முருகேசன் செந்திலைத் தேடி தோட்டத்துக்கு வர, அங்கே அவரோ குடித்து விட்டு புலம்பிக் கொண்டிருந்தார். “எண்ணன்னே நீ, நல்ல நாள் அதுவுமா இப்படியா? குடிச்சிட்டு கெடப்ப” என்று கோவமாய் பேச, “என்ன விடுல நான் செஞ்ச பாவத்துக்கு, இப்புடி ஒத்தையில கெடந்துத்தேன் சாவனும். நான் ஒரு கொல கார பாவி. உண்ட வூட்டுக்கு ரெண்டகம் நினச்ச பாவில்ல நானு” என்றார்.
அவரின் பேச்சில், “ச் என்னாச்சு உனக்கு? ஏன் இப்புடி பேசிட்டிருக்க. முதல்ல எந்திரி வா” என்று அவரை தூக்க அவர் முயற்சிக்க, “என்னத் தொட்டு உன் கைய கரையாக்கிக்காதல்ல. நான் ஒரு கொல கார பாவி. என்னிக்குமே எமக்குலாம் நிம்மதி கெடைக்காது. இப்படியே நான் செத்துப் போறேன். என்ன விட்டுடு” என்றார்.
“லூசு மாதிரி பேசாத” என்று முருகேசன் சொல்ல, “நெசமாத்தேன்ல சொல்றேன். அத்தைய கொன்னவன் நானு” என்றார் செந்தில். அதைக் கேட்ட முருகேசனுக்கு ஒரு நொடி உலகம் அப்படியே நின்றது.
“என்னல சொல்ற? அத்தைய நீ கொன்னீயா?” என்று கோவமாய் செந்திலின் சட்டையைப் பிடித்தார். “என்ன கொன்னு போட்டுடு. அப்படியாச்சும் எனக்கு நிம்மதி கிடைக்குதான்னு பாக்கேன்” என்று அவர் போதையில் உளற, “உன்ன கொல்லத்தான்ல போறேன். உன்னால என் மாப்புள்ள இன்னிக்கு வர கொலைப் பலிய சுமந்துட்டு நிக்கான்” என்றவர் செந்திலின் கழுத்தைப் பிடித்து நெறிக்க, அதற்குள்ளாக அங்கு வந்த சிவா அவரைப் பிடித்து தடுத்தான்.
“அச்சோ என்ன மாமா பண்ணிட்டு இருக்கீக? அவுகள விடுங்க” என்று முருகேசனை அவன் பிடித்திழுக்க, அதற்குள்ளாக செந்தில் மயக்கத்துக்கு சென்றிருந்தார்.
“என்ன விடுல. இன்னிக்கு இவன நானே என் கையால” என்றவர் மீண்டும் சீறிப்பாய, “ஐயோ மாமா. நான் அண்ணனுக்கு கால் பண்றேன்” என்றான்.
அதில் சற்று அமைதியானவரோ, செந்திலைப் பார்த்தார். அவரோ மயக்கத்தில் இருக்க, இவரால் அவர் சொல்லியதை ஜீரணிக்கவே முடியவில்லை. மனசு ஆறவே இல்லை. கொலையும் செய்து விட்டு, அந்த பலியை இன்னொருவனின் மீது போட்டு விட்டு எப்படி இத்தனை நாள் ஒருவரால் நிம்மதியாக இருக்க முடியும்? கோவமாய் வந்தது. சிவா மட்டும் வராமல் இருந்திருந்தால், நிச்சயம் இன்னேரத்துக்கு செந்திலை கொலை செய்திருப்பார்.
சிவாதான் செந்திலை அங்கிருந்த தோட்டத்து வீட்டுக்கு தூக்கி சென்று படுக்க வைத்தான்.
இங்கே நிலாவும், கதிரும் கோவிலுக்கு வர, அவனின் பார்வை முருகேசனைத் தேடியது.
“இந்தா வந்துடுறேன்னு போனாரு. இன்னும் காணல” என்று செல்வி சொல்ல, “செரிக்கா. நீங்க வாங்க. முதல்ல போயி சாமிய கும்புட்டு வந்திடலாம். இன்னும் நேரம் போச்சின்னா கூட்டம் வந்துடும் சாமிய பாக்க முடியாது” என்றான்.
இருந்தும் செல்வி தயங்க, “அதுவும் செரித்தேன். நீ வா. வேணும்னா, அவரு வந்ததும் இன்னொருக்கா கூட போயி பாத்துட்டு வந்துடு:” என்று தாமரை சொல்ல, அவரும் சம்மதித்தார்.
