வரம் – 18

அர்ஜூன், பூஜாவை அவள் ஹாஸ்டலில் கொண்டு வந்து விடும் போது கிட்ட தட்ட மணி ஒன்பது ஆகியிருந்தது. பைக்கில் வரும் போதே, அவன் வயிற்றோரம் கைக் கொடுத்து, அவன் தோளில் முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.

ஹாஸ்டல் வந்ததும் பைக்கை நிறுத்தி விட்டு, “ச் பூஜா” என்று அவளை எழுப்பினான். அவளோ, “இன்னும் கொஞ்ச நேரம்” என்று இன்னும் அவன் முதுகில் கன்னம் பதித்து, அவள் தூக்க ஆரம்பிக்க, “ச்.. ஹாஸ்டல் வந்திடுச்சி” என்று தோளைக் குலுக்கினான்.

அப்போதே கண்ணைத் திறந்தவளுக்கு, ஒரு நொடி எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை. “எங்க இருக்கேன் நான்” என்று சொல்லியப்படி அவள் இறங்கப் போக, தூக்க கலக்கத்தில் தள்ளாடினாள்.

“ஹேய்” என்றவன் வேகமாய் பைக்கை நிறுத்தி, அவளை கீழே விழாது தாங்கிப் பிடித்தான். அவளோ, “தேங்க்ஸ் சார்” என்றவளின் வார்த்தையில் கூட மிச்ச தூக்கம் அப்படியேத்தான் இருந்தது.

“ஹேய் முதல்ல கண்ணத் தொற” என்று அவன் அழுத்தி சொல்ல, அவளோ தலையைக் குலுக்கினாள். “ச்” என்றவன், “பூஜா. இங்கப்பாரு” என்று அவள் தோளைப் பிடித்து உழுப்ப, அப்போதே சற்று கண்ணைக் கசக்கி அவனைப் பார்த்தாள்.

தூக்கம் சற்று சென்றிருக்க, இப்போது, “ஆ..ங் சார். இன்னும் நீங்க வீட்டுக்கு போகலையா? ஏதோ வேல இருக்குன்னு சொன்னீங்க” என்று அப்பாவியாய் கேட்டாள்.

அதில் அவளை முறைத்தவனோ, “இத பிடி. உள்ள போ முதல்ல” என்று கையில் இருந்த கவரை எல்லாம் அவளிடம் திணித்தான்.

உடனே அவளோ, அதில் இருந்த ஒரு கவரை மட்டும் எடுத்து அவனிடம் நீட்டினாள். அதில் அவனோ, “என்ன?” என்று எரிச்சலாய் கேட்க, “இது உங்களுக்குத்தான்” என்றாள்.

“எனக்கா?” என்றவனுக்கு புரியவே இல்லை. அதில் அவளோ, “ஆமா உங்களுக்குத்தான். நான் போயிட்டு வரேன். பாய் சார்” என்று சொல்லிவிட்டு அவள் ஹாஸ்டல் ஹேட்டை திறந்து உள்ளே சென்றிருந்தாள்.

இங்கே இவன் தான், கையில் இருந்த கவரை பிரிக்க கூட சிந்தனையின்றி, அப்படியே சில நொடிகள் நின்றான். அதற்குள்ளாக மாதவன் மீண்டும் கால் செய்திருந்தான். ஏனெனில், இப்படி எல்லாம் இத்தனை நேரம் அவன் வெளியில் சுற்ற மாட்டானே. அதனால் அவனுக்கு எதுவும் பிரச்சனையோ என்ற பதட்டம் அவனுக்கு.

ஆனால் அர்ஜூன் சிந்தனை மொத்தமும் பூஜாவைப் பற்றியே இருக்க, அவனுக்கு அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அப்படியே பைக்கை ஸ்டார்ட் செய்தான்,

அவனின் சிந்தனையில் பூஜா என்ற ஒருவளின் உருவம் மட்டுமே தெரிந்தது. அவள் யார்? அவளின் குணம் தான் என்ன? அவனுக்கு சத்தியமாய் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த நினைவிலேயே தன்னுடைய அபார்ட்மெண்ட்க்கு வந்தவன், அங்கே அவனுடைய பிளாட் வாசலில் நின்றிருந்த மாதவனை கூட கண்டுக் கொள்ளாது வீட்டிற்குள் நுழைந்தான்.

அதைப் பார்த்தவனோ, “ஏண்டா? ஒருத்தன் உனக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு வாசல்லையே நின்னுட்டு இருக்கேன். இவன் என்னென்னா, யாரோ கோமாளின்ற மாதிரி, அவன் பாட்டுக்கு உள்ளப் போறான்” என்று புலம்பியப்படியே அவனின் பின்னே சென்றான்.

