வரம் – 59

பிரின்சிபல் சென்று, அந்த பிஸிக்ஸ் லேப்பின் கதவை திறக்க, அங்கே அர்ஜூனும், அவனுக்கு முன்னே ஒரு பெண் மயங்கி கிடந்தாள். அதில் அத்தனைப் பேரும் அதிர்ச்சியாய் அர்ஜூனைப் பார்த்தனர்.

அதிலும் அர்ஜூன் முகத்தில் அத்தனைப் பதட்டம் தெரிந்திருக்க, அப்பெண்ணின் மீதிருந்த ஷால் வேறு எங்கோ தூக்கி எறியப்பட்டிருந்தது. சட்டென்று யார் பார்த்தாலும், தவறாகவே நினைக்க வைக்கும்.

மாதவ், ஒன்றும் புரியாமல் நிற்க, “அர்ஜூன் இங்க என்னப் பண்ணிட்டிருக்கீங்க?” என்று பிரின்சிபல் கேட்க, “அது வந்து சார்” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே, “சார் முதல்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாத்தையும் அனுப்புங்க சார். பிராபளம் ஆகப் போகுது” என்று ஒரு ஆசிரியர் பிரின்சிபல் காதில் கிசுகிசுத்தார்.

அதற்குள் இதற்காகவே காத்துக் கொண்டிருந்த ரமேஷோ, “மேக்ஸ் ப்ரோபசருக்கு, பிஸிக்ஸ் லேப்ல என்ன வேல சார்? அதுவும் லேப்ப பூட்டிட்டு. அதுவும் ஒரு ஸ்டூடண்ட் கூட தனியா..” என்றவனின் பேச்சில் அர்ஜூனுக்கு சுள்ளென்று கோவம் கூடியது.

அதில் அர்ஜூன், “ஹே” என்று கோவமாய் ஏதோ சொல்லப் போக, அதற்குள், “அவர் ஒன்னும் தனியா இல்லையே சார். நாங்களும் இங்கத்தான் இருக்கோம்” என்றப்படி பூஜாவும், இன்னும் சில மாணவர்களும் அங்கு வந்திருந்தனர்.

அவர்களைப் பார்த்த, ஆதிக்கோ ஒன்னுமே புரியவில்லை. ஏனெனில் அவனின் திட்டப்படி, அந்த ஒரு பெண்ணை மட்டும் தானே அவனுடன் சேர்த்து வைத்து பூட்டினான். ஆனால் பூஜா இங்கு என்ன செய்கிறாள்? அதிலும் இத்தனை மாணவர்கள் இருக்க, அவனோ கோவமாய் வெங்கட்டைப் பார்த்தான்.

அதன் பின்னே மாதவ்க்கு மூச்சே வந்தது. உடனே வேகமாய், “அந்த பொண்னுக்கு என்னாச்சு அர்ஜூன்?” என்று கேட்க, அதன் பின்னே பிரின்சிபலும், நிதானத்துக்கு வந்து, விசாரித்தார்.

அதற்கும் பூஜாத்தான் பதில் கூறினாள். 

“எங்களோட எக்ஸ்பீரீமெண்ட்ல சின்ன கரெக்சன் ஆகிடுச்சி. அத சரி பண்றதுக்காகத்தான் நாங்க எல்லாரும் இங்க வந்தோம். அப்போ இந்த அக்கா மயங்கி விழுந்துட்டாங்க. அதனால நான் தான் அர்ஜூன் சார இங்க கூட்டிட்டு வந்தேன். நாங்க சிக் ரூம் கூட்டிட்டு போறதுக்குள்ள, வெளிய இருந்து யாரோ டோர லாக் பண்ணிட்டாங்க” என்று கூறினாள் பூஜா.

அதில் இப்போது பிஸிக்ஸ் லேப் இன்சார்ஜ்ஜை பிரின்சிபல் பார்க்க, “இல்ல சார். ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் கிரவுண்ட்ல இருந்ததால, நானும் அங்க ஸ்டூடண்ட்ஸ் கூட இருந்தேன்” என்றார்.

“சரி முதல்ல அந்த ஸ்டூடண்ட்க்கு என்னாச்சுன்னு பாருங்க” என்று பிரின்சிபல் சொல்ல, பூங்கொடி ஆசிரியருடன், இன்னும் சிலர் சேர்ந்து அந்தப் பெண்ணை, சிக் ரூமுக்கு அழைத்துச் சென்றனர்.

