தேன் – 73

விழிக்கோ, அதீத உடல் வலியால் அப்படி ஒரு தூக்கம். கவிக்குமே இரவெல்லாம் சுற்றிய அலைச்சல். அவளுமே சோர்வாய், சோபாவிலேயே படுத்து விட்டாள்.

வெளியில் செல்லலாம் என்று நினைத்த வேந்தன், இருவரும் அசந்து உறங்கவும், அவர்களை தொல்லை செய்யாது, அவன் மொபைலை எடுத்துக் கொண்டு, அவன் வேலை குறித்து அருளிடம் கேட்டான்.

கிட்ட தட்ட கவி மதியம் போல் தான் மெல்ல கண் விழித்தாள். எழுந்தவளுக்கு காலையிலேயே வெளியில் செல்ல வேண்டும் என்று சொல்லியது நினைவு வர, “ஐய்யய்யோ! அத மறந்துட்டேன்னே” என்றப்படி பதட்டமாய் எழுந்து கீழே வந்தாள்.

அவனோ அப்போதுத்தான் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தான். “என்னை எழுப்பியிருக்கலாம்த்தான?” என்று இவள் கேட்க, “இல்ல கொஞ்சம் வெளிய வேல இருந்திச்சு. அதான் அத பாத்துட்டு வந்தேன்” என்றான்.

“காலையிலத்தான வந்தீங்க. அதுக்குள்ள வேலையா?” என்று கவி கேட்க, “நல்லா தூங்கிட்டு இருந்தீயேன்னு டிஸ்டர்ப் பண்ணாம போனா, என்னையவே கேள்வி கேட்குற. இதுக்குத்தான் வந்ததும் என்னோட வேலைய பார்த்திருக்கனும்” என்று சீண்டலாய் கூறினான் வேந்தன்.

“ச் சுடர்” என்று அவள் சிறு வெட்கத்துடன் முறைக்க, “சரி சரி. குட்டிமா எந்திரிச்சிட்டாளா? இல்ல” என்று கேட்டான். “இல்ல அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ. அதான் தூங்கிட்டு இருக்கா” என்றாள்.

“என்ன?” என்று அவன் பதட்டமாய் அவளறைக்கு செல்ல, “ஏங்க பயப்படுற மாதிரில்லாம் எதுவும் இல்ல. கேர்ள்ஸ் பிராபளம் தான்” என்றாள்.

அப்போதே புரிந்துக் கொண்டவன், “சரி சரி அப்போ அவள தொல்லைப் பண்ண வேண்டாம். நம்ம நாளைக்கு வெளிய போலாம்” என்று சொல்லியவனுக்குமே அசதியாய் இருக்க மேலே சென்று படுத்து விட்டான்.

அதன் பின் விழியின் அறைக்குள் சென்ற கவியோ, மெல்ல அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். உடல் சற்று சூடாக இருந்தது. அதில் அருகில் இருந்த தைலத்தை எடுத்து மெல்ல தேய்த்து விட்டாள்.

விழியுமே சுருண்டு கவியின் கரத்தைப் பிடித்தப்படி உறக்கத்தை தொடர்ந்தாள். “ஹாஸ்பிடல் போலாம்னு சொன்னா கேட்கிறாளா?” என்று தனக்குள் சொல்லியவள் மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.

அங்கே ஆர்யனோ, அவன் நினைத்த விஷயம் நடக்காமல் போனதில் எரிச்சலடைந்தான். ஏனெனில், இந்த விஷயத்தை அவள் வேந்தனிடமோ? இல்லை கவியிடமோ சொல்லியிருப்பாள். அதை வைத்து அந்த வேந்தனை கஷ்டப்படுத்தலாம் என்று அவன் யோசித்திருந்தான்.

ஆனால் இப்போது வரை, எதுவுமே நடக்காமல் இருக்க, “இல்ல இல்ல. அப்படி எல்லாம் உன்னால இதுல இருந்து வெளிய வர முடியாது” என்று சொல்லிக் கொண்டவனுக்கு, அப்போதும் கூட, ஒரு பெண்ணுக்கு அவன் செய்தது எவ்வளவு பெரிய துரோகம் என்று தெரியவில்லை.

