வரம் – 21

தாமதமாய் வந்த பூஜாவிடம் வந்த பிரியாவோ, “ஹேய் உனக்கு எத்தன தடவ கால் பண்றது? போன் எடுக்க மாட்டீயா நீ?” என்று கேட்டாள். “ச் வர்ற வழியில, ஒரு பிரச்சன” என்று பூஜா சொல்ல, “என்னது மறுபடியும் பிரச்சனையா?” என்று பிரியா அதிர்ச்சியாக, “யாருக்கு? என்ன பிரச்சன?” என்று கேட்டப்படி விஷ்வாவும் அங்கு வந்தான்.

அதில் அவளோ, “ச் இத பூங்கொடி மேடம்கிட்ட கொடுத்துடுங்க. நான் போயி, வெல்கம் ஸ்பீச் ப்ரீபர் பண்றேன்” என்றப்படி அவள் சென்றது என்னவோ அர்ஜூனைத்தான்.

“அவ்ளோ டார்க்கா கூட போடலையே. அப்புறம் எப்படி சார் சட்டையில ஒட்டிச்சு” என்றவள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னுடைய உதட்டைப் பார்த்தாள்.

“ஹேய் முதல்ல அத போயி அவர்கிட்ட சொல்லு” என்று மனம் எச்சரிக்க, “ஐயோ அத மறந்துட்டேன்னே” என்றவளும் வேகமாய் அர்ஜூனைத் தேடினாள்.

அங்கே அடுத்தடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்தவன் கெஸ்ட் வரும் நேரம் ஆனதும், கையில் பூங்கொத்துடன் வாசலை நோக்கி சென்றான்.

“ஐயோ. இவரு வேற அங்கப் போறாரே” என்று யோசித்தப்படி, அவனை துரத்திக் கொண்டு செல்ல, அதற்குள் கெஸ்டுடைய கார் அங்கு வந்து நின்றது. அவன் கதவைத் திறக்க கை வைக்க, அதற்குள் அவனுக்கு முன்னே வந்து அவனை மறைக்க முயன்றாள் பூஜா.

சட்டென்று அவள் வந்து நிற்க, “என்னப் பன்ற நீ” என்று சிடுசிடுக்க, “இல்ல சார் மேடம் தான் வெல்கம் பண்றதுக்கு அனுப்பி வச்சாங்க” என்று உளறியவள், கிட்ட தட்ட அவனின் முன்னே அவன் சட்டையை மற்றவர் பார்க்காதவாறு எக்கி நின்றாள்.

அவளுடைய செயலில் எரிச்சலானவனோ, கெஸ்ட் இருப்பதால், அவளிடமே பூங்கொத்தை கொடுத்துவிட்டு சற்று விலகி நின்றான். அவளுமே அவர்களுக்கு பூங்கொத்தை நீட்ட, அவர்களும் வாங்கிக் கொண்டு அர்ஜூனைப் பார்த்தனர்.

“வாங்க சார்” என்று அவனும் அழைக்க, இப்போது பூஜாவோ அவனை விட்டு நகராது அவனோடே நடந்தாள். அதில் இன்னும் இன்னும் கடுப்பானவனோ, “ஹேய் என்னப் பண்ணிட்டிருக்க நீ?” என்று மெதுவாய் கர்ஜித்தான்.

“சார். உங்க சட்ட” என்றவள் சொல்லும் முன்னே, “ச் என்ன விட்டு தள்ளியே இருன்னு சொன்னா உனக்கு புரியாதா? டோண்ட் கிராஸ் யுவர் லிமிட். அப்புறம் என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று திட்டிவிட்டு அங்கிருந்து ஸ்டேஜ் அருகில் சென்றிருந்தான்.

இப்போது இவளுக்கும் கோவம் வந்து விட, “எனக்கென்ன போங்க. உங்க மானம் தான் போகும், எனக்கொன்னும் இல்ல” என்றவள், உதட்டை சுழித்து சொல்லிவிட்டு அவள் வேலையைப் பார்க்க சென்றாள்.