இப்போது அர்ஜூனோ கரத்தை இறுக்கி மூடி தன் கோவத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். அதற்குள் அங்கு வந்த பிரியாவோ, “ஹேய் நீ இங்கத்தான் இருக்கீயா? வா” என்று அழைத்துக் கொண்டு சென்றாள்.

ஆனால் பூஜாவோ அர்ஜூனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகமே அவன் ஒரு நிலையில் இல்லை என்பதை தெளிவாய் சொல்லியது.

ஆனாலும் கல்லூரியில் வைத்து அவனிடம் மேற்கொண்டு பேச முடியாது என்பதால், அவன் அங்கிருந்து சென்றான். விஷ்வாவோ, இன்னும் கூட அப்படியேத்தான் அமர்ந்திருந்தான்.

இப்போது பிரியாவோ, “ஆமா நீ எதுக்கு பிஸிக்ஸ் லேப்க்கு போன?” என்று கேட்க, “ம் அத விஷ்வாத்தான் சொல்லனும்” என்று சொல்லும் போதே அவளுக்கு அத்தனைக் கோவம் வந்தது.

அதில் பிரியா விஷ்வாவைப் பார்க்க, அவனோ, “இல்ல பூஜா. எனக்கு அது வேற வழி தெரியல” என்று பதட்டமாய் கூறினான்.

“என்ன தெரியல உனக்கு? அவனுங்க மிரட்டுனா, நீ என்ன வேனும்னாலும் பண்ணிடுவீயா? பிரண்ட்ஸ் தான நாங்க. அட்லீஸ்ட் எங்க கிட்டையாச்சும் வந்து சொல்லனும்னு உனக்கு தோணலையா?” என்று கோவமாய் கேட்டாள்.

அவளின் கோவத்தை முதன் முறையாய் பிரியா பார்க்கிறாள், அதில், “ஹே முதல்ல என்ன நடந்திச்சுன்னு சொல்லுங்க” என்றாள்.

“அத அவன்கிட்டையே கேளு” என்று பூஜா கடுப்பாய் சொல்ல, “என்னடா ஆச்சு” என்று பிரியாவும், அவனிடம் கேட்டாள். அதைக் கேட்ட விஷ்வாவோ, “இல்ல அது வந்து. அது” என்றவன் அத்தனை விஷயத்தையும் கடகடவென்று சொல்ல, அதைக் கேட்ட பிரியாவோ, அவனின் கன்னத்தில் பளாரென்று அடித்திருந்தாள்.

அதில் பூஜா, பிரியாவைப் பார்க்க, விஷ்வாவோ, “பிரியா” என்று கன்னத்தில் கை வைக்க, “நீ எல்லாம் பிரண்டா? இதே மாதிரி எங்க ரெண்டு பேர, அவனுங்க எங்கையாச்சும் அனுப்பி வைன்னு சொன்னா, அதையும் பண்ணிடுவீயா?” என்றாள்.

“ஹே என்ன சொல்ற நீ? அதெப்டி?” என்று விஷ்வா பதட்டமாய் கேட்க, “அப்போ அர்ஜூன் சார மட்டும் அனுப்பி வெச்சிருக்க? இதனால அவருக்கு எவ்வளவு பெரிய கெட்டப் பேர் வந்திருக்கும் தெரியுமா?” என்று கேட்டாள் பிரியா.

அவளுக்கோ, இந்த விஷ்வாவுடைய கோழைத்தனம் அத்தனை எரிச்சலைக் கொடுத்தது. பூஜாவுக்கோ, அர்ஜூனுக்கு மட்டும் சின்னதாய் பிரச்சனை வந்திருந்தால் கூட, இப்போது விஷ்வாவில் ஆரம்பித்து அத்தனைப் பேரையும் பிரின்சிபல் அறையில் கொண்டு நிறுத்தியிருப்பாள்.

“இல்ல அவங்கத்தான். அது நான் ஒரு மாதிரி ரொம்ப பயந்துட்டேன்” என்று விஷ்வா சொல்ல, இப்போது பூஜாவோ, “இப்போ அவனுங்க எங்க?” என்று கோவமாய் கேட்டாள்.

அதில் இப்போது பிரியாவோ, “ஹேய் எதுனாலும் அத நம்ம அர்ஜூன் சார்ட்ட, இல்லன்னா உன் அண்ணாக்கிட்ட சொல்லலாம்” என்றாள்.

