கதிர் அவர்கள் அறைக் கதவைத் தட்ட, அவனின் குரலில் கதவைத் திறந்த நிலா, அடுத்த நொடி வேகமாய் அவனைக் கட்டிக் கொண்டாள். அதை சற்றும் எதிர்பார்க்காத கதிரோ, “நிலா என்னாச்சு?” என்றான். ஆனால் அவளோ எதுவும் சொல்லாது அவனை மொத்தமாய் அணைத்துக் கொண்டாள்.
அவளுக்கு பூவைக் கொடுக்க வந்த தாமரையின் கண்ணில் அது விழ, “இவளுக்கு எத்தன தடவ சொன்னாலும் மண்டையில ஏறாது” என்றப்படி சுற்றிப் பார்த்தார். ஆங்காங்கே வயதுப் பெண்களில் இருந்து பெரியவர் வரை நின்று வேடிக்கைப் பார்க்க, அவருக்கோ இன்னும் கோவம் கூடியது.
“சிறுசுகளுக்குத்தேன் விவரம் பத்தலன்னா, இங்க பெருசுங்களும், இப்படி நின்னு வேடிக்கப் பார்த்தா விளங்கும்” என்று நெற்றியில் அடித்துக் கொண்டவர், “கிளம்பிட்டா, எல்லாரும் கீழ போ வேண்டியதுத்தேன்ன” என்று சத்தம் கொடுத்தார்.
அவரின் குரலில், கதிர் திரும்ப, மற்றவர்களும் கலைய, நிலா மட்டும் இன்னும் கூட அவனைக் கட்டிக் கொண்டுத்தான் நின்றிருந்தாள்.
“என் மொத்த மானத்தையும் சேர்த்து வாங்குறா. இவள” என்றவருக்கு அவர்களிடம் செல்லவும் தயக்கம். அதில், அவரோ அவர்கள் பக்கம் திரும்பாது, “பொண்டாட்டி கூட உள்ளப் போயி பேச வேண்டியதுத்தேன்ன” என்று ஜாடையாய் கூறினார்.
அதில் கதிரோ, நிலாவை தன்னில் இருந்து விலக்கி, அறைக்குள் அழைத்து சென்று கதவை சாத்தினான். அதன் பின் சுற்றிப் பார்த்த தாமரையோ, “முதல்ல கோவிலுக்கு போயிட்டு வந்ததும் சுத்திப் போடனும்” என்று தனக்குள்ளே சொல்லியப்படி அங்கிருந்து கீழே வந்தார்.
இங்கே நிலாவோ, “மாமா” என்று மீண்டும் அவனைக் கட்டிக் கொள்ளப் போக, “ஹேய். நில்லு என்னாச்சு?” என்றான்.
அதில் அவளோ, “உங்களுக்கொன்னுமில்லத்தேன்ன” என்றவள் அவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாய்ப் பார்த்தாள்.
அப்போதே அவள் பதட்டம் புரிய, “என் பொண்டாட்டி இருக்கிறப்ப, எனக்கென்னாகப் போது. நான் காளையன் கணக்கா ஜம்முன்னுத்தேன்ன உன் முன்ன நிக்கேன்?” என்றான்.
“மாமா என் கூடவே இருங்க. எங்கையும் போ வேணாம்” என்றவள் மீண்டும் அவனைக் கட்டிக் கொண்டாள். அதில் மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தவனோ, “என் கூட ஜோடியா திருவிழா பாக்கப் போவனும்னு நீத்தேன்ன ஆசைப்பட்ட. இப்போ இப்புடி சொன்னா என்னப் பண்றது?” என்றான்.
“இல்ல மாமா. மனசுக்கு ஏதோ ஒப்பல. என் கூடவே இருங்க. ப்ளீஸ்” என்றாள். அதில் அவள் கன்னத்தை தாங்கி, “உன் கூடவே இருக்கேன். ஆனா, கோவிலுக்கு போலாம்” என்றான்.
