வரம் – 11

அர்ஜூனைப் பார்த்து வேகமாய் ஓடி வந்த பூஜா மூச்சு வாங்க “சரி சரி வாங்க போலாம்” என்றாள். அவள் ஓடி வந்ததைப் பார்த்த விஷ்வாவும், பிரியாவும், “ஹேய் என்னாச்சு. இப்போ எதுக்கு இப்படி ஓடி வர்ற” என்றனர்.

“அது, ஒரு பையன்ன அடிச்சிட்டேன். அதான் அவன் துரத்திட்டு வர்றான்” என்று பூஜா சொல்ல, “என்னது அடிச்சிட்டீயா? யார” என்று பிரியா பதட்டமாய் கேட்க, “யாருக்கு தெரியும். நீங்க வாங்க நம்ம கிளாஸுக்கு போயிடலாம்” என்றப்படி அவர்களையும் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள்.

அவர்கள் வகுப்பறைக்கு முன் மூச்சு வாங்க நின்றவளோ, ஒரு நொடி வெளியில் எட்டிப் பார்த்தாள். இங்கே அவளின் பின்னே மூச்சு வாங்கியப்படி வந்த விஷ்வாவும் பிரியாவும் கூட அவளுடன் சேர்ந்து யாரும் வருகிறார்களா? என்றுப் பார்த்தனர்.

பின் பிரியாவோ, “ஹேய், வந்தவுடனே ஏதோ புரோபசர்கிட்ட வம்பு பண்ணேன்னு சொன்ன. இப்போ என்னென்னா யாரையோ அடிச்சிட்டேன்னு சொல்ற?” என்று மூச்சு வாங்கியப்படியே கேட்டாள் பிரியா.

“அது. இன்னிக்கு கொஞ்சம் டைம் சரியில்லன்னு நினைக்கிறேன்” என்று அவள் சொல்ல, “யாருக்கு? அந்தப் பையனுக்கா?” என்று கேட்டான் விஷ்வா.

அதற்குள்ளாக, பூஜாவோ வகுப்பிற்குள் நுழைந்திருக்க, பிரியாவோ, “அவ கேட்கிற எதுக்காச்சும் பதில் சொல்றாளா பாரு” என்றாள்.

“சரி வா” என்று பூஜாவுடனே இவர்கள் இருவரும் செல்ல, அங்கே இவர்களுக்காகவே கடைசியாய் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் சென்றமர்ந்தாள் பூஜா. விஷ்வா வேறு பக்கம் செல்ல முயல, “ச் அங்க எங்கப் போற. ஒழுங்கா இங்க வந்து உட்காரு” என்று தன்னருகிலேயே பிடித்து அமர வைத்தாள்.

பிரியாவோ, “யாரையோ அடிச்சேன்னு சொன்னீயே? எதுக்கு அடிச்ச?” என்று கேட்டாள்.

“ஆ..ங் அழகா இருந்தான் அதான் அடிச்சேன்” என்று இவள் சொல்ல, அதில் விஷ்வாவும் பிரியாவும், “ஹேய் அழகா இருந்தா அடிப்பீயா?” என்று குழப்பமாய் கேட்டனர்.

“ஆமா அழகா இருந்தாத்தான சைட்டடிக்க முடியும்?” என்று அவள் கேட்க, “எதே?” என்று இருவரும் ஒரே நேரத்தில் அவளைப் பார்க்க, அவளோ இப்போது குறும்பாய் அவர்களைப் பார்த்து புருவம் உயர்த்தி கண் சிமிட்டினாள்.

அப்போதே அவள் சொல்லிய அர்த்தம் புரிய, “அடிப்பாவி. கொஞ்ச நேரத்துல எங்கள பயமுறுத்துட்டீயே. உன்ன” என்று பிரியா அவளை விளையாட்டாய் அடித்தாள்.

“ஐயோ சாரு” என்று அவள் கத்த, “என்ன” என்று பிரியா அதிர்ந்து சமத்தாய் அமர, ஈவன் பூஜா கத்திய கத்தலில், அங்கிருந்தவர்கள் கூட ஒரு நொடி அமைதியாகியிருந்தனர்.

ஆனால் எந்த சாரும் வராமல் இருக்க, இப்போது அத்தனைப் பேரும் அவளைப் பார்த்தனர்.

“அட என்னப்பா? சாருன்னுத்தான சொன்னேன். இங்க வந்தாருன்னு சொல்லவே இல்லையே” என்று எழுந்து நின்று அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்களோ, அவளை புரியாது பார்த்தனர்.