“ம்ஹூம். இதுக்கப்புறமா நம்ம இதப் போயி சொன்னா, தேவையில்லாத குழப்பம் தான் வரும்” என்று பூஜா சொல்ல, “அப்போ?” என்றாள் பிரியா.

“ம். விஷ்வாவ அந்த வீடியோவ வச்சித்தான மிரட்டுனானுங்க. இப்போ நம்மளும் அதே வீடியோவ வச்சே அவனுங்கள மாட்டி விடலாம்” என்றாள் பூஜா.

“ஹேய் தேவையில்லாத பிரச்சன ஆகிடப் போது பூஜா. அதுவும் போக, அவனுங்க, எவ்வளவு மோசமானவங்களா இருந்தா, அர்ஜூன் சாரையே இப்படி மாட்ட வைக்க ட்ரைப் பண்ணியிருப்பானுங்க” என்றாள் பிரியா.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இப்போ நீங்க உங்க ஸ்டாலுக்கு போங்க” என்றாள் பூஜா.

“நீ எங்கப் போற?” என்று விஷ்வா கேட்க, பூஜாவோ அவனிடம் பேச மறுத்தாள். அதில் அவனோ, “ப்ளீஸ் பூஜா. ஐயம் சாரி. பிராமிஸா இதுக்கப்புறம்” என்று விஷ்வா சொல்லப் போக, அவளோ அதைக் கேட்காது அங்கிருந்து சென்று விட்டாள்.

அதில் விஷ்வாவோ கவலையாய் பிரியாவைப் பார்க்க, “எனக்குமே உன் மேல அவ்ளோ கோவம் தான். ஆனாலும் பிரண்டா போயிட்டீயேன்னு பாக்குறேன்” என்றாள்.

“இல்ல பிரியா. அது நான்” என்று சொல்லும் போதே, இன்னும் சில மாணவர்கள் அங்கு வந்து விட, அவர்களும் அவர்களுடைய ஸ்டாலுக்குச் சென்றனர்.

அங்கே அத்தனை இறுக்கமாய் இருந்த அர்ஜூனைப் பார்த்த மாதவ்வோ, “என்னாச்சுடா? ஏன் இப்போ நீ இப்படி இருக்க?” என்று கேட்டான்.

அவனோ எதுவுமே பேசாது அப்படியே இருக்க, “டேய் அந்த ரமேஷ் பேசுனத எல்லாம் பெருசா எடுத்துக்காதடா. அவனுக்கு உன் மேல ஏற்கனவே பொறாமை. அதான், அந்த கடுப்புல அவன் லூசு மாதிரி பேசிட்டான்” என்றான்.

அப்போதும் அர்ஜூன் அப்படியே இருக்க, இப்போது பிரின்சிபல் அர்ஜூனை அழைத்தார்.

ஆனால் அர்ஜூனோ, அவரைப் பார்க்க செல்லாது, அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வந்தான்.

அவனுக்கு அத்தனைக் கோவம். நொடி நேரமாக இருந்தாலும், மற்றவர்கள் அவனைப் பார்த்தப் பார்வையை அத்தனை எளிதாய் அவனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த ஏளனம், கேலி, கிண்டல், அவமானம் இதெல்லாத்தையும் பார்க்கவே கூடாது என்றுத்தான் அவன் ஊரை விட்டு விட்டு, இப்படி இங்கேயே தங்கியிருக்கிறான். சிறு வயதில் இருந்து அவன் தந்தையால், அவனை ஏளனப்படுத்திப் பார்த்தார்கள்.

இப்போது அவன் பார்க்கும் வேலையில் ஏற்பட்ட இழுக்கை அவனால் அத்தனை சுலபமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“டேய் பிரின்சிபல் கூப்பிடுறார்ரா?” என்று மாதவ் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்டிருக்கவில்லை.

அதற்குள் மாதவ் அவரைப் பார்க்க செல்ல, இப்போது ரமேஷை பிரின்சிபால் திட்டிக் கொண்டிருந்தார்.

“என்ன ரமேஷ் இதெல்லாம்? உங்களுக்கும், அவருக்கும் தனிப்பட்ட பிரச்சன இருந்தா, அத உங்களுக்குள்ள வெச்சுக்கோங்க. ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி இப்படித்தான் பேசுவீங்களா?” என்று கோவமாய் கேட்டார் பிரின்சிபால்.