அங்கே கையில் இருந்த கவரை சோபாவில் வைத்து விட்டு அவன் அப்படியே அமர்ந்திருக்க, “அர்ஜூன் எங்கப் போன நீ?” என்று மாதவன் கேட்க, அப்போதே அவனை நிமிர்ந்துப் பார்த்தான்.

“உன் ரூமுக்கு போகாம, இங்க என்னப் பண்ற?” என்றான் அர்ஜூன். “எதே?” என்று அவன் முழிக்க, “ச் சும்மா சும்மா என்ன தொல்ல பண்ணாதன்னு சொன்னா உனக்கு புரியாதா? போயி உன் வேலைய பாரு” என்று அர்ஜூன் சொல்ல, அவனோ, அங்கிருந்த கவரைப் பார்த்து, “ஹேய் ஷாப்பிங் போனீயா? அதுவும் என்ன விட்டுட்டு தனியா போனீயா” என்று அதை எடுக்க சென்றான்.

அதற்குள் அதை அவன் கையில் இருந்து பிடுங்கிய அர்ஜூன். “ச் உன்ன நான் உன் பிளாட்டுக்கு போக சொன்னேன் மாதவா” என்ற அவனின் வார்த்தையில் அத்தனை கடுமை இருந்தது.

அதில் அவனுமே அதற்கு மேல் எதுவும் சொல்லாது, “என்னமோ போ. நீ கொஞ்ச நாளா சரியில்ல” என்று முனுமுனுத்தப்படியே அங்கிருந்து சென்றான். அவன் சென்றதும் கதவை மூடிவிட்டு அறையில் வந்தமர்ந்தவனுக்கோ, மீண்டும் புட்கோர்டில் நடந்ததுத்தான் நினைவுக்கு வந்தது.

அவள் கழுத்தில் கிடந்த தாலியைப் பார்த்து அவன் அவளிடம் அது குறித்து கேட்க, அதற்கு அவள் சொல்லிய பதிலைக் கேட்டு அவனுக்கே அதிர்ச்சித்தான். ஆனாலும் அதனுள் மகிழ்ச்சியும் இருந்ததோ! என்னவோ?

“ச் இங்கப்பாரு பூஜா. பெரியவங்களுக்காக, இத நீ” என்று அவன் பேச ஆரம்பிக்கும் முன்னே, “நீங்க என்ன டைவர்ஸ் பண்ணிட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இருக்கீங்களா சார்?” என்று நேரடியாக கேட்டாள் பூஜா.

அவளுடைய கேள்வியில் இவனுக்கோ அத்தனை அதிர்ச்சி. அவள் பேசுவாள், என்றே அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி இருக்க, இப்படி அவள் கேட்கவும், “ச் பைத்தியமா நீ” என்றான்.

“அப்புறம் என்ன சார்? உங்களுக்கு உங்க வேலைய பார்க்கனும். எனக்கு என் படிப்ப பாக்கனும். சோ இப்போதைக்கு, நானும், நீங்களும் ஹஸ்பண்ட் அண்ட் ஒயிப்ன்னு யாருக்கும் சொல்லப் போறது இல்ல. நானும் உங்கள தொல்லப் பண்ணப் போறது இல்ல.” என்று கூலாக சொல்லிவிட்டு பர்கரை எடுத்து சாப்பிட்டாள்.

இப்போது அர்ஜூன் தான் என்ன சொல்வது? என்று புரியாது அவளையே பார்த்திருந்தான். “வேணும்னா இதுக்கு நடுவுல, எனக்கு யாரையாச்சும் பிடிச்சிப் போச்சுன்னா” என்று அவள் இழுக்க, இங்கே இவனுக்கோ ஒரு நொடி கோவம் சீறிப்பாய்ந்தது.

அதற்குள் அவளோ, “உங்க கிட்ட வந்து சொல்றேன். நீங்கத்தான் நல்லா அட்வைஸ் பண்ணுவீங்களே. சோ எனக்கும் நல்ல புத்தி வர்ற மாதிரி நாலு அட்வைஸ கொடுத்தீங்கன்னா, நானும் திருந்திடுவேன்” என்று சிறு புன்னகையுடனே கூறினாள் பூஜா.