“ஆ..ங் ம்ஹூம்” என்று அவள் தலையாட்ட, “கதிரு பொண்டாட்டிக்கு மட்டும்த்தேன் ஆசை இருக்குமா? கதிருக்கு இருக்க கூடாதா? எனக்கும் என் பொண்டாட்டிக் கூட திருவிழா பாக்கனும்னு தோனும்ன்ல” என்றான்.
அதில் அவளோ அவனைப் பார்க்க, அவனோ, “என் கூட திருவிழா பாக்க வருவத்தேன்ன?” என்றான். இப்போது அவளால் மறுக்க முடியவில்லை. “ம்” என்று தலையாட்டினாள்.
அதில் அவள் முகத்தை கரத்தால் துடைத்தவன், “செரி இப்போ என் நிலாக்கு என்னப் பயம்?” என்று அவள் முன்னே குனிந்துக் கேட்டான்.
அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் அவளுக்குள் ஒரு வித பயம் ஆட்கொண்டது.
அவள் சொல்லாது இருக்கவும், “என்னாச்சி?” என்று அவன் மீண்டும் கேட்க, உடனே அவள் பூஜை பொருட்கள் கொட்டியது. குங்குமம் கொட்டியது என்று அத்தனையையும் கடகடவென்று ஒப்பித்தாள்.
அதைக் கேட்டு சிரித்தவனோ, “இம்புட்டுத்தேன் என் பொண்டாட்டி தைரியமா?” என்று சீண்டலாய் கேட்டான்.
“மாமா” என்றவள் அவனைப் பார்க்க, அவனோ, “இங்கனப்பாரு நிலா. உம்ம நான் கலெக்டராக்கனும்னு நினைக்கிறேன். ஆனா நீ, இப்புடி குங்குமம் கொட்டுனதுக்கெல்லாம் அழுதுட்டு நிக்கிற. கலெக்டரானா. இன்னும் எவ்வளவோ பிரச்சன வரும். அதெல்லாம் எப்புடி நீ சமாளிப்ப” என்று பொறுமையாய் கேட்டான்.
“எனக்கு என்ன பிரச்சன வந்தாலும் சமாளிச்சிடுவேன். ஆனா உங்களுக்கு வர வேணாம்” என்றாள். அவளின் அன்பில், மீண்டும் நெகிழ்ந்தவன். அவள் கன்னம் தாங்கி நெற்றி முட்டி, “என் பொண்டாட்டி இருக்கிறப்ப, எந்த பிரச்சனையும் வராது” என்றான்.
“நிஜமா உங்களுக்கு ஏதும் இல்லத்தான” என்று அவள் அழுத்திக் கேட்கவும், “இல்ல. நான் வேணா சட்டைய கழட்டி காட்டவா. பாக்குறீயா?” என்று சீண்டலாய் கேட்டான்.
அவனின் கேள்வியில், “ச்சி போ மாமா” என்று சிறு வெட்கத்துடன் அவள் சொல்ல, அதில் மெலிதாய் புன்னகைத்தவன், “அடியே, உடம்புல அடி எதுவும் இல்லன்றத காமிக்கேன்னுத்தேன் சொன்னேன். நீ வெட்கப்படுறதப் பாத்தா, என் அக்கா மவ வேற எதையோ யோசிச்ச மாதிரி தெரியுது” என்று நக்கலாய் கேட்டான்.
அதில் அவளின் முகம் இன்னும் சிவக்க, “ஐயோ. அப்படி இல்ல” என்று தடுமாறினாள். “இல்லையே. நான்த்தேன் இன்னும் என் அக்கா மவள சின்னப் புள்ளையா பாத்து தப்பு பண்ணிட்டேன்னோ. என் அக்கா மவ வளர்ந்துட்டா போலையே” என்று சொல்லியவனின் பார்வை எக்குத் தப்பாய் பெண்ணவளின் மேல் பதிய, அவளுக்கோ உடல் சிலிர்த்தது.
