(ஹாய் பிரண்ட்ஸ். ஆல்ரெடி டெலிகிராம், வாட்சப் சேனல்ல, மென்சன் பண்ணியிருந்தேன். ஹெல்த் இஸ்யூ. ஹாஸ்பிடல்ல இருந்ததால எபிசோட் ரெகுலரா அப்டேட் பண்ண முடியல. வெயிட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்! சரி இப்போ வாங்க, நம்ம அர்ஜூன், பூஜா என்னப் பன்றாங்கன்னு பார்க்கலாம்…)
வழக்கம் போல் பூஜாவை அவளுடைய கிளாஸ் டீச்சர் திட்டி அனுப்பியிருக்க, அவளோ கலங்கிய கண்களோடு அர்ஜூனைக் கடந்து சென்றாள்.
சுற்றி அத்தனைப் பேரும் அவளையே வேடிக்கைப் பொருளாய் பார்த்துக் கொண்டிருக்க, ஏனோ அர்ஜூனுக்கு, அவளுடைய கலங்கிய விழிகள் என்னமோ செய்தது.
அதில், “பூஜா” என்றான். இப்போது அத்தனைப் பேரும் அர்ஜூனைப் பார்த்தனர். “இப்போ அர்ஜூன் சார் ரவுண்டா?” என்பது போல் தான், பூஜாவின் பக்கம் திரும்பினர்.
“உன்னோட கார்னிவல் ஐடியா ரொம்ப இம்பிரஸிவ்வா இருந்திச்சு” என்றான். “என்ன?” என்று அவள் குழப்பமாய் பூஜா அவனைப் பார்க்க, அவனோ, “கிளாஸ்ல வச்சே அது பத்தி டிஸ்கஸ் பண்ணனும்னு நினைச்சேன். நல்ல வேள நீயே இங்க வந்துட்ட. வா வந்து உட்காரு” என்று தன் முன்னே இருந்த இருக்கையைக் காட்டி கூறினான்.
அதில் சுற்றி இருந்த அத்தனைப் பேரும், “அர்ஜூன் சார் பாராட்டுற அளவுக்கு அப்படி என்ன பண்ணியிருப்பா?” என்று பூஜாவை சிறு ஆர்வத்தோடு பார்த்தனர்.
அந்த வகுப்பு ஆசிரியருக்கோ அத்தனை எரிச்சல். ஏனெனில் சற்று முன்பு அவர் தானே அவளை அந்த திட்டு திட்டிக் கொண்டிருந்தார். இப்போது அதற்கு மாறாக, அர்ஜூன் அவளை பாராட்டி பேசுவது, அவரை ஏதோ மட்டம் தட்டுவது போல் தான் அவருக்கு தோன்றியது.
அர்ஜூனோ மற்றவரை பொருட்படுத்தாது, “பை தி வே. இத நீயே இன்சியேட் எடுத்து பண்ணிடுவீயா? இல்ல உனக்கு துணைக்கு, நானே பர்ஷன்ஸ் எல்லாம் அலாட் பண்ணிக் கொடுக்கனுமா?” என்றான்.
அவளோ அமைதியாக இருந்தாள். ஏனெனில், இன்னமுமே அவள் கண்கள் கலக்கத்தில் தான் இருந்தது. எப்போது வேண்டுமென்றாலும் கண்ணீர் தரை தொட்டு விடும் என்பது போல் அவள் அமர்ந்திருக்க, இப்போது அவனோ, “சரி. நான் கிளாஸுக்கு வந்து அத பத்தி பேசுறேன். இப்போ நீ கிளாஸுக்கு போ” என்றான்.
“ம்” என்றப்படி அவள் எழப் போக, இப்போது அவனோ அவளுக்கு மட்டும் கேட்கும் தோணியில், “முகத்த கழுவிட்டு கிளாஸுக்கு போ” என்றான். அதில் பட்டென்று அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ, “லஞ்ச் பிரேக்ல, ஆடிட்டோரியத்துக்கு வா” என்று கூறினான்.