கதிரோ நிலாவைப் பார்க்க, அவளோ சுற்றி அலங்காரத்தை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில் அவள் கையை அவன் பிடிக்க, அதைக் கவனித்த தாமரையோ, “செல்வி நம்ம முன்னாடி போவோம். அவங்க பின்னாடி வரட்டும்” என்றார். உடனே செல்வியும் அவர்களைப் பார்க்க, நிலாவோ அவர்களுடன் செல்ல முயற்சித்தாள்.
அதற்குள்ளாக, அங்கு இருக்கும் ஒருவனை அழைத்து, “அக்காங்கள தரிசனம் காட்டிட்டு பத்திரமா கூப்டு வரனும். நீ முன்னாடி போயி ஏற்பாட பாரு” என்றவன் நிலாவின் கையை விடவில்லை.
அதில் அவளோ, “மாமா, நானும் சித்தி கூட” என்று சொல்லப் போக, “இத்தன வருஷம் அவுக கூடத்தேன்ன சாமிய பாத்த. இந்த தடவ என் கூட பாரு” என்றான்.
அதன் பின் அவள் எதுவும் சொல்லவில்லை. அமைதியாய் இருந்தாள். அதில் அவனோ, “சாமியவாச்சும் கொஞ்சம் சிரிச்சிட்டே கும்பிடு. அங்கேயும் முறைச்சிட்டே நிக்க வேணாம்” என்று சீண்டலாய் கூறினான்.
அவளோ அப்போதும் அமைதியாய் இருக்க, சட்டென்று அவள் இடையோரம் கைக் கொடுத்து தன் பக்கம் இழுத்தவன், “கதிரு பொண்டாட்டிக்கு இம்புட்டு வீம்பு ஆகாதுடி” என்றான்.
அவனின் செயலில், “அச்சோ மாமா. என்னப் பண்ணிட்டிருக்கீங்க. கைய எடுங்க” என்று சினுங்கினாள்.
“வீட்டுக்கு போற வரைக்கும், சிரிச்சிட்டே இருப்பேன்னு சொல்லு. விடுறேன். இல்லன்னா இப்படியேத்தான் உன் பக்கத்துல நிப்பேன்” என்று கதிர் சொல்ல, அவளோ, “செரி சிரிக்கிறேன். விடுங்க” என்றாள்.
“எங்க சிரி?” என்று அவன் விடாது சொல்ல, “அச்சோ மாமா. ஆறாச்சும் பாத்தா நல்லாருக்காது. கைய எடுங்க” என்றாள்.
“செத்த சிரிச்சா கைய எடுப்பேன்” என்றவன் விடுவதாய் இல்லை. அதில் அவளோ, “செரி மாமா” என்றவள் கஷ்டப்பட்டு சிரிக்க முயல, “இல்லையே இது கதிரு பொண்டாட்டி சிரிக்கிற மாதிரி இல்லையே” என்று வம்பு வளர்த்தான்.
“ப்ளீஸ் மாமா. உறவுக்காரப் புள்ளைகள்லாம் நிக்குது. பாத்தா கேலிப் பண்ணுங்க” என்றாள்.
“கதிரு பொண்டாட்டிய கேலிப் பண்ற தைரிய ஆறுக்கு இருக்கு?” என்று நக்கலாய் கேட்டவன் மீசையை நீவினான். அவனின் செயலில், அவளின் மனம் அவன் மீசையில் படிய, அதை ஒரு நொடி ஆசையாய் பார்த்தாள்.
அவன் மீசையை நீவும் போதெல்லாம், அவள் கண்ணுக்கு பழைய கதிர் தான் கண்ணுக்கு தெரிவான். உண்மையில், அந்த கதிரை நிலாக்கு மிகவும் பிடிக்கும்.
சட்டென்று கோவப்படும் போது அவனுடைய காது சிவக்கும், அதிலும் அழகாய் ஒரு கையால், வேஷ்டியை மடித்து கட்டியப்படி மறு கையால், கம்பு சுத்துபவனின் தோற்றம் இப்போதும் அவள் கண்ணுக்குள் ஓடியது. ஆனால் அந்த கதிரை அவள் பார்த்து கிட்ட தட்ட பல வருடங்கள் ஆகியிருந்தது.
கதிருடைய அம்மா இறந்தப் பின், அந்த கதிரை அவள் பார்க்கவில்லை. “என்னடி? இப்படி பாக்குற?” என்றான். அப்போதே அவள் ஒன்றை கவனித்தாள். இன்று அவன் வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு பேசுவதை.
அதில் அவளோ, “என்ன புதுசா?” என்றாள். “என்னது புதுசா?” என்று கேள்வி கேட்டான்.
அவனின் கேள்வியில், “அதான் டின்னு சொல்றீங்க” என்று அவனைப் பார்த்தாள்.
