ஜூன்ன சந்தோஷமா வச்சிக்க முடியும்னு தோணுது” என்றான்.

அதைக் கேட்ட பூஜாவோ, “அப்படி என்ன நம்ம வாத்தி மனசுக்குள்ள இருக்கும்?” என்று தனக்குள் அவள் யோசிக்க, “ம் கண்டிப்பா நீ இருக்கப் போறது இல்ல” என்று அவளின் மனம் கவுண்டர் கொடுத்தது.

அவள் அமைதியாய் இருக்கவும், “அப்புறம் பூஜா. இப்போ நான் அவன்ன பத்தி உன்கிட்ட சொன்னத எல்லாம் அவன்கிட்ட சொல்லிடாத. அப்புறம், என்ன ஓட ஓட அடிப்பான்” என்றான் மாதவ்.

அதைக் கேட்டு சிரித்த பூஜாவோ, “அப்போ எதுக்கும் ஓட ரெடியாவே இருங்க அண்ணா. நான்லாம் அர்ஜூன் சார்ட்ட இருந்து எதையும் மறைக்க மாட்டேன்” என்று சீண்டலாய் கூறினாள்.

அதைக் கேட்டு அவன் அதிர, அவளோ, “சும்மா. பயப்படாதீங்கண்ணா. தங்கச்சி வாழ்க்கைக்காக, அடி வாங்கிக்கலாம் தப்பு இல்ல” என்று சொல்லி. அவனுடன் தான் அபார்ட்மெண்ட்க்கு வந்து சேர்ந்தாள்.

அங்கே அர்ஜூனோ அவளுக்காக, அங்கே லிப்டின் அருகிலேயே நின்றிருக்க, ஏதோ சிரித்தப்படி, மாதவ்விடம் பேசியவள். அர்ஜூனைப் பார்த்ததும், “ஐ அர்ஜூன் சார்” என்று ஓடி வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

ஏனோ திட்டவே நினைத்தான். ஆனால் அவளின் செய்கையில், அவன் அப்படியே அமைதியாகிவிட, மாதவ்வோ விட்டால் போதும் என்று படி வழியே மேலே ஏறியிருந்தான்.

இப்போது அர்ஜூனோ, “காலேஜ் விட்டு வர உனக்கு இவ்ளோ நேரமா?” என்று கேட்டான்.

“உங்களுக்கு மசால் வட வாங்கப் போனேன் சார்” என்று கையில் இருந்த கவரை அவன் முன் அவள் காமிக்க, அதில் அவளை முறைத்தவன், “வா” என்று லிப்டிற்குள் நுழைந்தான்.

அவளோ, “பிராமிஸாவே உங்களுக்குத்தான் சார் வாங்கிட்டு வந்தேன்” என்று அதை அவனிடம் கொடுக்க, “நான் வந்து பிக் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் தான” என்றான்.

“ஆ.ங் அது நேத்தும் அப்படித்தான் சொன்னீங்க. சந்தோஷமா உங்களுக்காக வெயிட் பண்ணி வந்தேன். ஆனா நீங்க ஹாஸ்டல் கூட்டிட்டு போயிட்டீங்க. அப்புறம் இன்னிக்கும் எங்கையாச்சும் எனன் கொண்டு போய் விட்டுட்டா? அதான் உங்க கூட வரல” என்றாள் பூஜா.

ஏனோ அவளின் வார்த்தையில், இவன் அப்படியே நின்று விட, மனமோ அவள் குரலில் தெரிந்த வருத்தத்தை உள் வாங்கியது.

லிப்ட் திறந்திருக்க, அவன் அப்படியே இருக்கவும். “வாங்க சார்” என்று அவன் கையைப் பிடித்திழுத்தாள். இப்போது லிப்டை விட்டு வெளியில் வந்தவனோ, “உனக்கு என் கூட இங்க இருக்கிறது அவ்ளோ பிடிச்சிருக்கா?” என்று பட்டென்று கேட்டான்.

(அட என்னப்பா? பிடிக்காமலா, நீ கொடுக்கிற டார்ச்சர எல்லாம் தாங்கிட்டு அவ இங்கத்தான் இருப்பேன்னு அடம்பிடிச்சிட்டு இருக்கா. இத கண்டுப்பிடிக்கவே உனக்கு ஆறு மாசம் ஆகியிருக்கு. செரி நம்ம ஹீரோயின் என்ன பதில் சொல்றான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   6

*** வரம் – 52 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***