அடுத்த நாள் காலையில் தான் விழி சற்று தெளிவுக்கே வந்தாள். கவியோ அன்று அவளுடனே படுத்துக் கொண்டாள். எழுந்துப் பார்க்க, அமர்ந்த வாக்கிலேயே அவள் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அதில் தோழியின் அக்கறையில் மனம் சிலிர்த்தது. மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு எழுந்தாள் விழி. எழும் போதே, அந்த அரக்கனின் முகமும், செயலும் நினைவுக்கு வந்தது.

அதில் ஒரு நொடி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள், “நான் சுடர் விழி. அப்படி எல்லாம், நீ நினைக்கிறத நடக்க விட மாட்டேன் ஆர்யன். ஒரு நாளும் என் அண்ணன் உன் முன்னாடி அவமானப்பட நான் அனுமதிக்க மாட்டேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள். அலுப்பு தீரும் மட்டும் குளித்து முடித்து உடை மாற்றி வெளியில் வந்தாள்.

கவியோ “ஹேய் எந்திரிச்சிட்டீயா? இப்போ எதுக்கு காலையிலையே தலைக்கு ஊத்துன? காய்ச்சல் எல்லாம் பரவாயில்லையா?” என்று அடுத்தடுத்து கேட்டாள்.

“ஹேய் ஹேய் ரிலாக்ஸ். ஏதாச்சும் ஒரு கேள்வி கேட்டாத்தான் பதில் சொல்ல முடியும்? இப்படி அடுத்தடுத்து கேட்டேன்னா? என்ன சொல்றது?” என்று அவளும் கிண்டலாய் கேட்டாள்.

ஏனோ தோழியின் முகம் தெளிவாய் இருக்க, அதன் பின்னே கவிக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.

அதன் பின் வேந்தன் இருவரையும் அழைத்துக் கொண்டு, அவர்களுடைய பீச் ஹவுசிற்கு சென்றிருந்தான். கவியும், விழியும் அவர்கள் கல்லூரி படிக்கும் போது அடிக்கடி அங்கு வருவார்கள். இப்போது நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்க, இருவருக்குமே கடந்த கால ஞாபகங்கள் தான்.

அதில் கவியும், விழியும் பலவற்றை பேச, வேந்தனோ எப்போதும் போல் அவர்களைப் பார்த்தப்படியே அமர்ந்துவிட்டான்.

அது அவனின் வழக்கம் தான். பெரிதாய் எல்லாம் அவன் அவர்களுக்கு நடுவில் செல்ல மாட்டான். ஆனால் அவர்களை இப்படி பார்த்துக் கொண்டிருப்பதே அவனுக்கு அத்தனைப் பிடிக்கும்.

என்ன? முன்பென்றால், கவியை ரசித்தெல்லாம் பார்க்க மாட்டான். ஆனால் இப்போது அவள் தங்கையின் தோழியாய் மட்டும் அல்லாது, தன்னுடைய மனைவியாகவும் மாறியிருக்க, அவனின் பார்வை மேல் இருந்து கீழ் ரசனையாய் படிந்தது.

அதிலும் அவள் சிரிக்கும் போது அவள் உதட்டோரம் சிறிதாய் விழும் அந்த பள்ளம், அவனை என்னமோ செய்தது.

இப்படியாக அன்றைய தினமும், அடுக்கடுத்த நாளும் அங்குத்தான் தங்கியிருந்தனர். படம் பார்ப்பது, பீச் மணலில் அமர்ந்து கதை பேசுவது, தோட்டத்தில் ஓடி பிடித்து விளையாடுவது என்று நன்றாகவே சென்றது.

விழியின் மனதில் இருந்த வலியை கொஞ்சம் கூட அவள் வெளியில் காட்டியிருக்கவில்லை.

அதிலும் வேந்தனின் கண்ணில், கவியைப் பார்க்கும் போது மின்னும் அந்த காதல் பார்வை, அவளுக்கு சற்று சுவாரஸ்யத்தை கூட்டியது.

