அர்ஜூன் மொத்த கிளாஸையும் பார்த்து கிட்ட தட்ட கர்ஜித்துக் கொண்டிருக்க, பூஜாவோ, கன்னத்தில் கை வைத்து அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.
“ஹே பூஜா” என்று பிரியா அவளைப் போட்டு உழுப்பும் போதுத்தான், “ச் என்ன?” என்றாள்.
“என்னவா? அங்க நடக்கிற கலவரத்துக்கே நீத்தான் காரணம். அது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது. அவ்வளவுத்தான்” என்றாள்.
அப்போதே மீண்டும் அவனைப் பார்த்தாள். அவனோ, “இப்போ மட்டும் இத யார் பண்ணதுன்னு சொல்லலன்னா, அதுக்கப்புறம், உங்க எல்லாரோட ஹேண்ட்ரைட்டிங்கையும் செக் பண்ண வேண்டியிருக்கும்” என்றான்.
அவ்வளவுத்தான் விஷ்வாவுக்கெல்லாம் இதயம் துடிப்பை நிறுத்தியிருந்தது. “ஐயோ! போச்சு போச்சு” என்று அவன் வியர்த்து வடிய, “என்னாச்சு சுவா? அந்தப் பக்கம் காத்து வரலையா? இந்த பக்கம் வேணும்னா வந்து உட்காருறீயா?” என்று கேட்டாள் பூஜா.
அதில் விஷ்வாவோ அழாத குறையாய் பூஜாவை பார்க்க, அதற்குள் அர்ஜூனோ, “இப்போ நீங்களே ஒத்துக்கிட்டீங்கன்னா, வெறும் வார்னிங்கோட விட்டுடுவேன். இதுவே நானா கண்டுப்பிடிக்கிறப்ப, அதோட விளைவு ரொம்ப மோசமா இருக்கும்” என்றான்.
அதில் பிரியாவோ, “ஹேய் பேசாம வாங்க இப்பவே சொல்லிடலாம்” என்று சொல்லியப்படி எழ முயற்சிக்க, விஷ்வாவோ, “இல்ல இல்ல. அதுல இருக்கிறது என் கையெழுத்துத்தான. அதனால நானே அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்றான் விஷ்வா.
இங்கே அர்ஜூனோ, “உங்க கிட்ட தான கேட்கிறேன். இத எழுதுனது யாரு?” என்று அத்தனை கோவமாய் கேட்டான். அவன் கோவத்தைப் பார்த்த விஷ்வாவோ அன்னிட்சையாய் எழப் போக, அதற்குள் அவனுக்கு முன் பூஜா எழுந்து நின்றிருந்தாள்.
அதில் விஷ்வாவோ, “ஹே பூஜா” என்று அதிர்ச்சியாய் அழைக்க, அங்கே அர்ஜூனுக்கும் கூட அதே அதிர்ச்சித்தான்.
மொத்த கிளாஸும் அவளைப் பார்த்திருக்க, இப்போது அந்த பிரதன்யாவோ, “பாத்தீயா, இவளாலத்தான் இப்போ நம்ம கிளாஸுக்கே பிராபளம். எவ்வளவு தைரியமா எந்திரிச்சு நிக்கிறா பாரு” என்றாள்.
“ஆமாடி. அப்படி இவ என்ன எழுதியிருப்பா?” என்று இன்னொருவள் கேட்க, “எப்படியும் இன்னிக்கு அர்ஜூன் சார்கிட்ட மாட்டிக்கிட்டாத்தான்ன. எப்படியும் டிசி வாங்கி கொடுத்திடுவாரு” என்று சந்தோஷப்பட்டாள் பிரதன்யா.
அங்கே அர்ஜுனோ, தன் கையில் இருந்த பேப்பரையும் அவளையும் மாறி, மாறிப் பார்த்தான்.
“ஹேய் நீ” என்றவனுக்கு ஏனோ இத்தனை நேரம் இருந்த சத்தம் சற்று குறைந்துத்தான் போனது. ஆனால் அவளோ, “அது என்ன பேப்பர் சார்? அதுல அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில், இப்போது அர்ஜூனோ, அவளைப் பார்க்க, மற்ற பேருமே அவளைத் தான் பார்த்தனர். “இல்ல. கம்பிளைண்ட் பாக்ஸ்ல. எல்லாருமே ஏதாச்சும் எழுதி போட்டிருக்கத்தான் செய்வோம். நீங்க திடீர்னு வந்து, கேட்டா, எதுக்காக நீங்க கோவப்படுறீங்கன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அப்பாவியாய் உதடு குவித்து அவள் கேட்க, பிரியாவும், விஷ்வாவும் வாயில் கையை வைத்தனர்.