இங்கே, அர்ஜூனோ, “ச் அவளுக்கு நான் தேவையில்லாம நிறையா இடம் கொடுத்து வெச்சிருக்கேன். அதான் இப்படி எல்லாம் பன்ணிட்டி இருக்கா. பங்சன் முடியட்டும். மொத்தமா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சுக்கிறேன்” என்று தனக்குள்ளே முனுமுனுத்தவன், எதிரில் வந்த மாதவனை கவனிக்காது மோதினான்,

“ஹேய்” என்று மாதவன் பேசும் முன்னே, “கண்ணு தெரியாதா உனக்கு? இப்படியா வந்து மோதுவ? கொஞ்சம் கூட கவனமே கிடையாதா?” என்று பூஜா மேல் இருந்த கோவத்தையும் அவனின் மேல் கொட்டிவிட்டு, அவன் நகர, இவனோ, “ஏண்டா? வந்து மோதுனது அவன். என்ன திட்டிட்டு போறான்” என்று அவனைப் பார்த்தான்.

அப்போதே அவன் சட்டையில் ஒட்டியிருந்த லிப் மார்க்கை கவனித்தவன், “இவன் சட்டையில என்னது லிப் மார்க்? ச்சே ச்சே. ஒரு வேள டிசைனா இருக்குமோ?. இப்படி எல்லாம் இவன் எடுக்க மாட்டான்னே” என்று மும்முரமாய் யோசித்தான்.

அதற்குள் வெல்கம் டான்ஸ் ஆரம்பமாகியிருக்க, அவனுடைய கவனமும் ஸ்டேஜூக்கு சென்றது. அர்ஜூனை மேடையில் அமர்ந்திருந்த பிரின்சிபல் அழைக்க இவனும் செல்ல முயன்றான்.

அதற்குள்ளாக அவன் கையைப் பிடித்து தடுத்தாள் பூஜா. அவள் தொடுகையிலேயே அது அவள் தான் என்று உணர்ந்தவன் கோவமாய், “ஹேய் உனக்கு ஒரு தடவ சொன்னா” என்று சொல்லி முடிக்கும் முன்னே, கையில் இருந்த ரோஜாவை அவனுடைய சட்டை பாக்கெட்டில் குத்திவிட்டாள்.

அதில் அவளின் விரல் பட்டும் படாமல், அவன் நெஞ்சை அழுத்த. அவனுடைய இதயம் ஒரு நொடி இளக முயன்றது. அதிலும் மீண்டும் அவளுடைய அந்த நெருக்கம். இப்போது அவனை மேலும் மயக்க வாகாய், தலையில் மல்லிகை சரத்தை வேறு வைத்திருந்தாள்,

அதன் வாசனையும் சேர்ந்து அவனை அவள் பக்கம் வெகுவாய் இழுக்க, “ஹேய் அர்ஜூன். என்னப் பண்ற” என்று தன்னைத் தானே நொந்தவன் அவளை முறைத்தான்.

“எல்லாருக்கும் கொடுக்கிற வெல்கம் கிப்ட் சார்” என்று சிறு புன்னகையுடன் சொல்ல, அதன் பின்னே சுற்றிப் பார்த்தான். அனைத்து ஆசிரியருமே கையில் ரோஜாவுடன் நின்றிருக்க, அதில் சற்று தணிந்தான்.

ஆனாலும் கூட ஏனோ அவள் கையால் மற்றவருக்கு குத்தி விடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதில் கோவமாய், “கையில கொடுத்தா போதும். குத்திவிடனும்னு அவசியம் இல்ல” என்று திட்டினான்.

அதில் அவளின் மனமோ, “க்கும் நானே லிப் மார்க்க கவர் பண்றதுக்கு என்னவோ பண்ணி வச்சிருக்கேன். பங்சன் முடியிற வரைக்கும் பூ விழாம இருந்தா சரி” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டது.

அவள் அமைதியாய் இருக்கவும், இவனோ, “இதுக்கடுத்து நீத்தான, வெல்கம் ஸ்பீச் கொடுக்கனும். இத வேற யார்ட்டையாச்சு கொடுத்துட்டு நீ ஸ்டேஜூக்கு போ” என்று விரட்டினான்.

“அப்போ நீங்களே கொடுத்துடுங்க சார்” என்று சொல்லி அவன் கையில் அந்த பூத்தட்டை கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் பூஜா.

அவளின் சேட்டையில் அவன் முறைக்க நினைக்க, அதற்குள் அங்கு வந்த மாதவனோ, “இன்னிக்கு என்னடா நடக்குது இங்க? என் கண்ணையே என்னால நம்ப முடியல. வழக்கமா புக்கும் கையுமா நிக்குறவன், இன்னிக்கும் பூவும் கையுமா நிக்குறான்” என்றான்.