இப்போது அவன் தான் திரு திருவென முழித்தான். திருமணத்தன்று பார்த்த பூஜாவுக்கும், இப்போது அவள் முன் அமர்ந்திருப்பவளுக்கும் ஒரு பத்தாயிரம் வித்தியாசம் சொல்லிவிடலாம்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ, “பொண்டாட்டியா இருந்தாலும், இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல சைட் அடிக்கிறது தப்பு சார்” என்றாள்.

அதில் இப்போது அவளை முறைத்தவனோ, “இங்கப்பாரு பூஜா. நான்” என்றவன் எதையோ சொல்ல முயற்சித்தான்.

“ஐயோ சார்! இப்பவே எல்லாத்தையும் பேசிட்டா, அதுக்கப்புறம் பியூசர்ல என்னத்தான் பேசுறது. இப்போ சாப்பிடுங்க. மீதிய நெக்ஸ் வீக்கெண்ட் பேசிக்கலாம்” என்றாள்.

“என்னது?” என்று அவன் கேட்க, “ஆமா சார். இப்போ இந்த மால் மட்டும் தான பார்த்திருக்கோம். இங்கத்தான் நிறைய மால், பீச் எல்லாம் இருக்கே. சோ ஒவ்வொரு வாரமும் அங்கப் போகலாம்” என்று அவளே அவனுடைய செடியூல்லையும் சேர்த்து போட்டிருந்தாள்.

“எனக்கென்ன வேல இல்லன்னு நினைச்சீயா?” என்று அவன் கோவமாய் கேட்கப் போக, “சார் பர்கர் காலி ஆகிடுச்சி. நான் போயி வேற ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்” என்று ஓடியிருந்தாள் பூஜா.

இப்போது அதை நினைத்தப்படியே அப்படியே அமர்ந்திருந்தவனின் பார்வையில், அவள் கொடுத்த கவர் பட்டது. அதில் அன்னிட்சையாய் அவன் அதை சென்று திறந்துப் பார்க்க, உள்ளே அவனுக்கான ஜீன்ஸும், ஒரு டி ஷர்டும் இருந்தது. அதற்குள்ளே பில்லும் இருக்க அதை எடுத்துப் பார்த்தான்.

அது அவளுடைய கார்டில் இருந்து பில் செய்யப்பட்டிருந்தது. அதில் அவனோ, வாழ்க்கையிலையே தனக்கு ஒருவர் முதன் முதலாய் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்ததை இமைக்காதுப் பார்த்தான்.

அதனூடே குட்டி பாக்ஸும் இருந்தது. அதையும் பிரித்துப் பார்க்க, அதில் ஒரு வாட்சும் இருக்க, அதற்குள் குட்டியாய் ஒரு பேப்பரும் சுருட்டி இருந்தது.

அதை எடுத்துப் பார்க்க, அதில், “தேங்யூ அர்ஜூன் சார்” என்று அவளுடைய கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க, அந்த கணித வாத்தியாருக்கு கூட வேதியியல் மாற்றம் மெல்ல நடக்க முயற்சித்ததோ? என்னவோ?

இப்படியாக அன்றைய தினம் முழுவதையும் அர்ஜூன் அறியாமலே பூஜா களவாடிக் கொண்டிருக்க, அதற்குள், அர்ஜூனின் மனமோ, “ச் இதெல்லாம் சரியே இல்ல அர்ஜூன். இந்த மேரேஜ், கமிட்மெண்ட் இதெல்லாம் கண்டிப்பா, உன்னோட முயற்சிக்கு தடையாத்தான் இருக்கும். சோ அவள பத்தி நீ யோசிக்கிறது சரி கிடையாது” என்று அவனின் மூளை அறிவுறுத்த, மீண்டும் இறுகிப் போனான்.

ஆனாலும் அதெல்லாம் அடுத்த வாரம், கல்லூரியில் வைத்து பூஜாவை பார்க்கும் வரைத்தான். அர்ஜூன் வெல்கம் பார்டியில், பிஸியாய் சுற்றிக் கொண்டிருக்க, அப்போதுத்தான் பூஜாவை ஆசிரியர் ஒருவர் திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

முதலில் கடந்து செல்லத்தான் நினைத்தான். ஆனாலும் ஏனோ அவனின் உள் மனம் அதை செய்ய விடாது தடுக்க, “ச் இவளுக்கு, அப்படி இந்த புரோபசர் கூட என்னத்தான் பிரச்சன” என்றவன் இப்போது அப்படியே அங்கேயே நின்றான்.

