வரம் – 12

திடீரென வகுப்பறையில் கேட்ட சத்தத்தில் அங்கு அத்தனை ஆசிரியர்களும் வந்து நிற்க, அந்த வகுப்பே புகை மயமாய் இருந்தது. “இங்க என்ன நடக்குது?” என்றப்படி ஒருவரை ஒருவர் பார்க்க, அர்ஜூனுமே, புரியாதுத்தான் நின்றிருந்தான்.

சரியாக அன்னேரம் அந்த புகை மயத்துக்கு மத்தியில் இருந்து அவனின் தர்மபத்னி வெளியில் வர, ஒரு நொடி அவனுக்கு அத்தனை அதிர்ச்சி. மீண்டும், மீண்டும் அவள் அவனின் முன்னே வந்து நிக்கிறாள். அதுவும் அவன் முற்றிலும் எதிர்பார்க்காத வரவு.

அவள் முகத்தில் எல்லாம் சாக்பீஸ் தூள் ஒட்டியிருக்க, அவள் தலையில் துண்டு பேப்பரும், ஜிகுனா பேப்பரும் இருந்தது.

“வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்? இதென்னா கிளாஸ் ரூம்மா? இல்ல உங்க ஸ்ட்ரீட் ரோடா?” என்று ஒரு ஆசிரியர் கேட்க, இப்போது வகுப்பறையில் அத்தனைப் பேரும் சற்றும் கலவரமாகியிருந்தனர்.

“ஒரு பிஜி ஸ்டூடண்ட்ஸ் மாதிரியா பிகேவ் பண்ணி வச்சிருக்கீங்க? ஏதோ பர்ஸ்ட் டே கொஞ்சம் ப்ரீயா இருங்கன்னு விட்டா, நீங்க இப்பவே ரெளடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று வேகமாய் வகுப்பு ஆசிரியர் கோவமாய் கேட்டார்.

ஏனெனில், அவர் தானே அவர் கிளாஸூக்கு பொறுப்பு. இப்போது அர்ஜூனோ சிறு கோவத்துடன், “கிளாஸ்ல இல்லாம நீங்க எங்க சார் போயிருந்தீங்க?” என்றான்.

“ஆ.ங் அது சார்” என்றவருக்குமே என்ன சொல்ல என்று ஒரு நொடி தெரியவில்லை. அது அவருடைய தவறுத்தானே.

ஆனாலும், “இல்ல சார். பர்ஸ்ட் டே. அதுவும், பிஜி ஸ்டூடண்ட்ஸ்தானன்னு நினைச்சித்தான்” என்று கூறினார்.

அதில் அவரை இன்னும் முறைத்தவனோ, இப்போது அவரை விட்டு விட்டு மற்ற மாணவர்களின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவர்கள் அத்தனைப் பேரின் முகத்திலுமே அத்தனைப் பதட்டம் தெரிந்தது.

அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தவன், “இதுக்கெல்லாம் யாரு காரணம்னு இப்போ எனக்கு தெரிஞ்சாகனும்” என்று மேஜையில் ஓங்கி தட்டினான்.

அங்கேயுமே முழு சாப்பீஸ் தூளாய் இருக்க, அது காற்றில் பறந்தது. அதில் பூஜா, “அச்” என்று சத்தமாய் தும்மினாள்.

ஏனோ அவளுடைய அந்த சின்ன தும்மல் கூட, அர்ஜூனுக்கு சிறு கலக்கத்தை கொடுத்ததோ? என்னவோ? இப்போது மீண்டும் அவளைப் பார்த்தான்.

பார்த்தவனுக்கு அவள் மீது அத்தனைக் கோவம். “யாரு உன்கிட்ட” என்று கேட்க ஆரம்பித்தவன், பின் அனைவரும் இருக்கவும், “இதெல்லாம் யாரு பண்ணது?” என்று கேட்டான்.

இங்கே பிரியாவோ, “ஐயோ பண்ணவக்கிட்டையே யாரு பண்ணதுன்னு கேட்குறாரே. இவளும் உண்மை விளிம்பியா ஒத்துப்பாளோ?” என்று விஷ்வாவின் காதைக் கடித்தாள்.

அதில் பூஜாவோ அமைதியாய் சுற்றி கிளாஸை ஒரு முறைப் பார்த்தாள். அவர்கள் யாரும் வாயைத் திறந்து இவள் என்று சொல்வது போல் தெரியவில்லை.