அதில் இப்போது பூஜாவின் மீதிருந்த மொத்த கடுப்பையும், அவனிடம் காட்டி, திட்டி முடித்து அதை அவன் கையிலேயே கொடுத்து விட்டு நகர்ந்திருந்தான்.

இங்கே இவனின் மனமோ, “ச்சே ச்சே இந்த அவமானம் எல்லாம் தேவையா?” என்றப்படி அந்த பூவுடன் அங்கிருந்து சென்றான்.

இப்போது அர்ஜூனின் கண்களிலோ ஸ்டேஜில் நின்றிருந்த பூஜாத்தான் விழுந்தாள். அதில் அடுத்த அடி எடுத்து வைக்காது, அவளையே பார்த்திருந்தான். ஏனோ காலேஜில் மற்ற பசங்களின் பார்வை கூட அவளின் மீதுத்தான் இருந்தது.

அதைப் பார்த்தவனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. “இவள யாரு புடவை எல்லாம் கட்டிட்டு வர சொன்னது” என்று தனக்குள்ளே சிடுசிடுத்தான். 

“என்ன கண்ணா? பொண்டாட்டி மேல பொசஸிவ் எல்லாம் வருது போல” என்று அவனுடைய ஒரு மனம் கிண்டல் செய்ய. “ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல. மத்த ஸ்டூடண்ட் எப்படியோ? அப்படித்தான் அவளும்” என்றவனின் கரம் அன்னிட்சையாய் அவள் குத்தி விட்ட அந்த ரோஜாவை மெதுவாய் வருடியது.

அதற்குள், “சார்” என்று சக ஆசிரியர் அழைக்க, அவனும் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். அதன் பின் அனைத்து நிகழ்ச்சிகளும் அவன் நினைத்தது போல நன்றாகவே சென்றது.

ஆனால் அதெல்லாம் கடைசி பாடல் வரிக்காக, ஸ்டேஜில் குதித்த மாணவர் கூட்டத்தைப் பார்க்கும் வரை மட்டும் தான். ஆம் அவனுடைய லிஸ்டில் சுத்தமாய் இல்லவே இல்லாத நிகழ்ச்சி இது. இதை யார் செய்தது? என்பதைத் தாண்டி, இதென்ன குரங்கு கூட்டம் போல் ஒரு ட்ரஸ்” என்றுத்தான் அதைப் பார்த்தான்.

அவன் மட்டும் அல்ல, அங்கிருந்த மற்றவர்களும் கூட அதைத்தான் வினோதமாக பார்த்தனர். அர்ஜூன் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில், இப்படி காமெடி நடப்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

“என்ன சார் இது?” என்று அர்ஜூனிடம் ஒருவன் கேட்க, இப்போது அர்ஜூனோ வேகமாய் கையில் இருந்த நிகழ்ச்சி குறிப்பைப் பார்த்தான். அதில் இந்த நடனம் இல்லவே இல்லை. உடனே வேகமாய் பாட்டு ஒலிப்பரப்பாகும் இடத்துக்கு நகர்ந்தான்.

ஆனால் அதற்குள்ளாகவே, “நான் ரெடி தான்” என்ற பாடல் சத்தமாய் ஒலிப்பரப்பாக, அத்தனைப் பேரும் ஸ்டேஜைப் பார்த்தனர். அங்கே இப்போது ஒவ்வொரு மாணவர்களாக, தாங்கள் அணிந்திருந்த முகமூடியை கழட்டிவிட்டு, அங்கிருந்த ஆசிரியர் ஒவ்வொருவராய் அழைத்து வந்து அவர்களிடம் ஒரு சீட்டை நீட்டினர்.

அவர்கள் குழப்பமாய் பார்க்க, இப்போது, மைக் முன்னே நின்றிருந்த பூஜாவோ, “இது ஸ்டூடண்ட்ஸ் நாங்க எங்க ஸ்டாப்ஸ்க்கு கொடுக்கிற வெல்கம். அதுல இருக்கிறத சத்தமா வாசிங்க மேடம்” என்றாள்.