அதனால் வேண்டுமென்றே கவியை தன்னுடன் வைத்து விளையாட்டுக் காட்டினாள். ஆனால் அப்போதும் கூட வேந்தனோ, தங்கையின் விருப்பத்துக்கு விட்டு விட்டு அமைதிக் காத்தான்.

அன்றும், வேந்தன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருக்க, சற்று தள்ளி இருந்த ஊஞ்சலில், கவியும், விழியும் அமர்ந்திருந்தனர்.

“ஏன் கவி எனக்கு ஒரு டவுட்?” என்று விழி கேட்க, “என்ன?” என்றவளின் பார்வையும் கூட அடிக்கடி வேந்தனை சுற்றிக் கொண்டுத்தான் இருந்தது.

இப்போது அவள் கையைப் பிடித்து, அதில் இருந்த தேன் சுடர் என்ற டாட்டூவை வருடியப்படி, “உண்மையாவே, இந்த பேரை யார நினைச்சு நீ போட்ட?” என்று கேட்டாள்.

அதில் அவளை முறைத்தவளோ, “எத்தன தடவ சொல்றது? உன் பேரையும், என் பேரையும் சேர்த்துத்தான் டாட்டூ போட்டேன்” என்றாள்.

“ஆனா, நீ என்ன சுடர்ன்னு கூப்டு எனக்கு ஞாபகம் இல்லையே” என்று சீண்டலாய் விழி கேட்க, “ஹேய் நீ கூடத்தான் என்னை தேனுன்னு கூப்பிடுறது இல்ல. டிபரண்டா இருக்கட்டுமேன்னு போட்டேன். அவ்வளவுத்தான்” என்றாள்.

“ஆனா தேனுன்னு என் அண்ணா கூப்பிடுவாங்கத்தான?” என்று விடாது விழி கேட்க, “ச் விழி” என்று அவளை முறைத்தாள்.

“ம்ஹும், நீ என்ன வேணும்னாலும் சொல்லு. எனக்கென்னமோ, உன் மனசுல என் அண்ணா மேல ஒரு விருப்பம் உனக்கு ஆரம்பத்துல இருந்தே இருக்கோன்னு ஒரு டவுட்” என்றாள் விழி.

“ம் அப்படில்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நீயா எதையும் உளறாத” என்று கவி சொல்ல, “சரி அப்போ இல்ல? இப்போ?” என்று கேட்டு அவளைப் பார்த்தாள்.

அதில் கவிக்கோ சட்டென்று என்ன சொல்ல என்று தெரியாத ஒரு நிலை. அதில் அவள் முகம் சிறிதாய் மலர, வெட்கம் வேறு எட்டிப் பார்த்தது.

அதை கன்னத்தில் கை வைத்துப் பார்த்த விழியோ, “என்ன? இப்பவும் ஒன்னுமே இல்லையா?” என்று சீண்டலாய் கேட்டாள்.

“ஆ..ங் இல்லன்னு நான் எப்போ சொன்னேன். அதெல்லாம் இருக்கு” என்று இவளும் சொல்ல, “அப்படியா? என்ன இருக்கு?” என்று மேலும் அவள் சீண்டினாள்.

“ச் விழி. போ. நேரம் ஆச்சு வா போயி தூங்கலாம்” என்று அவள் எழப் போக, அவள் கையைப் பிடித்து மீண்டும் அமர வைத்தவள், “என்ன மேடம்? சொல்லுங்க” என்றாள்.

அதில் ஒரு நொடி வேந்தனைப் பார்த்தாள். பார்த்தவளின் கண்ணில் அப்பட்டமான காதல்.

அதில் அவனைப் பார்த்தப்படியே, “உன் அண்ணா மாதிரி ஒருத்தர எல்லாம் யாருக்காச்சும் பிடிக்காம போகுமா?” என்று கேட்டாள்.