அதனால், இவளோ, “இல்ல சார். நான் தான்” என்று பூஜா சொல்ல, “வாட்?” என்றான் அர்ஜூன். அதற்குள் அருகில் நின்றிருந்த ஆசிரியரோ, “நீத்தானா? எனக்கு அப்பவே தெரியும். உன்ன பார்த்தப்பவே நினைச்சேன். இந்த கிளாஸ்ல நீத்தான்” என்று பேசும் முன்னே, “சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று கையை நீட்டி நிறுத்தினான் அர்ஜூன்.

அதில் அவர் அர்ஜூனைப் பார்க்க, இப்போ அர்ஜூனோ பூஜாவைப் பார்த்து, “ச் அடுத்தவங்கள காப்பாத்துறதுக்காக பொய் சொல்றது தப்பு” என்று அழுத்திக் கூறினான்.

ஏனெனில் அப்போதும் கூட, அந்த நொடியும் கூட அங்கு நடந்த கலவரத்துக்கு அவன் மனைவித்தான் முழு காரணம் என்று அவன் நினைக்கவில்லை. யாரோ அவளை வைத்து விளையாடியிருப்பார்கள் என்றுத்தான் நினைத்தான்.

“ஆ..ங் இல்ல இல்ல சார். நான் பொய் எல்லாம் சொல்லல. நான் தான். அவங்க மேலலாம் எந்த தப்பும் இல்ல” என்று வேகமாய் கூறினாள் பூஜா.

“ச் இவ ஏன் இப்படி இருக்கா? இவளுக்குன்னு சுய அறிவே கிடையாதா? இதனால மத்த ஸ்டாப்ஸ், இவள எப்படி பார்பபங்கன்னு யோசிக்க மாட்டாளா? யாருக்காக இவ இப்படி பண்ணிட்டு இருக்கா?” என்று தனக்குள்ளே யோசித்தான்.

அதற்குள் வகுப்பு ஆசிரியரோ, “இந்தப் பொண்னு பன்ணியிருக்கும் சார். இப்பவே பிரின்சிபல்கிட்ட கூட்டிட்டு போயி நிறுத்துனாத்தான் சரியா இருக்கும்” என்றார்.

அதில் அர்ஜூனுக்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவனின் தர்மபத்னி, அப்படி எல்லாம் செய்திருக்க மாட்டாள் என்று அவன் நம்பி தொலைத்தான். ஆனால் அவள் தான் செய்திருந்தாள் என்று தெரிந்திருந்தால், இப்போது அவனே சென்று டிசி வாங்கி கையில் கொடுத்து விடுவான் என்பது வேறு கதை.

அதற்குள்ளாக விஷ்வா எழுந்து, “சார். சார் அப்படில்லாம் பண்ணிடாதீங்க. நாங்களும் சேர்ந்துத்தான் பண்ணோம்” என்றான்.

“ஓ நீயுமா? இந்தப் பக்கம் வா” என்று ஆசிரியர் அழைக்க, அதற்குள் பிரியாவுமே அவனுடன் சேர்ந்து வந்து பூஜாவின் அருகில் நின்றாள்.

“உங்க மூனு பேரையும்” என்று சொல்லும் முன்னே, அங்கிருந்த மற்ற மாணவர்களில் இன்னும் சிலர் கூட அவளோடு வந்து நின்றனர்.

அதில் ஆசிரியரோ, “என்ன விளையாடிட்டு இருக்கீங்களா?” என்று கோவமாய் கேட்டார்.

அதற்குள் அர்ஜூன் தான், “சார் கிளாஸ் டைம்ல, நீங்க கிளாஸ் விட்டு போனது பர்ஸ்ட் தப்பு. ஸ்டூடண்ட்ஸ் எஞ்சாய் பண்ணனும்னுத்தான் நினைப்பாங்க. நம்மத்தான் அவங்களுக்கு எது சரி, எது தப்புன்னு சொல்லிக் கொடுக்கனும். பர்ஸ்ட் டேத்தான. ப்ரீயா விடுங்க. பட் இதுக்கப்புறம் இப்படி நடக்காம பாத்துக்கோங்க” என்றான்.