இப்போது அர்ஜூனோ, “இவ என்னப் பண்ணிட்டிருக்கா?” என்று யோசிக்க, அதற்குள் அந்த சீட்டைப் பிரித்துப் பார்த்த ஆசிரியருடைய முகம் புன்னகையில் மலர்ந்தது.

ஏனெனில் அந்த சீட் முழுவதுமே குட்டி குட்டி ஸ்வீட் நோட்ஸ் தான் எழுதி வைத்திருந்தனர். இப்போது ஒவ்வொரு மாணவர்களாய் நடனமாடி, ஒவ்வொரு ஆசிரியருக்கும் அதைக் கொடுக்க, அவர்களுமே ஒரு வித ஆர்வத்தோடு அதை ரசிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் ஒவ்வொருவருக்கும் போட்ட பாடல் தான், தாறுமாறாய் இருந்தது. ஆனாலும் மாணவர்களுக்கான அறிமுக விழா என்பதால் அவர்களும் அதை அமைதியாய் ரசிக்க ஆரம்பித்தனர்.

இடை இடையே சில ஆசிரியர்களும் கூட அவர்களுடன் சேர்ந்து நடனமாடினர். பார்க்கவே அத்தனை நன்றாக இருந்தது. ஆனால் அர்ஜூனுக்குத்தான் அத்தனை எரிச்சல்.

அதற்குள் கடைசியாய் விழாவுக்கு வந்திருந்த விருந்தினர் மைக்கில் எழுந்து பேச ஆரம்பித்தார்.

“ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டு இன்னிக்குத்தான் சிரிச்சிருக்கேன். நானும் எத்தனையோ காலேஜ் விழாக்கு போயிருக்கேன். ஆனா இதுத்தான் பெஸ்ட். இப்படி ஒரு விஷயத்த பண்ணனும்னு யோசிச்ச ஸ்டூடண்ட்ஸுக்கும், அதுக்கு சப்போர்ட் பண்ண டீச்சர்ஸூக்கும் என் வாழ்த்துக்கள்” என்று வேறு அவர் பேச, பிரின்சிபலோ அர்ஜூனைப் பார்த்து புன்னகைத்தார்.

ஆனால் இவனுக்குத்தான் இது யார் செய்த வேலை என்று புரியாது, அங்கும், இங்கும் உலாவிக் கொண்டிருக்க, அன்னேரம் பார்த்து அங்கு வந்த பிரதன்யாவோ, அவள் தோழிகளிடம், “ஆனாலும், இந்த பூஜாவுக்கு இவ்வளவு தைரியம் ஆகாது. அர்ஜூன் சார் பேச்சையும் மீறி அவ என்னப் பண்ணி வெச்சிருக்கா பாரு” என்று வேண்டுமென்றே அர்ஜூனின் காதில் விழும்படி பேசினாள்.

அதற்குள் அவள் தோழியோ, “ஆமா அவ பிரண்ட்ஸ்கிட்ட சொன்னத நான் கூட கேட்டேன். அர்ஜூன் சார இன்னிக்கு வெறுப்பேத்தி காமிக்கிறேன்னு சேலஞ் பண்ணியிருந்தா. அதே மாதிரி பண்னிட்டா” என்று வேறு ஒத்து ஊதியிருக்க, இப்போது அர்ஜூனுடைய கோவம் மொத்தமும் கரையைக் கடந்தது.

பூங்கொடிக்குமே பூஜாவுடைய இந்த செயல் அதிர்ச்சித்தான். ஆனால் அவர் அதை நல்ல முறையாக எடுத்துக் கொண்டார். ஆனால் அர்ஜூன் த்தான் அவள் தனியாக கிடைத்தால் கடித்து குதறிவிடும் அளவுக்கு கொலைவெறியில் நின்றான்.

அதை அறியாத பூஜாவோ, நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கிளம்பும் வேளையில், அவனின் முன்னே சென்று “எப்படி சார் என் சர்பிரைஸ்?” என்று சிரித்த முகமாய் அவள் கேட்டாள். அவனோ பளாரென்று அவள் கன்னத்திலேயே ஓங்கி அடித்திருந்தான்.

(ஏன்பா அர்ஜூன்? இதெல்லாம் ரொம்ப தப்பு! இதுக்கெல்லாம் கண்டிப்பா நீ அனுபவிப்ப. எங்க பூஜாவோட ரிவெஞ் எல்லாம் தாறுமாறா இருக்கும். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   14

*** வரம் – 21 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***