“அடிப்பாவி! உனக்கு தெரியாதா? அதுல நீ என்ன எழுதியிருந்தேன்னு” என்று மனதிற்குள் பிரியா கேட்க, விஷ்வாவுக்குமே அதுத்தான் ஓடியது.
ஆனால் அர்ஜூனுக்கோ சட்டென்று அதை சொல்ல முடியவில்லை. ஏனெனில். அவன் கையில் இருந்த பேப்பரில், அர்ஜூனுக்கு அல்லவா, யாரோ காதல் கடிதம் வரைந்து வைத்திருந்தார்கள். அதை எப்படி அவன் மற்றவர்களின் முன் சொல்வான்? அதனால் தானே அவளும் கேட்டாள்.
இப்போது அவனோ, “படிப்பு சம்பந்தமாவோ? இல்ல உங்க ஸ்டடீஸ டிஸ்டர்ப் பண்ற மாதிரி, ஏதாச்சும் இஸ்யூ இருந்தாத்தான், அந்த கம்பிளைண்ட் பாக்ஸ யூஸ் பண்ணனும். அத விட்டுட்டு கண்டத அதுல எழுதிப் போடக் கூடாது” என்றான்.
அதில் பூஜாவோ, “நானும், நீங்க என்னை டிஸ்டர்ப் பண்றீங்கன்னுத்தான சார் அதுல எழுதியிருக்கேன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஆனாலும் அதை வெளிக்காட்டாது, “அந்த கம்பிளைண்ட் பாக்ஸ நாங்க மட்டுமே யூஸ் பண்றது இல்லையே சார். அதர் டிபார்ட்மெண்ட் பசங்க கூட யூஸ் பண்றாங்க” என்றாள் பூஜா.
அதில் அர்ஜூனுக்கோ அடுத்து என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவள் சொல்வதிலும் நியாயம் இருக்க, இப்போது அவனோ, “அப்போ இந்த கிளாஸ்ல யாரும் பண்ணல அப்படித்தான?” என்று கேட்டான்.
“இன்னும் நீங்க அதுல என்ன எழுதியிருக்குன்னு சொல்லவே இல்லையே சார்” என்று அவள் அப்பாவியாய் கேட்க, அதில் அவளை முறைத்தவனோ, “இத நீங்க யாரும் பண்ணல இல்லையா? அப்போ, கிளாஸ கவனிங்க” என்றப்படி அந்த பேப்பரை சுக்கு நூறாய் கிழித்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசினான்.
“ச்சே ச்சே தீர்வு கிடைக்காம போச்சே” என்று பூஜா நக்கலாய் பிரியாவின் காதில் கிசுகிசுக்க, “ஹேய்! உட்காருடி” என்று பிடித்திழுத்தாள்.
ஆனால் அவளோ, அதை செய்யாது, “சார்” என்று மீண்டும் அழைக்க, அதில் திரும்பி அவளைப் பார்த்தவன், “வாட்?” என்று எரிச்சலாய் கேட்டான்.
“ரெஸ்ட் ரூம் போனும் சார்” என்று அவள் சொல்ல, அதில் மற்றவர்கள் சிரிக்க முயல, அவனோ, “ஹோ” என்று சொல்லியப்படி மீண்டும் திரும்பிக் கொண்டான்.
இப்போது பூஜாவோ பிரியாவிடம், “நான் போயி சூடா பஜ்ஜி சாப்டு வரேன். நீங்க கிளாஸ முடிச்சிட்டு பொறுமையா வாங்க” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றிருந்தாள்.
அவளின் இந்த துணிச்சலான பேச்சு, சிலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தாலும். பலருக்கு பொறாமையைத்தான் கொடுத்தது.
அதிலும் பூஜா வேறு சில சீனியர்களிடம், பிரச்சனையை வேறு வளர்த்து வைத்திருந்தாள். இப்படி பிரச்சனைகளோடு கல்லூரி சென்றாலும், நாளுக்கு நாள் பூஜாவுடைய சேட்டை கூடியதே தவிர குறையவே இல்லை.
இப்படியே கிட்ட தட்ட அடுத்த இரண்டு வாரம் சென்றிருந்தது. பூஜாவும், அர்ஜூனும் கல்லூரியில் சந்தித்துக் கொள்வதோடு சரி. வீட்டில் எதிர் எதிர் துருவங்கள் தான். வீட்டுக்கு அடிக்கடி வரும் மாதவனையும் வர விடாது தடுத்துப் பிடித்திருந்தான். சில நேரங்களில் மாதவனுடைய பிளாட்டுக்கு சென்று தன் செயலி வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதனால் பூஜாவை கவனிக்க அவனுக்கு நேரம் இருந்திருக்கவே இல்லை.