“மாமா” என்றவள் அவனை அடக்க முயல, அவனோ, “அதேன் நான் வர்றேன்னு சொன்னேன்த்தேன்ன, அதுக்குள்ள என்ன அவசரம்?” என்றான்.
அதில் அவளோ குழம்பி, “என்ன?” என்று கேட்க, “இல்ல. புடவைய அதுக்குள்ள கட்டிட்டீயே. அதேன் கேட்டேன்” என்றப்படி அவள் முந்தானையைப் பிடித்தான்.
“அது அம்மா கட்டி விட்டாக” என்று அவள் சொல்ல, “நான் வேணா இன்னொருக்கா கட்டி விடவா?” என்று சீண்டலாய் கேட்டவனின் மீசை முடி சிலிர்த்து துடித்தது.
அதைக் கேட்டவளுக்கோ உள்ளங்காலில் பெருவிரல் கூசியது. “ச் போ மாமா. நீ மோசம்” என்று விலகி நின்றாள்.
அதில் அவளை பின்னிருந்து அணைத்தவனோ, “ஆறு. நான்த்தேன். அத்தன பேர் முன்னையும் கட்டிப் பிடிச்சேன்னா?” என்று சீண்டலாய் கேட்டான்.
அப்போதே அவளுக்கு அவள் செய்த விஷயமே நினைவுக்கு வர, “அப்போ அத்தனப் பேரும் பாத்துட்டாகளா?” என்று சிறு வெட்கத்துடனும், தவிப்புடனும் கேட்டாள்.
“அத்தனப் பேரும் பாக்கல. கொஞ்சப் பேருத்தேன் பாத்தாக. வேணும்னா, கீழ வந்து கட்டிப் பிடிக்கிறீயா? அம்புட்டு பேரும் பாப்பாக” என்று மேலும் அவளை சீண்டி சிலிர்க்க வைத்தான். அவளோ, “ஐயோ மாமா” என்று முகத்தை மூடிக் கொள்ள, அதில் அழகாய் சிரித்தான்.
அதென்னவோ அவளின் முன்பு மட்டும், அவனுடைய அத்தனைக் கவலையும் எங்கோ வெகு தூரம் செல்வது போல் ஒரு எண்ணம். இப்போதும் கூட கோவிலில் இருந்து அத்தனைக் கவலையாய் தான் கிளம்பியிருந்தான். ஆனால் அவளைப் பார்த்த மறு கணம், அவனை மொத்தமாய் மாற்றியிருந்தாள். அவளின் ஆதரமாய் அவன் மாறியிருக்க, அவனுக்கோ அவளைத் தவிர்த்து வேறு எதுவுமே வேண்டாம் எனும் எண்ணம்.
இங்கே கீழே வந்த தாமரையிடம் செல்வி, “ஏன்க்கா? இன்னிக்காச்சும் மாமா கோவிலுக்கு வருவாரா?” என்று கேட்க, “ஏதோ டவுன்ல சோழி கெடக்குன்னு சொல்லிட்டு போனாரு. எப்புடியும் இங்கன இருந்தாலும், ஏதாச்சும் வம்பு இழுத்துட்டுத்தேன் திரிவாறு. அதனால அவரு சோழிய பாக்கட்டும். உன் வூட்டுக்காரர் கோவில்லத்தேன்ன இருக்காரு?” என்று கேட்டார்.