“மாட்டேன்” என்று முனுமுனுத்துவிட்டு அவள் அங்கிருந்து சென்றிருந்தாள். அவளின் மறுப்பில் அவனுக்கு கோவம் வந்திருக்க வேண்டும். ஏனோ அவள் கோவம் அந்த நொடி பிடித்தது. ஏனோ அவளுடைய கலங்கிய முகம் அவனை என்னமோ செய்திருந்தது.
இப்போது அவள் சற்று தெளிந்தது போல் தோன்ற, அவன் தன் புத்தகத்தை திருப்பினான்.
“அது என்ன சார்? அந்த ஸ்டூடண்ட்க்கிட்டையே எப்போ பார்த்தாலும் எல்லா பொறுப்பையும் கொடுக்கிறீங்க. அப்படி என்ன அந்த பொண்ணு மட்டும் ஸ்பெஷல்” என்று சிறு ஏளனத்துடன் கேட்டார் அந்த ஆசிரியர்.
“யார்கிட்ட எந்த வேலைய கொடுத்தா, சரியா பண்ணுவாங்களோ? அவங்க கிட்டத்தான் கொடுக்க முடியும். அட் தி சேம் டைம், ஸ்டூடண்ட்ஸ் எல்லாருமே எனக்கு ஸ்பெஷல் தான். உங்கள மாதிரி ஸ்பெசிபிக்கா எல்லாம், ஒரு ஸ்டூடண்ட்க்கு எக்ஸ்ட்ரா கேர் கொடுக்க எனக்கு தெரியாது” என்றவன் பார்வையை புத்தகத்தில் பதித்தப்படியே பதில் கொடுத்தான்.
அது அவருக்கு இன்னுமே எரிச்சலைக் கொடுக்க, “கார்னிவல் வைக்கிறதா? வேண்டாமான்னு இன்னும் மேனேஜ்மெண்டே முடிவுப் பண்ணல. அப்படி இருக்கிறப்ப” என்று அவர் விடுவதாய் இல்லை.
“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. இன்னும் முடிவு பண்ணலன்னு. அப்படின்னா, அத வைக்கிறதுக்கான முடிவையும் எடுக்கலாம் இல்லையா? சோ அதுக்கு நம்ம ப்ரீ ப்ளான்ன இருக்கிறது தப்பு இல்லையே” என்றவன் அப்போதும் கூட அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை.
ஏனெனில், எங்கே பார்த்தால், பூஜாவை அழுக வைத்தவனை, தன்னை மீறி ஏதாவது செய்து விடுவோமா? என்ற யோசனை அவனுக்கு. ஏனெனில் அவளுடைய கண்கள் கலங்கியது இப்போது அவனுடைய கண்ணில் சிவப்பை கூட்டிக் கொண்டிருந்தது.
நிச்சயம் அவரைப் பார்த்தால், நிச்சயம் அந்த கோவத்தை அவரிடம் காட்டி விடுவான். ஆனால் அவருக்கோ, அதுவும் அவரை அவமரியாதை படுத்துவது போல் தான் தோன்றியது.
அதில் இன்னும் இன்னும் பூஜாவின் மீதும், அர்ஜூனின் மீதும் குரோதத்தை வளர்த்துக் கொண்டார் அவர்.
“என்ன மீறி, எப்படி அந்த கார்னிவல் நடக்குதுன்னு நானும் பாக்குறேன்” என்று தனக்குள் பொறுமியப்படி அங்கிருந்து சென்று விட, ஸ்டாப் ரூம் முழுக்க, இப்போது கார்னிவல் பற்றிய பேச்சுத்தான் பரவியிருந்தது.
இங்கே வகுப்புக்கு வந்த பூஜாவோ, கோவமாக அமர்ந்திருந்தாள். அதில் பிரியாவோ, “என்னாச்சு பூஜா? அந்த புரோபசர், இன்னிக்கும் ஓவரா பேசிட்டானா?” என்றாள்.
ஏனெனில் அவளுக்கே தெரிகிறதுத்தான். அந்த ஆசிரியர் வேண்டுமென்றேத்தான் அவளை திட்டுகிறார் என்று. இவளுமே, அவருக்கு சலிக்காமல், சேட்டை செய்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் இந்த ஒரு வாரமாய், அப்படி கூட அவள் யாரிடமும் வம்பு இழுத்திருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அர்ஜூன்.