அங்கே அந்த ப்ரோபசரோ, “உனக்குலாம் முதல்ல காலர்ஷிப் அப்ரூவ் பண்ணது யாரு? உன்ன பார்த்தா படிச்சு மார்க் எடுத்த மாதிரி தெரியல. கண்டிப்பா நீ எல்லாம்” என்றவர் அவளை திட்டு திட்டு என்று திட்டிக் கொண்டிருந்தார்.

அதில் மற்ற மாணவர்களில் சிலர் பூஜாவை பாவமாய் பார்க்க, ஆனால் கவலைக் கொள்ள வேண்டியவளோ, மனதுக்குள் ஏதோ ஒரு குத்துப் பாடலுக்கு ஹம் செய்துக் கொண்டிருந்தாள். ஆம் அவள் தான் ஏர் பட்ஸை காதில் மாட்டி வைத்திருந்தாளே.

பாவம் அதை அறியாத அந்த புரோபசரோ, அவளை பாரபட்சமே இன்றி திட்ட, இங்கே அதை எல்லாம் கேட்ட அர்ஜூனுக்குத்தான் அத்தனைக் கோவம்.

சட்டென்று உள்ளே நுழைந்தவன், “சார்” என்று அத்தனை சத்தமாய் அழைத்தான். அவனின் சத்தத்தில் பூஜாவைத் தவிர்த்து அத்தனைப் பேரும் வாசலைப் பார்த்தனர். இப்போது சரியாக அவள் கேட்டுக் கொண்டிருந்த பாடல் முடிந்து, அடுத்த பாடல் ஆரம்பிக்கும் நொடியாய் அது இருக்க, வகுப்பறை அத்தனை அமைதியாய் இருப்பதை உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவர்களின் கவனம் மொத்தமும் வாசலில் இருக்க, இப்போது அவளுமே திரும்ப, அங்கே அர்ஜூன், அந்த ஆசிரியரிடம் ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தான்.

இப்போது “அடியாத்தி இது என்ன பீல்லு” என்ற பாடல் அவளுடைய ஏர்பட்ஸில் ஒலிக்க, அவளோ அவனையே வைத்தக் கண் வாங்காது பார்த்தாள்.

அதற்குள்ளாக பூஜாவை கை நீட்டி அவன் அழைக்க, ஒரு நொடி அவளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் அவளுக்குத்தான் எதுவுமே கேட்கவில்லையே.

ஆனாலும் அவன் அழைக்கவும், அவனின் முன்னே அவள் சென்று நிற்க, அந்த புரோபசரோ, சிறு கடுப்புடன், “போ” என்றார்.

அதில் அவசரமாய் ஏர்பாட்ஸை காதில் இருந்து கழட்டியவள், யாரும் அறியாமல் ரம்யாவிடம் அதை தூக்கிப் போட்டாள். அதில் அவளோ பதறி கேட்ச் பிடிக்க, விஷ்வாவோ, அவளுக்கு உதவுகிறேன் என்று அதில் இருந்த பட்டனை பிரஸ் செய்திருந்தான்.

சரியாக அர்ஜூனும், பூஜாவும் அந்த கிளாஸை விட்டு தள்ளி செல்ல, இப்போது பூஜாவுடைய மொபைல் அத்தனை சத்தமாய், “தங்கமாரி ஊதாரி” என்ற பாடம் ஒலிக்க, அந்த புரோபசரில் இருந்து அத்தனைப் பேரும் அதிர்ந்து திரும்பினர்.

வகுப்பில் கலவரத்தை கிளப்பிவிட்டு, இப்போது பூஜாவோ அப்பாவியாய் அவனின் பின்னே செல்ல, அங்கிருந்த ஆடிட்டோரியத்து அழைத்துச் சென்றவன், இப்போது நின்று அவளை முறைத்தான்.

(ஐயா ராசா. எது திட்டுறதா இருந்தாலும், அந்த பிள்ளைட்ட என்ன ஏதுன்னு சொல்லிட்டு திட்டு. ஏன்னா பாட்டு கேட்கிற ஆர்வத்துல அந்தப் புள்ள கிளாஸ்ல நடந்த எதையுமே கவனிக்கல. சரி அடுத்து என்னாகப் போது? இவங்களுக்குள்ள நம்ம எல்லாரும் எக்ஸ்பக்ட் பண்ற அந்த காதல் பாம் வெடிக்குமா? இல்ல பூஜா வைக்கிற பாம்ல, காலேஜ்ஜே வெடிக்குமான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் கத எப்படி போயிட்டு இருக்கு? இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சீன் எதுன்னு, கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் கமெண்ட் பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சீக்கிரமே ரிபிளை பண்றேன். அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்றேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   14

*** வரம் – 18 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***