“ச் மத்தவங்கள எல்லாம் விடு. நீ சொல்லு. உனக்கு பிடிச்சிருக்கா?” என்று அவள் அதையே கேட்க, இப்போது விழியைப் பார்த்தவள், “பிடிக்காமலா இப்படி, நீ கூட இருந்தும், அவரை விடாம சைட் அடிச்சிட்டு இருக்கேன்?” என்று கேலியாய் கேட்டு கண்ணடித்தாள்.

“இப்படி சைட் அடிச்சிட்டே இருந்தா ஆச்சா? சீக்கிரமா என் கவி மாதிரி ஒரு குட்டி லட்டுவ எப்போ பெத்துக் கொடுக்கிறதா இருக்க?” என்று கேட்டாள் விழி.

அதில் சட்டென்று இப்போது கவியின் முகமோ வாடியது. ஏனோ கடந்த கால விஷயங்கள் எல்லாம் அவளுக்குள் ஊடுறவ, அப்படியே அமைதியானாள்.

அவள் முக வாட்டத்தைப் பார்த்த விழியோ, “ஹேய் இன்னும் உனக்கென்ன பிரச்சன?” என்று கேட்டாள்.

அதில் கவியோ, “கல்யாணம் ஆகி, ஒரு வருஷம் வேற ஒருத்தர் மனைவியா இருந்திருக்கேன். அப்படி இருக்கிறப்ப, நான் எப்படி சுடருக்கு தகுதியான்னா ஒருத்தியா இருப்பேன்? அதுவும் போக, என்னால அவர் கூட எப்படி ஒரு வாழ்க்கைய வாழ முடியும்?” என்று சொல்லும் போதே அவள் கண்ணெல்லாம் கலங்கியது.

இதற்கு முன் கூட எப்படியோ? ஆனால் இப்போது கவியுடைய அந்த வலியை, விழியால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஏனெனில். அவளும் இப்படி ஒரு நிலையை அவள் வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டுமே.

ஆனாலும் அதை விட்டு விட்டு இப்போது கவியின் கையைப் பிடித்து, “உனக்கு என் அண்ணா மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள்.

“ச் என்ன விழி பேசுற? அவர நம்பாமலா, நான் அவர்கிட்ட என் மனச கொடுப்பேன்? அதெல்லாம் இல்ல. இது வேற மாதிரி” என்றவள் சில நொடி தயங்கி பின், “இத உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. எனக்குமே உன்னை விட்டா சொல்றதுக்கு வேற ஆளும் இல்ல. என்னால உன் அண்ணாக் கூட பிஸிகல்லா ஒரு லைப் லீட் பண்ண முடியாதோன்னு பயமா இருக்கு. ஏன்னா? என் வாழ்க்கையில” என்றவள், இதுவரை யாரிடமும் சொல்லாத தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தோழியிடம் பட்டும் படாமல் கூறினாள்.

ஏனெனில் என்னத்தான் தோழியாக இருந்தாலும், விழி திருமணம் ஆகாத பெண் ஆயிற்றே. அதனால் அதை அவளால் முற்றும் முழுதாய் சொல்ல முடியவில்லை. உண்மையில் அதை வேந்தனை தவிர வேறு யாரிடமும் அவளால் சொல்லவும் முடியாது.

பட்டும் படாமல் கவி சொல்லியதைக் கேட்ட விழிக்கு உடல் சிறு நடக்கத்தை கொடுத்தது. ஏனோ அந்த ஆர்யனின் கொடூர முகம் கண் முன்னே வந்து இம்சித்தது.

அதற்குள் அங்கு வந்த வேந்தன், “என்ன? ரெண்டு பேரும் அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்றப்படி கவியின் அருகில் அமர்ந்தான்.

இருவரும் மற்றவர்களுக்கு தெரியாமல் அவசரமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, இருவருமே அவனின் தோளில் ஆளுக்கு ஒரு பக்கமாய் சாய்ந்துக் கொண்டனர்.

(ஏன்பா வேந்தன்? உன்ன பார்த்தா எனக்கே பாவமாத்தான் இருக்கு? எப்படித்தான் இவங்க ரெண்டு பேரை பழைய விஷயத்துல இருந்து வெளிய கொண்டு வரப் போறீயோ? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   0

*** தேன் – 73 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***