“ஆ..ங் இல்ல சார். அங்க அப்படி பார்த்ததும், அது” என்று ரமேஷ் ஏதோ சொல்லப் போக, “ஐஸ்ட் ஸ்டாப் இட் ரமேஷ். அர்ஜூன்ன உங்களுக்கு எத்தன வருஷமா தெரியும்? அர்ஜூன நான் காலேஜ் படிக்கிற காலத்துல இருந்து பாக்குறேன். அவர மாதிரி ஒரு ஒபிடியண்ட் பர்ஷன்ஸ பார்க்கவே முடியாது. சோ இந்த மாதிரி லூஸ் டாக் பேசுறத எல்லாம் இதோட விட்டுடுங்க. இல்லன்னா காலேஜ்ஜ விட்டே அனுப்பிடுவேன். பிகாஸ் ஸ்டூடண்ட்ஸ் நம்மள பாத்துத்தான் கத்துப்பாங்க” என்று திட்டியிருந்தார்.

“இல்ல சார். சாரி சார்” என்று ரமேஷ் சொல்ல, “இத நீங்க மிஸ்டர்.அர்ஜூன் கிட்டத்தான் கேட்கனும்” என்று அவர் சொல்ல, அதற்குள் மாதவ், “எக்ஸ் கியூஸ் மீ சார்” என்றான்.

அதில், “உள்ள வாங்க மாதவ். அர்ஜூன் எங்க?” என்று கேட்க, “இல்ல சார். ஹெட்டேக்கா இருக்குன்னு, பர்மிஷன் சொல்லிட்டு கிளம்பிட்டாரு” என்றான்.

அதில் பிரின்சிபல் மாதவ்வை கேள்வியாய் பார்த்தார். அர்ஜூனைப் பற்றி அவருக்கு தெரியும். செய்யாத தவறுக்கு நொடி நேர தண்டனையைக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். இப்போதும் கோவத்தில் தான் சென்றிருப்பான் என்று அவருக்கு புரிந்தது. இத்தனை ஏன் நாளைக்கே அவனுடைய ரிசைன் லெட்டரை எடுத்து நீட்டினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அதில் ரமேஷை அனுப்பி விட்டு, மாதவ்விடம், “அர்ஜூன்கிட்ட பேசிப் பாரு மாதவ்” என்று கூறினார்.

அதே நேரம் அங்கே ஆதியோ, வெங்கட்டிடம், “எப்படிடா என் பிளான் மிஸ் ஆச்சி?” என்று கோவமாய் கேட்டான்.

“எனக்கென்னவோ, அந்த விஷ்வாத்தான்” என்று ஆரம்பிக்கும் போதே அவனின் சட்டையைப் பிடித்தவன், “இத சொல்றதுக்குத்தான் நீ என் கூட இருக்கீயா? அப்பவே நீ அவென்ன பாத்துருக்க வேண்டியதுத்தான” என்று கோவமாய் கேட்டான்.

“இல்ல. கண்டிப்பா அந்த விஷ்வாக்கு, நான் யாருன்னு காமிக்கிறேன்” என்றான் வெங்கட்.

“இல்ல அந்த அர்ஜூன்ன இத விட பெருசா எதுலையாச்சு மாட்டிவிடனும்” என்று அத்தனை குரோதமாய் சொல்லிக் கொண்டான் ஆதித்யா.

இங்கே பூஜாவோ அர்ஜூனைத்தான் தேடிக் கொண்டிருந்தாள். அவன் தான் கல்லூரியிலேயே இல்லையே. கிட்ட தட்ட கார்னிவல் முடியும் நேரம் நெருங்கியிருக்க, மாதவ்வைப் பார்த்தவள், “அண்னா. அவரு எங்க?” என்றாள்.

“அவன் அப்பவே வீட்டுக்கு கெளம்பிட்டாம்மா. நீ என் கூட” என்று மாதவ் சொல்லி முடிக்கும் முன்னே, அவள் அங்கிருந்து சென்றிருந்தாள்.

ஏனோ அர்ஜூனை தனியே விட அவள் மனம் சம்மதிக்கவில்லை. இப்போதே அவனைப் பார்க்க சொல்லி மனம் அடம்பிடிக்க, யாரிடமும் சொல்லாது ஆட்டோ பிடித்து வீட்டுக்கு கிளம்பியிருந்தாள் பூஜா.

(அர்ஜூன் வீட்டுக்குத்தான் சென்றானா? பூஜா அவனை சமாதானப்படுத்துவாளா? ம் எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   9

*** வரம் – 59 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***