“வேணும்னா நீயும் என்ன டான்னு சொல்லிக்கோ” என்றப்படி மீண்டும் மீசையை நீவினான்.
அதில் அவள் மனம் மீண்டும் அலைப் பாய, “தென்றல்” என்றான் கதிர். அப்போதே இவ்வுலகம் வந்தவளுக்கு அப்போதே அவனுடன் அத்தனை நெருக்கத்தில் இருப்பதே புரிந்தது.
அதில் அவளையும் மீறி வெட்கம் எட்டிப் பார்க்க, “மாமா விடுங்க” என்றவளின் முகம் சிவந்தது.
“சிரிச்சா விடுறேன்” என்று அவன் அதையே சொல்ல, அவளும் இம்முறை சிரித்தாள்.
அதில் அவள் கன்னம் கிள்ளியவன், “இப்புடி நீ சிரிச்சிட்டே இருக்கனும்” என்றான். “செரி விடுங்க. எல்லாரும் பாக்குறாங்க” என்று அவள் விலக அவனும், “வா” என்று அவளுடன் கோவிலுக்கு சென்றான்.
அவனை அத்தனைப் பேரும் தேடிக் கொண்டிருக்க, அவனோ நிலாவுடன் நின்று சாமியை கும்பிட்டான். அவளுக்குமே மனம் நிறைவாய் இருந்தது. அவனே குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டான்.
அவளோ கையில் இருந்த பூவை அவனிடம் நீட்ட, “என்ன? இத நான் வச்சிக்கனுமா?” என்றான்.
அதில் அவனை முறைத்தவளோ, “வச்சி விடுங்க” என்று திரும்பி நின்றாள். “வீட்டுல மட்டும் நீயே வச்சிக்கப் போன” என்றான். “சாமி பூ மாமா வச்சி விடுங்க” என்று அவள் சொல்ல, அவனும் சிரித்தப்படி அவள் தலையில் வைத்து விட்டான்.
அதற்குள் கதிரை ஊர் பெரியவர் அழைக்க, அவனோ, “நீங்க முத போங்க. நான் வரேன்” என்றான். அவர் சென்றதும் நிலாவோ, “சாமி பாத்தாச்சுத்தான மாமா. நீங்க போயி உங்க வேலைய பாருங்க” என்றாள்.
“ம் என் பொண்டாட்டிய பத்திரமா கொண்டு போய் வீடு சேர்க்கிற வரைக்கும் நான் எங்கேயும் போ மாட்டேன்” என்றான்.
“மாமா விளையாடாதீங்க. நீங்கப் போனாத்தேன் செரியா இருக்கும்” என்றாள். “நீத்தேன்ன சொன்ன. என் கூட திருவிழா பாக்கனும்னு” என்றான்.
அதில் அவனைப் பார்த்தவளோ, “இன்னிக்கு கொடி கட்டுத்தேன்ன மாமா. அதேன் இவ்வளவு நேரம் என் கூடத்தேன்ன இருக்கீங்க. அதுவே போதும். இன்னும் பத்து நாள் திருவிழாத்தான்ன மாமா” என்றாள்.
“ஆனாலும் என் பொண்டாட்டிய” என்று அவன் ஏதோ பேசப் போக, “கதிரு பொண்டாட்டிய யாரும் தூக்கிட்டு போயிட மாட்டாங்க. நீங்கப் போயி, சாமி வேலைய பாருங்க” என்று மனைவியாய் அதிகாரமாய் கூறினாள்.
அவள் பேச்சில் தெரிந்த அதிகாரத்தில், “என் பொண்டாட்டி பேச்ச கேட்காம இருக்க முடியுமா? செரி வா. நான் உன்ன அக்காட்ட விட்டுட்டு போறேன்” என்றான்.
அதற்குள்ளாக, கதிரை மீண்டும் சிலர் அழைக்க, நிலாவோ, “மாமா, நான் ஒன்னும் சின்னப் புள்ள இல்ல. நானே போயிப்பேன். நீங்க அங்க போங்க” என்றாள்.
“செரிங்க கலெக்டர் மேடம்” என்று சொல்லியவன் அவள் நெற்றி முட்ட, “மாமா” என்று சுற்றிப் பார்த்தாள்.
அவனோ மெல்ல சிரித்தப்படி, “நான் குங்குமம் வச்சி விட்டேன். நீ வச்சி விடலத்தேன்ன. அதேன் நானே வச்சிக்கிட்டேன். எப்படி சரியா இருக்கா?” என்று அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தை தன் நெற்றிக்கு இடம் பெயர்த்துக் கேட்டான்.