அதைக் கேட்டு அந்த ஆசிரியருக்கே சற்று ஆச்சர்யம் தான். ஏனெனில் அர்ஜூன் எல்லாம் மாணவர்களுக்கு இளக்கம் காட்டுபவனா? முதல் நாள் என்ன? முதல் நொடியே தவறு செய்தால், அதிலும் இப்படி மொத்த வகுப்புக்கும் இடையூறு செய்யும்படி எல்லாம் ஒருவன் செய்திருந்தால், அதற்கு அர்ஜூனுடைய தண்டனை நிச்சயம் வேற மாதிரி இருந்திருக்கும். இப்போது அவனே சொல்லவும், “சார் சொல்றதால, உங்கள இதோட விடுறேன். இதுக்கப்புறம் உங்க வாலுத்தனத்த எல்லாம் இங்க காமிக்கனும்னு நினைச்சீங்க. அதுக்கப்புறம் இங்க படிக்கவே முடியாது பார்த்துக்கோங்க” என்று எச்சரித்தார்.

அதில் மற்ற ஆசிரியர்கள் கலைந்து விட, இப்போது அர்ஜூனும், அந்த வகுப்பு ஆசிரியரும்த்தான் இருந்தனர்.

அதில் கையில் கட்டியிருந்த மணியைப் பார்த்தான். கிட்ட தட்ட அந்த ஹவர் முடிந்திருந்தது. அடுத்த ஹவர், அவனுடையதுத்தான்.

அதில் அங்கே நின்றிருந்த ஆசிரியரிடம், “இனி நான் பார்த்துக்கிறேன் சார். நீங்க போங்க” என்றான்.

“இந்தப் பொண்ண கொஞ்சம் சரியா பாத்துக்கோங்க சார். சரியான அராத்தா இருப்பா போல. இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் படிக்கவா வருதுங்க. எப்படியும் ஏதாச்சும் ஏழரைய இழுத்து விடுறதுக்குன்னே வந்து சேருதுங்க. நாளைக்கே பாருங்க. ஏதாச்சும் பையன இழுத்துட்டு ஓடத்தான் போறாங்க” என்று சொல்ல, ஏனோ அர்ஜூனுடைய தாடை எல்லாம் இறுகியது. இப்போது கோவம் பூஜாவின் மீது அல்ல, அவளை பற்றி தப்பாய் பேசிய அந்த ஆசிரியரிடம் பாய்ந்தது.

“ஜஸ்ட் ஸ்டாப் இட் சார்” என்று கர்ஜித்தான். அவனுடைய அந்த கோவத்தில் ஆசிரியர் அவனைப் பார்க்க, “புரோபசர் மாதிரி பிகேவ் பண்ணுங்க சார். ஸ்டூடண்ட்ஸ் இந்த வயசுல இப்படித்தான் இருப்பாங்க. அதுக்குன்னு பார்த்த உடனே, இவங்க இப்படித்தான்னு முடிவு பண்ணிடுவீங்களா? அவங்கள கரெக்ட் பண்ணனுமே தவிர, கார்னர் பண்ணக் கூடாது” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

அவனுடைய கண்கள் எல்லாம் சிவந்திருந்தது. அவர்கள் சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டிருக்க, மற்றவர்களுக்கு கேட்டிருக்கவில்லை. ஆனால் பூஜாவோ அர்ஜூனைத்தான் பார்த்தப்படி நின்றிருந்தாள்.

அவன் கோவத்தை அடக்க முயற்சிப்பது, அவன் கரத்தை இறுக்கு மூடியிருப்பதிலேயே புரிந்தது. அதில் இவளோ கோவத்தில் நிற்பவனைத்தான் ஆராய்ச்சியாய் பார்த்தாள்.

இங்கே பிரியாவோ, “ச் அப்பவே சொன்னேன் கேட்டீயா நீ?” என்று திட்டினாள். இப்போது பூஜாவோ, “ச்சே இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இவங்க வந்திருக்கலாம்” என்றாள்.

“எதுக்கு?” என்று விஷ்வா கேட்க, “இல்ல அடுத்து சின்னதா ஒரு ராக்கெட் பாம் எப்படி செய்றதுன்னு டெமோ காமிக்கலாம்னு நினைச்சேன். பட் அத பண்ண முடியாம போயிடுச்சே” என்று உதட்டை சுழித்து அவள் கவலைக் கொள்ள, விஷ்வாவும், பிரியாவும் அவளை அத்தனை முறைத்துப் பார்த்தனர்.