அதற்குள் “ஹேய் என்னப்பா? ஜோக் சொன்னதுக்கு, இப்படி எல்லாரும் சீரியஸ் மூட்ல பாக்குறீங்க? நான் வேணும்னா அப்போ இன்னொரு கடி ஜோக் சொல்லட்டா?” என்று கேட்டு அழகாய் சிரித்தாள் பூஜா.

அவள் பேச்சில், அங்கிருப்பவர்களில் சிலர் சிரிக்க, இன்னும் சிலரோ மீண்டும் தங்கள் வேலையை தொடர்வது போல் மொபைலில் மூழ்கினர்.

அதைப் பார்த்தவளோ, அங்கிருந்த டேபிளில் ஒரு அடி அடித்து மீண்டும் அவர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பினாள். 

“ஹே பூஜா என்னப் பண்ற” என்று பிரியா அவளை அமர வைக்க முயற்சிக்க, அவளோ, அதை சற்றும் காதில் வாங்காது, “ஹாய் பிரண்ட்ஸ். என்னோட பேர் பூஜா. அப்புறம் இவ பிரியா. அவன் விஷ்வா. நாங்க மூணு பேரும் பெஸ்ட் பிரண்ட்ஸ். இனிமே நம்ம எல்லாரும்மே இங்கத்தான் மூனு வருஷம் இருக்கப் போறோம். சார் வந்து, அவர் கேட்டு நம்மளாம் இண்ட்ரோ ஆகுறதுக்கு முன்னாடி, நம்மளே நம்மள பத்தி ஒரு இண்ட்ரோ கொடுத்துக்கிட்டா, பெட்டர்த்தான” என்றாள்.

அதில் ஒரு நொடி அந்த வகுப்பறையே அமைதியாய் இருக்க, ஆனால் அடுத்த சில நொடியில் ஒவ்வொருவராய் எழுந்து, தங்களுடைய பெயரை கூறினர். இப்போது மொபைலில் மூழ்காது, தங்களுக்குள் மாற்றி மாற்றி பேசிக் கொள்ள, பூஜாவிடமும் பலர் பேசினர். 

ஆனால் அவளோ, பிரியா, விஷ்வாவிடம் தான் ஒட்டிக் கொண்டாள். அதில் பிரியாவோ, “ஹேய் நீ எப்பவுமே இப்படித்தானா? இல்ல காலேஜுக்கு வந்தா மட்டும் இப்படியா?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டு இன்னும் அழகாய் சிரித்தவள், “ம் நீயே கண்டுப்பிடியேன்” என்று சொல்லிவிட்டு வேகமாய் தன்னுடைய பேக்கில் இருந்து எதையோ எடுத்தாள்.

அதில் விஷ்வா, “என்ன? அதுக்குள்ள படிக்கப் போறீயா என்ன?” என்று கேட்டான். “க்கும் காலேஜ் பர்ஸ்ட் டேவே படிக்கிறவனும், எக்ஸாம் முடிஞ்சும் கொஸ்டீன் பேப்பரோட சுத்துனவனும், நல்லா வாழ்ந்ததா சரித்தரமே கிடையாது” என்று நக்கலாய் கூறினாள்.

அவள் பேச்சில் விஷ்வா சிரிக்க, பிரியாவோ, “எங்க இருந்து, நீ இந்த மாதிரி லைன்ல எல்லாம் பிடிக்கிற” என்றாள்.

“அதெல்லாம் மேனுபெக்சரிங் டிபெக்ட். ஆட்டோமேட்டிக்கா வரும்” என்று சொல்லியப்படி, காம்பஸை எடுத்து, அதில் பிவிபி என்று அந்த மேஜையில் வந்த அன்றே அடையாளம் போட்டாள்.

சட்டென்று அங்கே அப்படி ஒரு பேரமைதி. அதில் பூஜா மட்டும் அல்லாது பிரியாவும், விஷ்வாவுமே நிமிர்ந்துப் பார்க்க, அங்கே பிரின்சிபல் வந்துக் கொண்டிருக்க, அவளைத் தவிர்த்து மீதி அத்தனைப் பேரின் முகத்திலும் மெல்லிய பதட்டம்.

ஆனால் அவரோ வழக்கமான ஒரு இண்ட்ரோவை கொடுத்து விட்டு, அந்த வகுப்பு ஆசிரியர் யார் என்றும் அறிமுகப்படுத்தினார்.

அதைப் பார்த்த பூஜாவோ, “என்ன பிரியா? ஏதோ ஐடி கம்பெனியில மேனஜர் யாருன்னு நியூ ஜாயினிக்கு இண்ட்ரோ கொடுக்கிற மாதிரி கொடுக்கிறாங்க” என்று கிண்டலாய் கேட்டாள்.