உடனே செல்வியோ, “ஆமாக்கா. இப்பத்தேன் பேசுனேன். அங்கனத்தான் இருக்காரு” என்று சொல்ல, “பொறவு செல்வி. அக்கா இப்புடி சொல்றேன்னு தப்பா எடுக்காத. நான் பட்ட பாடு நீ படக் கூடாதுன்னுத்தேன் சொல்றேன். உன் வூட்டுக்காரர் என் வூட்டுக்காரர் மாதிரி கிடையாதுத்தேன். ஆனாலும், அன்னிக்கு குடிச்சிட்டு வந்த மாதிரி இன்னொரு நாள் குடிக்க வுட்டுடாத. ஆரம்பத்துலையே, இதெல்லாம் நம்ம கண்டிச்சு விட்டுடனும். பொறவு அதுக்கு அவுக பழகிட்டா, காலத்துக்கும் நம்ம அழுது பழக வேண்டி வரும். புரியுதுத்தேன்ன” என்று ஒரு அக்காவாக, தான் பட்ட கஷ்டத்தை தங்கை அனுபவிக்க கூடாது என்று நினைத்துக் கூறினார்.
அதில் செல்வியோ, “அதெல்லாம் நேத்தே பேசிட்டேன்க்கா. இனி அப்புடி பண்ண மாட்டாரு. அப்படி நடந்தா, நானும் அவர் புள்ளையும் ஜென்மத்துக்கும் பேச மாட்டோம்னு சொல்லிருக்கோம். அதுவும் போக, எங்களுக்காக இல்லன்னா கூட அவரோட மூத்த மவ நிலாக்காக குடிக்க மாட்டேன்னு சொல்லிருக்காரு” என்றாள் செல்வி.
“என்ன சொல்றவ?” என்று தாமரைக் கேட்க, “ஆமா நிலா இன்னும் அவரு கூட முகம் கொடுத்து பேசலையாம். நேத்து கூட அத சொல்லித்தேன் ஒரே புலம்பல். நானும், கொஞ்சம் அவருக்கு உரைக்கட்டும்னுத்தேன் நிலாட்ட கூட அவருக்காக பேசல” என்றார்.
“ம் இதுலெல்லாம் விவராமாத்தேன் இருக்கா. ஆனாலும் இன்னும் கூட அவளுக்கு விவரம் பத்தல” என்றார்.
“போக்கா, உமக்கு புள்ளைய ஏதாச்சும் சொல்லனும். அதுனால ஏதாச்சும் சொல்லாத. ஒரு நிஜம் சொல்லட்டாக்கா. உம்ம, என்னைய விட, நிலா இந்த வூட்ட அத்தன பொறுப்பா பாத்துக்கிடுறா. எனக்கெல்லாம் அப்படியே நம்ம அம்மைய பாக்குற கணக்கா இருந்திச்சு தெரியுமா? அதுலையும் வூட்டுக்கு வந்தவகள அவ கவனிக்கிறது இருக்கே. அப்படியே அம்மாத்தான்க்கா” என்று செல்வி சொல்லும் போதே இருவருக்கும் அன்னையின் நினைவு வந்தது.
அதே நேரம் ஒரு அம்மாவாக, தன் மகள் புகுந்த வீட்டில் நல்ல மருமகள் என்ற பெயர் வாங்கியுள்ளது அவருக்கு அத்தனை திருப்தியாகவும் இருந்தது. ஆனால் கணவரை நினைக்கும் போதுத்தான் சிறிய உருத்தல் இருந்துக் கொண்டே இருந்தது.
அங்கே செந்திலோ, “இதுவர நான் நெறையா தப்பு பண்ணிருக்கேன். ஆனா இன்னிக்கு நான் பண்ணப் போறது, அந்த எல்லா தப்பையும் செரி பண்ணிடும்” என்று தனக்குள்ளே சொல்லியவர், பாண்டியை கொலை செய்ய ஒரு தக்க சமயத்தை எதிர்பார்த்தார்.
இங்கே பாண்டியின் ஆட்களோ, “அண்ணே ஊரு முழுசும், அந்த செந்தில தேடிட்டேன். எங்கேயும் காணல” என்று சொல்ல, அதைக் கேட்ட பாண்டியோ, “எங்குட்டு போயிருக்கப் போறான்? நிச்சயமா, இங்கத்தேன் எங்கையாச்சும் குடிச்சிட்டு கெடப்பான். போயி ஒரு இடம் விடாம எல்லா இடத்துலையும் போய் தேடுங்க. ஏன்னா, அவென்ன வச்சித்தேன், மத்த விஷயத்த பண்ண முடியும்” என்றான்.