அர்ஜூன் ஏதாவது சமைத்து வைத்திருப்பான். இல்லை என்றால் பூஜாவே ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்வாள். அவனுக்கு ஒரே ஒரு முறை சேர்த்து ஆர்டர் செய்தாள்.
அதற்கு அவனோ, “இங்கப்பாரு. இங்க ஜஸ்ட் நீ ஒரு கெஸ்ட் மட்டும் தான். உனக்கு ஹாஸ்டல்ல சீட்டு கிடைச்சிடும். கெளம்பி போகப் போற. சோ தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாத” என்று சொல்லிவிட்டான். அதன் பின் தெரியாமல் கூட பூஜா அவனுக்கென்று எதுவுமே செய்வதில்லை.
அர்ஜூனும், பூஜாவை கண்டுக் கொள்ளாததால், அவளுமே தாமதமாய் வீட்டுக்கு வருவது, ஊர் சுற்றுவது என்று சுற்றிக் கொண்டிருந்தாள். எல்லாம் நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது.
அந்த ஒரு நாள் வரும் வரை.
அன்று அரசாங்க விடுமுறை நாள். அதனால் காலையிலேயே அர்ஜூன், தன்னுடைய அறைக்குள் மூழ்கியிருந்தான். பொதுவாகவே, அவன் வீட்டில் பூஜா இருக்கும் திசைப் பக்கம் செல்வது இல்லை.
ஆனால் இப்போது அவனுடைய ஒட்டு மொத்த கவனத்தையும் சிதறடிப்பது போல், அவளுடைய தொடர் இருமல் சத்தம் அவன் அறை வரைக் கேட்டது.
முதலில், “நைட் நேரத்துல ஐஸ்கீரீம் சாப்பிட கூடாதுன்னு சின்ன புள்ளைக்கு கூட தெரியும்” என்று சொல்லியப்படி தன்னுடைய வேலையில் மூழ்கினான்.
ஏனெனில் குப்பைத் தொட்டியில் கிடந்த ஐஸ்கிரீம் பாக்ஸ் அவனை அப்படி பேச சொல்லியது.
முதலில் கண்டிக்கத்தான் நினைத்தான். அதன் பின், “ச் அவ மேலத்தான் உனக்கு எந்த அக்கறையும் இல்லத்தான” என்று மனசாட்சி கேட்க, அவனுடைய ஈகோவில் அதைக் கேட்கவில்லை.
இப்போதும் அவன் அறைக் கதவை நன்றாக சாத்திவிட்டு வேலையில் மூழ்கியிருக்க, சற்று நேரத்தில் அவனுடைய அறைக் கதவு விடாமல் தட்டப்பட்டது.
முதலில் அதைக் கண்டுக்கொள்ளாது அவன் இருக்க, இப்போது பயர் அலாரம் பிளாட் முழுவதும் அடிக்க, அதிர்ந்து அறையை விட்டு வெளியில் வந்தான்.
வெளியில் வந்தவன் கண்டது, அவன் வீடு முழுவதும் புகை மூட்டமாய் இருப்பதைத்தான். ஒரு நொடி அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அதற்கு நடுவில், “லொக் லொக்” என்ற பூஜாவின் இருமல் சத்தம் வேறு கேட்க, அவன் என்ன என்று பார்க்கும் முன்பே, மாதவனிடம் இருந்து விடாமல் அழைப்பு வந்தது.
“என்னப் பண்ணிட்டு இருக்கா இவ?” என்றவன் வேகமாய் கிச்சனை நோக்கி செல்ல, அங்கே அவனின் மனைவியோ மயங்கி கிடந்தாள்.
ஒரு நொடி அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “ஹே பூஜா” என்று ஓடி சென்று அவளைத் தூக்க, அதன் பின்னே அடுப்பில் கரிந்துக் கொண்டிருந்த பாத்திரத்தைப் பார்த்தான். “ஓ சிட்” என்றவன் அவசரமாய், அதை அணைத்து விட்டு, இவளை தூக்கி சென்று அறையில் படுக்க வைத்தான்.
பின் வேகமாய் அங்கிருந்த விண்டோ எல்லாவற்றையும் திறந்து விட்டவன், பிளாட் கதவைத் திறக்க, அங்கே அந்த அபார்ட்மெண்ட் வாசிகள் அத்தனைப் பேரும், பயர் ஸ்டேசனுக்கு கால் செய்யும் முயற்சியில் இருக்க, மாதவனோ, “என்னாச்சுடா” என்று அத்தனைப் பதட்டமாய் கேட்டான்.