அன்று அர்ஜூன் வகுப்பை விட்டு வெளியில் அனுப்பியதில் இருந்தே, அவள் அமைதியாகத்தான் இருந்தாள். ஆனால் அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை. பூஜாவின் அமைதி எல்லாம் அணுகுண்டை விட மோசமானது.
இப்போதும் பூஜா அமைதியாகவே இருக்க, இப்போது அந்த பிரதன்யாவோ, “இதுக்குத்தான், காலேஜூக்கு வந்தா, படிக்கிற வேலைய மட்டும் பார்க்கனும். அத விட்டுட்டு, எல்லார் கிட்டையும் பேம் ஆகனும்னு சீன் பண்ணிட்டு சுத்துனா, இப்படித்தான் அடி வாங்கனும்” என்று நக்கலாய் சொல்லி சிரித்தாள்.
“ஹேய் எங்க பூஜா ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது. நீத்தான்” என்று பிரியா சண்டைக்கு சென்றிருக்க, சரியாக அன்னேரம் அங்கு வந்த விஷ்வாவோ, “ஹேய் பிரியா. என்னாச்சு” என்றப்படி அங்கு வந்தான்.
அதற்குள் பிரதன்யாவோ, “என்ன? உண்மையத்தான சொன்னேன். எங்க? இவ மேல ஒரு நல்ல ஒபினியன் எந்த டீச்சருக்காச்சும் இருக்கா? ஈவன் இவளாலத்தான் கிளாஸுக்கே பிராபளம்.” என்றாள்.
“ஹே அத பத்தி உனக்கென்ன கவல” என்று பிரியா விடாது பேச, உடனே பிரதன்யாவின் கூட்டமும், அவளிடம் சண்டைக்கு வர, விஷ்வாவோ, பிரியாவை அமைதிப்படுத்த முயற்சிக்க, அதற்குள் அர்ஜூன் “வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்” என்று சத்தம் கொடுத்தான்.
அவனுடைய சத்தத்தில், அனைவரும் எழுந்து நிற்க, பிரியாவும், பிரதன்யாவும் கூட சற்று அதிர்ந்து ஒருவரை ஒருவர் முறைத்தப்படி முகத்தை திருப்பிக் கொண்டனர்.
இப்போது அர்ஜூனோ அவர்கள் இருவரையும் பார்த்து, “நீங்க என்ன ஸ்கூல் கிட்டா? இப்படி இம்மெச்சூர்டா பிகேவ் பண்ணிட்டு இருக்கீங்க” என்று திட்டினான்.
“இல்ல சார் அது இவ தான்” என்று பிரதன்யா, பிரியாவை கை காமிக்க, அதற்குள் பிரியாவோ, “இல்ல சார்” என்று சொல்ல வந்து பின், எங்கே மீண்டும் பூஜாவை வம்புக்கு இழுப்பார்களோ என்று நினைத்து, “சாரி சார்” என்றாள்.
“கோ அண்ட் சிட்” என்று இருவரைப் பார்த்தும் திட்டிவிட்டு அவன் போர்டின் பக்கம் நடக்க, இப்போது பூஜா எழுந்து நின்றாள்.
அதில் அவன் அவளைப் பார்க்க, அவளோ யாரையும் பார்க்காது, தன் பேக்கை எடுத்துக் கொண்டு வகுப்பில் இருந்து வெளியில் செல்ல கிளம்பினாள். அதைப் பார்த்து பிரதன்யா மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
ஏனெனில் அர்ஜூனுடைய வகுப்பில் அவள் இருக்க கூடாது என்று சொல்லியிருந்தானே. கிட்ட தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக, அவனுடைய பீரியடில் அவள் வெளியேத்தான் இருக்கிறாள்.
இப்போது கூட அவனுடைய பீரியட் அது கிடையாது. அதனால் தான் உள்ளே அமர்ந்திருந்தாள். இப்போது அவன் வந்திருக்க, அவளோ வெளியில் செல்ல நினைத்தாள்.