இங்கே அந்த ஆசிரியருக்கோ இப்போது பூஜாவின் மீதுத்தான் கோவம் வந்தது. “ச் இந்தப் பொண்ணாலத்தான். பிரின்சிபல் முன்னாடியும் அவமானமா போச்சு. இப்போ என்ன விட சின்னப் பையன் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணப் பாக்குறான். பாத்துக்கிறேன்” என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டப்படி அங்கிருந்து சென்றார்.

இப்போது அர்ஜூனோ அங்கே நின்றிருந்தவர்களைப் பார்த்தான். “சாரி சார் இனிமே இப்படி பண்ண மாட்டோம்” என்று மற்ற மாணவர்கள் சொல்ல, “முதல்ல, நீங்க போட்டு வச்சிருக்கிற குப்பைய ஒழுங்கா க்ளீன் பண்ணுங்க” என்றான்.

அப்போதே அனைவரும் பார்க்க, வகுப்பறையே அத்தனை குப்பையாய் கிடந்தது. அதில் மற்றவர்களுமே சேர்ந்து குப்பை எல்லாம் எடுக்க ஆரம்பித்தனர்.

“வந்த முத நாளே நம்மள குப்பை அள்ள விட்டுட்டா. இதுக்குத்தான் அவ பேச்ச கேட்காதீங்கன்னு சொன்னேன்” என்று ஒருவள் பொறுமினாள்.

அவள் பெயர் பிரதன்யா. ஏனோ அவளுக்கு வந்த முதல் நாளே அத்தனைப் பேரும் பூஜாவை பற்றி பேசுவது, அவளுடன் பேச நினைப்பது எல்லாம் அவளுக்கு பொறாமையை உருவாக்கியிருந்தது.

அதனால் இப்போது அதுத்தான் சமயம் என, பூஜாவை கரித்துக் கொட்டினாள். அவளுடனே இன்னும் சிலர் அவளுடன் இணைந்துக் கொண்டனர்.

வந்த முதல் நாளே நண்பர்களை தேடிக் கொண்டதோடு, ஒரு பகைவர் கூட்டத்தையும் உருவாக்கியிருந்தாள் பூஜா.

(ச்சே கொஞ்சம் பேமஸ் ஆனாலே இதுத்தான் பிரச்சன. எங்க பார்த்தாலும் வில்லிங்க தொல்லையாவுல இருக்கு. செரி இந்த லூசு கூட்டத்த நம்ம பூஜா எப்புடி ஹேண்டில் பண்ணப் போறான்னு பார்ப்போம்)

அனைவரும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அர்ஜூனோ, பூஜாவைப் பார்த்து, “முதல்ல போயி பேஸ் வாஸ் பண்ணிட்டு வா” என்றான். 

“ஆ.ங் பரவாயில்ல சார்” என்றவள் மீண்டும் குனிந்து குப்பையை எடுக்கப் போக, அவள் கரத்தைப் பிடித்தான் அர்ஜூன்.

அத்தனைப் பேரும் தரையோடு தரையாய் இருக்க, யாரும் இவர்களை நிமிர்ந்துப் பார்க்கவில்லை. இப்போது அவளோ அவனைப் பார்த்தாள்.

அவனோ அத்தனைக் கோவமாய், “இப்படித்தான் மத்தவங்க முன்னாடி கோமாளி மாதிரி நின்னுட்டு இருக்கப் போறீயா?” என்றப்படி அவள் தலையில் இருந்த ஜிகுனா பேப்பர்களை எல்லாம் தட்டி விட்டான்.

கோவமாய் தான் பேசினான். ஆனால் அவனின் விரல்களோ, மிக மெதுவாய் அவள் தலை முடியில் இருந்த ஜிகுனா பேப்பர்களை எடுத்து விட்டது. பின் கர்ஷீப்பை எடுத்து அவளிடம் கொடுத்தவன், “அட்லீஸ்ட் பேஸையாச்சும் துடை” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான்.

இப்போது அவளோ, “நீங்களே துடைச்சி விடுறீங்களா சார்?” என்று அவனின் முன்னே நின்றாள் பூஜா.

(எதே? ஏன்மா? இங்க என்ன நடந்துட்டு இருக்கு. நீ என்ன சொல்லிட்டிருக்க. சரி. இவ நம்ம ஹீரோ பிபிய ஏத்தாம இருக்கப் போறது இல்ல. சரி இன்னும் என்னெல்லாம் நடக்கப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   18

*** வரம் – 12 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***