அவனின் செயலில், அவன் உயரத்துக்கு எக்கி, சற்று கோனலாய் இருந்ததை சரி செய்தாள்.
அதில் அவனோ அவளுக்கு குனிந்து கொடுக்க, “வச்சி விட சொன்னா வச்சி விடப் போறேன்” என்று கையில் இருந்த மீத குங்குமத்தை எடுத்து அவனுக்கு அழகாய் பூசி விட்டாள்.
பின்பு மெல்ல ஊதி விட, அவனின் மனமோ மனைவியிடம் தடுமாறியது. அதற்குள்ளாக ஊர் காரர்கள் அழைக்க, “உன்ன வூட்டுல வந்து பார்த்துக்கிறேன்” என்றப்படி அங்கிருந்து சென்றான்.
அதைப் பார்த்து நிலா அழகாய் சிரிக்க, அதை இரண்டு விழிகள் கோவமாய் பார்த்தது. நிலாவோ அங்கிருந்து வெளியில் வரப் பார்க்க, “ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல” என்ற பிரியாவின் குரலில் திரும்பி பார்த்தாள்.
அவளைப் பார்த்ததும், நிலாவோ, “சந்தோஷமா இருக்கிறது தப்பு ஒன்னும் இல்லையேக்கா” என்றாள்.
“என்ன? அடுத்தவ வாழ்க்கைய பறிச்சிட்டு நக்கல் பண்றீயா? எத்தன நாளைக்கு நீ இப்படி குற்ற உணர்ச்சி இல்லாம வாழ்றன்னு நானும் பாக்குறேன்” என்றாள் பிரியா.
அதில் அவளோ அசராமல், “யார் வாழ்க்கையையும் யாரும் பறிச்சிட்டு போக முடியாதுக்கா. நமக்குன்னு என்ன இருக்கோ, அது தான் நமக்கு கிடைக்கும்” என்றாள்.
“என்னடி கதிர கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ற திமிரா?” என்று பிரியா கோவமாய் கேட்க, “என் மாமாவ கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எனக்கு பெருமைத்தான். அது உங்க கண்ணுக்கு திமிரா தெரிஞ்சா நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
“ஹேய்” என்ற நிலா அவள் கையை அழுத்திப் பிடிக்க, அவள் போட்டிருந்த கண்ணாடி வளையல் சரசரவென உடைந்திருக்க, “மாமா” என்று மனதினுள் கூறினாள் நிலா.
அங்கே கொடிப் பட்டத்தைப் பிடித்திருந்த கதிரின் மனம் வேகமாய் துடிக்க, “நிலா” என்று அவனையும் மீறி கூறினான்.
“கைய விடுங்க” என்று நிலா வலியை உள்ளடக்கி சொல்ல, “விட முடியாது என்னப் பண்ணுவ?” என்று கேட்ட பிரியா மேலும் மேலும் அவள் கையை அழுத்திப் பிடிக்க, உடைந்த வளையல் பட்டு கையில் இரத்தம் சிந்தியது.
“தப்பு பண்ணிட்டிருக்கீங்கக்கா” என்று நிலா பொறுமையை இழுத்துப் பிடித்து சொல்ல, “நான் தப்பு பண்ணேன் தான். எப்போ தெரியுமா? உன்ன என் கதிரு கூட சேர்த்து பாத்தப்பையே, உன்னை நான் அவர் வாழ்க்கையில இருந்து அனுப்பியிருக்கனும். சின்னப் பொண்ணுன்னு நினைச்சி அசால்டா இருந்துட்டேன். ஆனா அந்த தப்ப இனி நான் பண்ண மாட்டேன். உன்ன நான் என் கதிரோட வாழ விட மாட்டேன். கதிர் எனக்குத்தேன் சொந்தம்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவள் கையில் இருந்த தன் கையை உறுவியவள், அடுத்த நொடி பளாரென்று பிரியாவின் கன்னத்தில் அடித்திருந்தாள்.
(இன்னும் நாலு அடி சேத்து போடும்மா. இவ எல்லாம் திருந்தவே மாட்டா. இது மட்டும் எங்க கதிரு மாமாக்கு தெரிஞ்சிச்சு. அப்போ இருக்கு பிரியா உனக்கு. செரி அடுத்து என்னாவப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Thiruviswa Viswa
hello
Indra Rajendran
where’s next
Yasarath Yazar
pls upload today episode
Yasarath Yazar
May 27, 2025pls sis
Anandhi G
today episode pls
Keerthi Keerthi
today episode…..?
gayathri Shini
excellent sister
Yasarath Yazar
semmaya irukku sis
Thiruviswa Viswa
super
kathiroda pondati summava???
terror ache 🔥🔥🔥🔥
Ramya Ramya
super sis 💞