அவளின் செயலில், “எங்கப் போற? போயி உன் இடத்துல உட்காரு” என்றான் அர்ஜூன்.
அதில் இப்போது பிரதன்யாவும், அவள் கூட்டமும், ஒரு வித குழப்பத்தோடு அர்ஜூனைப் பார்க்க, பூஜாவோ அவனைப் பார்க்காது, “என் பனிஷ்மெண்ட் சார்” என்று தரையைப் பார்த்தப்படி கூறினாள்.
“நான் தான கொடுத்தேன். இப்போ நான் தான சொல்றேன். போ போயி உன் சீட்ல உட்காரு” என்றான். அதில் இப்போது அவனை நிமிர்ந்துப் பார்த்தவளோ, எதுவும் சொல்லாது அப்படியே நின்றிருந்தாள்.
“என்ன? நீ அங்க போயி உட்கார்ந்தத்தான், நான் சொல்ல வந்தத மத்தவங்களுக்கு சொல்ல முடியும். இப்படி நீ நின்னுட்டு இருந்தா. மத்தவங்கள நான் பாக்க வேண்டாமா?” என்றான்.
அதில் பிரியாத்தான், “பூஜா வா” என்று அவள் கையைப் பிடித்து அழைத்து வந்து அமர்த்திக் கொண்டாள்.
மறுபடியும் அர்ஜூன் கோவப்பட்டு அவளை வெளியில் அனுப்பி விடக் கூடாதே என்ற பதட்டம் அவளுக்கு. ஆனால் பூஜாவோ, இப்போது அர்ஜூனை பார்க்காது ஏதோ ஒரு நோட்டை எடுத்து கிறுக்க ஆரம்பித்திருந்தாள்.
அதை அர்ஜூன் கவனித்தாலும், ஏனோ அவளை அவள் போக்கிலேயே விட்டு விட்டான். அவன் வகுப்பில் வைத்து, கார்னிவல் குறித்து அவர்களிடம் கேட்க, அவர்கள் அனைவருக்குமே அது நடத்துவதில் மகிழ்ச்சித்தான்.
அதை எல்லாம் கேட்டறிந்துக் கொண்டவன், கடைசியாய், “சரி அப்போ நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்து இந்த கிளாஸ்ல ஒருத்தர் தான் இன்சார்ஜ் எடுத்துக்கிடுற மாதிரி இருக்கும். அது யாருன்னு, கார்னிவல் டேட் அனோன்ஸ் பண்ணதும் சொல்றேன்” என்றான்.
“ஒகே சார்” என்று அனைவரும் கோரஸாக சொல்ல, இப்போது அர்ஜூனின் பார்வையோ பூஜாவின் மீதுத்தான் இருந்தது.
ஆனால் அவள் தான் அவன் பேசியது எதுவும் காதிலேயே விழாதது போல் அமர்ந்திருந்தாள். அதிலும் வெளியில் வேடிக்கைப் பார்த்தப்படி அவள் இருக்க, இப்போது அர்ஜூனோ, “அப்புறம் கார்னிவல், கல்சுரல்ஸ் இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ரிபிரஸ்மெண்ட்க்காகத்தான். சோ அதுல மட்டுமே போகஸ் பண்ணிட்டு, அப்புறம் ஸ்டடீஸ மிஸ் பண்ணிடக் கூடாது. அதனால, கிளாஸ் டெஸ்டும் ரெகுலரா இருக்கும். செமஸ்டருக்கும் புல் பிளஜ்ஜா ரெடியாகனும்” என்று இப்போது ஸ்ட்ரிக்ட் புரோபசராகவும் பேசியிருந்தான்.
அதற்கும் அவர்கள் தலையாட்ட, அவனோ அன்றைக்கான வகுப்பை எடுக்க ஆரம்பித்தான். பூஜாவோ அன்று அவன் வகுப்பை கவனிக்கவே இல்லை. அர்ஜூனும் இரண்டு முறை பிரியாவை எழுப்பி கேள்வி கேட்டு விட்டான்.