“செரிங்கண்ணே” என்றப்படி அவர்கள் செந்திலைத் தேடி செல்ல, இங்கே முருகேசனோ சிவாவிடம், கபடி போட்டி பத்தி பேசிக் கொண்டிருந்தார்.
“என்னல்ல? இம்புட்டு நேரமாச்சு இன்னும் ஆரம்பிக்காம இருக்கு” என்று அவர் கேட்க, “அது நம்ம டீம்ல ஆட வேண்டிய பையன் இன்னும் வரலண்ணே. அதேன்” என்றான்.
“ஏன்ல ஒத்தப் பையன நம்பித்தேன் டீம்ம வச்சிருக்கீகளா?” என்று அவர் கேட்க, “இல்லண்ணே. அது” என்று சிவா தயங்க, அதற்குள்ளாக, ஊர் பெரியவர்கள் வந்து விட முருகேசன் அவர்களிடம் பேச சென்றான்.
சங்கரேயனோ, “என் பையனுக்கு மருவாத இல்லாத இடத்துல எனக்கு மட்டும் என்ன மருவாத வேண்டிக் கெடக்கு?” என்று கோவமாய் கேட்டார்.
“ஐயா நீங்க இப்புடி சொல்லலாம்மா?” என்று ஊர் தலைவர் கவலையாய் கேட்க, “என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறவுகளா இருந்திருந்தா, நீங்களே முடிவு பண்ணி இத பண்ணியிருப்பீகளா?” என்றவருக்கு இன்னும் கோவம் அடங்கவில்லை.
அதில் அவர்களோ இவரை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவரோ உறுதியாய், “எனக்கு என் புள்ளத்தேன்ல குல சாமி. அவனுக்கு இடம் இல்லாத இந்த கோவில்ல எனக்கு எந்த உரிமையும் வேண்டாம்” என்றப்படி கிளம்பினார். அதற்குள்ளாக அங்கு வந்த முருகேசனோ, “மாமா செத்த பொறுங்க. கதிரு வந்ததும் பேசிக்கலாம்” என்றார்.
“ஏல. இதுல நீயும் கூட்டணியா?” என்று கோவமாய் கேட்க, “அட என்ன மாமா, உங்களையும், மாப்பிள்ளையும் விட எனக்கு இந்த ஊரு முக்கியமா மாமா? கதிருத்தேன் இந்த முடிவெடுத்தான். அவனுக்காண்டித்தேன், இப்ப வர இங்கன நின்னுட்டிருக்கேன்” என்றார் முருகேசன்.
உடனே சங்கரேயனோ, “செரி. அப்போ எனக்கு பண்ண வேண்டிய மருவாதைய என் புள்ளைக்கே பண்ணிடுங்க” என்றார். அதில் ஊர் காரர்களும், “அது எப்படியா பெரிய தலைக்கட்டு நீங்க இருக்கிறப்ப, சின்னப் பையனுக்கு செய்ய முடியும். அதுவும் போக, அதுக்கு தம்பியும் ஒத்துக்குமான்னு தெரியலையே” என்று தலையை சொரிந்தார்.
இங்கே நிலாவுடன் கதிர் கோவிலுக்கு பைக்கில் கிளம்ப மற்றவர்களோ, காரில் கிளம்பினர்.
(ஊர் மருவாத, கபடி போட்டி, திருவிழா, சண்டை எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
gayathri Shini
super super sister
Raja Veni
episode hed line note pannunga pls sister episode number mind panna mudiyala 🙏
Raja Veni
episode hed line note pannunga pls sister episode number mind panna mudiyala 🙏
Umakrish Krish
❤☺