“ஹேய் வாய மூடு. ப்ரின்சிக்கு கேட்டுட போது” என்ரு பிரியா சொல்ல, பூஜாவோ, சட்டென்று எழுந்து, “ஹாய் சார். எனக்கு ஒரு டவுட்” என்றாள்.

அவளின் செயலில், பிரியாவும், விஷ்வாவும் அதிர்ச்சியாக, ஆசிரியரே அவளை சற்று வினோதமாய்த்தான் பார்த்தார். இருந்தும் பிரின்சிபல் முன்னிலையில் அவள் கேட்கவும், வேறு வழியின்றி, “இன்னும் பாடமே எடுக்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள டவுட்டா? ம் கேளும்மா. என்ன டவுட்?” என்றார்.

“எங்கள எல்லாம் பார்த்தா, ரவுடி ஸ்டூடண்ட்ஸ் மாதிரி தெரியுதா சார்?” என்று கேட்டாள். அவளின் கேள்வியில், பிரியாவும், விஷ்வாவும் முழிக்க, பிரின்சிபலே, குழம்பி அவளைப் பார்க்க, அந்த ஆசிரியரோ, “அப்படில்லாம் இல்லையேம்மா” என்றார்.

“அப்புறம் எதுக்கு சார்? எங்கள பாக்குறதுக்கு பிரின்சிபல் சார எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று கிண்டலாய் கேட்டாள்.

அவளின் கிண்டலில், பிரியாவோ, “ஹேய் பூஜா. முன்னாடி நிக்கிறது பிரின்சிபல்” என்று நினைவுப்படுத்தினாள்.

சுற்றி இருந்தவர்களும் கூட ஒரு வித பதட்டத்தோடு பார்க்க, ஆனால் பிரின்சிபல்லோ சட்டென்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

அவர் அப்படி சிரிப்பதை, அங்கிருந்த ஆசிரியர்களே சற்று வித்தியாசமாய்த்தான் பார்த்தனர்.

“சரித்தான். சார். இனிமே நீங்களே கிளாஸ பாத்துக்கோங்க” என்று சொல்லிய பிரின்சிபல் அங்கிருந்து சென்று விட, இப்போது அந்த ஆசிரியரோ, அவளைப் பார்த்தார்.

“ஒகே சிட்டவுன்” என்று அவர் சொல்ல, “பட் நீங்க ஆன்சர் பண்ணவே இல்லையே” என்ற பூஜாவை பிரியாத்தான் இழுத்துப் பிடித்து அமர வைத்தாள்.

அவரோ, “இப்ப உள்ள பசங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான். சரி முதல் நாள் அப்படின்றதால, உங்கள நீங்களே இண்ட்ரோ பண்ணிக்கோங்க” என்றவர் வழக்கமான கிளாஸை ஆரம்பித்தார்.

இங்கே அர்ஜூன் தான் ஸ்டாப் ரூமை விட்டு நகர மாட்டேன் என்பது போல் அமர்ந்திருந்தான். அவனுக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது? அவள் அவனிடம் உரிமை எடுத்தாலும் என்னவோ போல் இருக்கிறது. விலகி சென்றாலும் கோவம் வருகிறது. அவனுக்கே அவன் மனம் என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. அத்தனைக் குழப்பம்.

“என்னாச்சு? நீ இன்னும் கிளாஸுக்கு போகலையா?” என்று மாதவன் கேட்க, அவனை முறைத்தவன், “உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும், என்கிட்ட வந்து என்னப் பண்ணிட்டிருக்கன்னு கேட்கிறதுத்தான் வேலையா?” என்று கோவமாய் கேட்டான்.

அவனின் கோவத்தில் இவனோ, “சரி சரி இன்னிக்கு நீ நல்ல மூட்லத்தான் இருக்கப் போல. நான் கிளாஸுக்கு போறேன்” என்றவன் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

“டேய் நீ கையில எடுத்துட்டு போறது, ஸ்டோரி புக்” என்று அர்ஜூன் சொல்ல, அதன் பின்னே அவன் அதைப் பார்த்தான்.

“ஐயோ இது எப்படி என் கையில வந்துச்சு?” என்று குழப்பமாய் யோசித்தவன் பின், “எந்த புக்கா இருந்தா என்ன அர்ஜூன் சார்? இன்னிக்கு பர்ஸ்ட் டேத்தான சும்மா போயி ஒரு இண்ட்ரோ கொடுத்துட்டு வரப் போறேன்” என்றான்.