இப்போது அர்ஜூனுக்கே எதுவும் புரியவில்லை. ஏனெனில், இந்த புகைக்கா பயர் அலாரம் அடித்தது? சில நொடி அவன் அப்படியே நிற்க, “டேய் அர்ஜூன்” என்று அவனைப் போட்டு உழுப்பினான்.
“ஆ.ங் இப்போ எதுக்கு எல்லாரும் இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என்று அர்ஜூன் கேட்க, “உங்க பிளாட்ல இருந்துத்தான் சார், பர்னிங் ஸ்மெல் வந்தது” என்று ஒருவர் சொல்ல, “அது ஒன்னும் இஸ்யூ இல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “இதுக்குத்தான், பேச்சுலர் பசங்களுக்குலாம் ரெண்ட்க்கு விடாதீங்கன்னு சொன்னோம்” என்று ஒரு பூமர் அங்கிள், சொல்ல, இப்போது மாதவனோ, “அப்படின்னா? உங்க பொண்ண வேணும்னா கட்டிக் கொடுத்து பேமிலி மேன் ஆக்குறீங்களா” என்றான்.
“டேய்” என்று அர்ஜூன் முறைக்க, “அப்புறம் என்னடா? சும்மா சும்மா என்ன நடந்தாலும் இதையே சொல்லிட்டு, ஆமா, உள்ள என்னாச்சு?” என்றப்படி உள்ளே செல்ல முயன்றான் மாதவன்.
“ஆ.ங் ஒன்னும் இல்ல. அது ஜஸ்ட் பால் தீய்ஞ்சு போச்சு அவ்வளவுத்தான்” என்றப்படி அர்ஜூன் அவனை உள்ளே விடாது தடுக்க, “அப்புறம் எப்படி பயர் அலாரம் அடிச்சது” என்று அபார்ட்மெண்ட் செக்ரட்ரி கேட்டார்.
அவனுக்குமே அதுத்தான் கேள்வி. “வேற எங்கேயும் அப்போ பயர் ஆகிடுச்சா?” என்று தங்களுக்குள் அவர் யோசிக்க, அங்கே அர்ஜூனின் கட்டிலில் அமர்ந்து, மீதி இருந்த ஐஸ்கீரீம்மை சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ, “இன்னுமா Fire truck வரல” என்று தனக்குள்ளே கேட்டாள்.
(ரொம்ப பெருமையா இருக்குமா பூஜா. ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவரு. சரி இப்போ எதுக்கு பூஜா இந்த வேலைய பார்த்தா? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம உங்க கருத்த சொல்லிடுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க. அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)
தொடரும்…
Indhu Mathi
super 👌❤
Ammu Antony
aiyoi Panam Arjun neeyiiii pooja nee vara level pa keep going your writing ✍ pa
Pooja unakku friend da vantha 2 au ptandies
priya and Vishu good luck baby’s Arjun kka🤮🤮😏😏 eppdi ungka padu 🤔🤔🤔🤔 iam waiting ✋️
Keerthi S
aiyo pooja kutty nee vera level 🤣
G Srimathy
போகப்போக சேட்டை அதிகமாகுதே பூஜாக்கு..
Jebaselvi Jeba
சூப்பர் ♥
Ammu Sathish
சூப்பர்.. intersting.. waiting for next ud..
Mathan Aarthe
wow super pa ❤
Devi Saravanan
ennama pooja neenga ippadi panreengale ma
Indira Gandhi
pooja ema arjuna patharaviyra avam laithu lacoola ice crem vera😎
Santhanalakshmi S
super sissymaa🎉🎉🎉pooja ma vera level ne letter ezhudhi pottu onum theriyadha madhiri kelvi kettu angry bird arju vathi off pannita🤭🤭🤭ayyoooo pavam vishu priya vum 😂😂😂😂pooja ma unaku nijama udambu sarilanu konjam neram pakkunu aytu vathi unna kandukkama irukarunu😳😌😌😁ana ne ena velai pathuruka pathiya idu mattum andha vathi ku therinchu un soli mudinchu🤣🤣🤣🤣🤣
Rajam Sakthi
nan kuda payanthuten poojaku udambu sari illa nu. but eppa than puriuthu eva sariyana kurumbu kaari thannnn. hahaha paavam namba professor sir. avarku ennum neraya treatment kudu ma.
Ponmalar M
Aiyoo pavam Arjun 😅😅😅😅pooja nee varalevel po 😍😍🥰🥰🥰😅😅😅
Vedha Hani
vadivelu solra maari innum ennellam seiya kaathurukkalo theriyala 😂😂😂😂pooja🔥🔥🔥🔥🔥
Ammu Gnanarajan
papa settai kudi pochu
Vel raj
please upload lengthi episode…..
Priya Ranjithkumar
vara vara pooja settaikku alavu illama poiduchu😂😂😂😂