அப்போதும் பூஜா அவன் பக்கம் திரும்பவில்லை. “ரொம்பத்தான் மேடமுக்கு கோவம் வரும் போலையே” என்று சொல்லிக் கொண்டவனுக்கு தெரியவில்லை. அவளுடைய கோவத்தை எல்லாம் பார்த்தால், அர்ஜூன் என்பவனின் கோவம் எல்லாம் பீஸ் பீஸாகிவிடும் என்று.
ஆனாலும் ஏனோ பூஜா ஏதோ ஒரு வகையில் அவனை பாதித்துக் கொண்டே இருந்தாள். இப்போதும் செல்லும் போது, “பூஜா” என்றான்.
அதில் அவள் அன்னிட்சையாய் நிமிர்ந்துப் பார்க்க, “பூங்கொடி மேடம் கொடுத்த லிஸ்ட் உன்கிட்டத்தான இருக்கு. அத லஞ்ச் பிரேக்ல வந்து சப்மிட் பண்ணிடு” என்று சொல்லிவிட்டே சென்றான்.
“ச் என்னடி இது? ஒரு வாரமா, அந்த அர்ஜூன் சார் இவகிட்ட அப்படி எரிஞ்சு விழுந்தாரு. இப்போ என்னென்னா, அவ கிட்ட ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருக்காரு” என்று பிரதன்யாவின் அருகில் இருந்தவள், அவள் காதைக் கடித்தாள்.
“எப்படியும் அடுத்து சிக்காமலா போயிடுவா?” என்று இவள் கருவிக்கொள்ள, அங்கே அர்ஜூனோ பூஜாவின் வருகைக்காக, அந்த ஆடிட்டோரியத்தில் காத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனின் தர்மபத்னியோ, அவனை முடிந்த மட்டும் காக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
(பூஜான்னா, பிளவர்ன்னு நினைச்சீங்களா? பயரு. அப்படி எல்லாம் எங்க பூஜா அவ்ளோ ஈஸியா வந்துட மாட்டா கண்ணா. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அடுத்து நீங்க சொல்றது எல்லாம் எனக்கு புரியுது, டெய்லியும் ரெண்டு எபிசோட் போடுங்கன்னு. பட் இது ஆன்கோயிங் ஸ்டோரி. அதுவும் போக, இந்த ஒரு ஸ்டோரி மட்டும் நான் எழுதல. அதர் ஸ்டோரிஸும் போயிட்டு இருக்க. ஈவன் ரைட்டிங் மட்டுமே என் ஒர்க்-ம் கிடையாது. நான் வேற ஒரு ஜாப்ல இருக்கேன். சோ, என்னால ஒரு எபிசோட் தான் கொடுக்க முடியும். ஈவன் ஹெல்த் இஸ்யூ அப்படின்றதாலத்தான் இவ்ளோ டிலே ஆகிடுச்சி. சோ புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉🎉take care of your health sissymaa❤❤❤ pooja ma amaidhi ya iruka so villi kumbal konjam silent ah irunga ila pinnadi romba kasta paduvinga…. arju vathi un nilamai nenacha dhan konjam pavama iruku 🤣🤣🤣
Indhu Mathi
super super super super super super super super super super super super super super super super super ❤️❤️❤️❤️❤😍❤️❤️❤️😍❤😍❤😍❤😍❤😍❤😍
Vashanthakumar Rushanikka
plz upload regular
G Srimathy
Super
Indira Gandhi
Priya na Suma
Bala Devi
nice
Ammu Sathish
சூப்பர்
Keerthi S
❤️❤️❤️super
priya priyanga
daily updates kudunga
priya priyanga
last night ennachu solave ila,epotha husband and wife ah aavanga…
Raja Veni
annaikku night enna achu sollave illa
Devi Saravanan
super sis ❤️❤️❤️❤️❤
Kavi Madhu
seekram rendu peraium sethu vachirunga
Ammu Gnanarajan
arjuney ne matna man enga pooja va ye azhuga vechitala edho edho pesnala divorce varaikum pooja kita pesnala unaku iruku man
Ammu Gnanarajan
Arjuneyy ne