அதில் அவனை இன்னுமே முறைத்தவனோ, “பர்ஸ்ட் இம்ப்ரஸன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஸன். நீ இன்னிக்கு எப்படி உன் ஸ்டூடண்ட் முன்னாடி புரோஜக்ட் ஆகுறீயோ? அப்படித்தான், இந்த வருஷம் புல்லா அவங்க உன்ன பார்ப்பாங்க. அதனால, ஒரு புரோபசர் மாதிரி போ. ஏதோ ரோட்டுல பானிபூரி விக்கிறவன் மாதிரி போகாத” என்று திட்டினான்.

“எதே? புரோபசர் மாதிரி போகனுமா? என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? அந்தப் பொண்னு என்னென்னா, என்ன பாத்தா புரோபசர் மாதிரியே தெரியலங்க்றா. நீ என்னென்னா, புரோபசர் மாதிரி போன்னு சொல்ற. ஏன் இந்த மூஞ்சி எல்லாம் புரோப்சர் லுக்ல இல்லையா?” என்று அங்கிருந்த கபோர்ட் கண்ணாடியைப் பார்த்துக் கேட்டான்.

சட்டென்று அர்ஜூனுக்கு, சற்று முன், பூஜா அவனை நெருங்கி, அவன் சட்டைப் பட்டனை போட்டு விட்டு, “இப்பத்தான் புரோபசர் லுக் கரெக்டா இருக்கு” என்று சொல்லியது நினைவில் வர அன்னிட்சையாய் அவனுக்கு கோவம் வந்தது.

“சிட் இப்படி நின்னு யோசிச்சா, தேவையில்லாத விஷயம் தான் ஞாபகம் வரும். இட்ஸ் பெட்டர் கிளாஸ் எடுக்கப் போகலாம்” என்று நினைத்தப்படி அவன் அங்கிருந்து கிளம்பினான்.

அங்கே ஒவ்வொரு ஆசிரியரும், அன்று வந்து பெயருக்கு இண்ட்ரோ கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

அதனால் அனைத்து கிளாஸுமே ஒரு வித சத்தத்துடனும், கூச்சலுடனும் இருக்க, அதை எல்லாம் பார்த்தப்படித்தான் அவனுடைய வகுப்பிற்கு நடந்தான். அங்கே ஒரே ஒரு கிளாஸ் மட்டும் அத்தனை அமைதியாய் இருந்தது.

அதில் அந்த வகுப்பை கடந்து செல்ல நினைத்தவன், பின் சற்று புருவம் உயர்த்தி அந்த வகுப்பை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவன் அடி எடுத்து வைத்த நேரம், “டொப்” என்ற சத்தத்துடன், ஏதோ வெடிக்க, அங்கிருந்த அத்தனைப் பேரின் மீதும் ஜிகுனா பேப்பரும், சாப்பீஸ் தூளும் கொட்டியது. அதில் மாணவர்கள் அத்தனைப் பேரும், கத்தி ஆர்ப்பாட்டம் போட, அந்த கிளாஸே புகை மயமாய் இருந்தது.

அதில் அர்ஜூன் மட்டும் அல்லாது, அக்கம், பக்கம் இருந்த ஆசிரியர்கள் அத்தனைப் பேருமே அந்த கிளாஸுக்கு வந்து, அங்கு என்ன நடக்கிறது என்று புரியாது பார்க்க, அந்த புகை மயத்துக்கு மத்தியில் இருந்து வெளியில் வந்தாள் பூஜா.

அங்கேயும் தன் தர்மபத்னியை எதிர்பார்க்காத அர்ஜூன் அதிர்ச்சியும். ஒரு வித பதட்டமுமாய் அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் எல்லாம் சாப்பீஸ் தூள்கள் ஒட்டியிருக்க, அவள் மேல் எல்லாம் ஜிகுனா பேப்பரும், நோட் பேப்பரும் மின்ன, அத்தனைப் பேரும் அவளைத்தான் பார்த்தனர்.

(ஏன்மா பூஜா வந்த முத நாளே, கிளாஸ் ரூம்ல பாம் வெடிக்க வைக்கிற. ரொம்ப நல்லா இருக்கு. அந்த ஸ்ட்ரிக்ட் வாத்திக்கு ஏத்த கரெக்ட் ஜோடித்தான். ஆக்சிவலி சைட்ல கொஞ்சம் மினி ஒர்க்ஸ் இருந்துச்சு. அதான். யெஸ்டர்டே அப்டேட் பண்ண முடியல. இனி டெய்லியும் வந்துடும். பட் ஒரு எபிசோட் தான். இன்னும் ஒரு வாரத்துக்கு வரும். அதுக்கப்புறம் ரெண்டு எபிசொட் அப்டேட் பண்றேன். சரி இன்னும் என்னெல்லாம் நடக்கப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   13

*** வரம் – 11 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***